என் மலர்
விளையாட்டு
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த பெண்கள் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) - 25-வது இடத்தில் உள்ள கரோலினா முச்கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.
இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்லே பார்டி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். முச்கோவா 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்லேவை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
கரோலினா முச்கோவா அரை இறுதியில் 22-ம் நிலை வீராங்கனையான ஜெனிபர் பிராடியுடன் (அமெரிக்கா) மோதுகிறார்.
பிராடி கால் இறுதியில் 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த ஜெசிகா பெகுலாவை தோற்கடித்தார்.
மற்றொரு அரை இறுதியில் நவோமி வசோகா (ஜப்பான்)- செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்)- 5-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த மெட்வதேவ்- ருப்லேவ் மோதுகிறார்கள்.
சென்னை:
இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியிடம் 227 ரன் வித்தியாசத்தில் தோற்றதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் மூலம் 4 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 5-வது மிகப் பெரிய ரன் வித்தியாச வெற்றி இதுவாகும். 2015-ம் ஆண்டு டெல்லியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 337 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே முதல் நிலையாக இருக்கிறது.
இந்த வெற்றி மூலம் விராட் கோலியின் அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வியால் இங்கிலாந்து அணி 4-ம் இடத்தில் பின் தங்கியது.
இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு சென்னையை சேர்ந்த அஸ்வின் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்டார்.
96 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் சதம் அடித்தும் (106 ரன்) சாதித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
தனது முதல் டெஸ்டில் விளையாடிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார். அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 9-வது வீரர் என்ற பெயருமையை அவர் பெற்றார்.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் 21-வது வெற்றியை பெற்றது. இதன் மூலம் அவர் டோனியின் சாதனையை சமன் செய்தார்.
இங்கிலாந்தை வீழ்த்தியது குறித்து விராட் கோலி கூறும்போது, ‘‘நாங்கள் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை பெற்றோம். அஸ்வின், அக்ஷர் பட்டேல், ரிஷப் பண்ட் ஆகியோரது பணி பாராட்டுக்குரியது. இந்த டெஸ்டில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கவில்லை’’ என்றார்.
தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கூறியதாவது:-
2-வது டெஸ்டில் விளையாடிய சேப்பாக்கம் ஆடுகளம் சவாலாக இருந்தது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் அதுதான் எங்களது தோல்விக்கு உத்தரவாதமாக இருந்தது என்று சொல்ல மாட்டேன்.
இந்த தோல்வி மூலம் நாங்கள் பல விஷயங்களை பாடமாக கற்றுள்ளோம். இந்த தோல்வியோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. நாங்கள் எழுச்சி பெற்று வலிமையுடன் மீண்டு வருவோம்.
இந்த டெஸ்டில் இந்திய அணி எங்களை அனைத்து துறையிலும் வீழ்த்திவிட்டது. பாராட்டு எல்லாம் இந்திய அணியை சாரும்.
இவ்வாறு ஜோரூட் கூறினார்.
இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த சீசனில் புதிய பெயருடன் களம் இறங்க உள்ளது.
இதுதொடர்பாக, அந்த அணியின் இணை உரிமையாளர் மொஹித் பர்மன் கூறுகையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இனிமேல் ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று அழைக்கப்படும். அணிக்கு புதிய தோற்றம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன.
இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி நாட்டின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் விளையாடினர்.
இந்தப் போட்டியின் முதல் செட்டை கடுமையாகப் போராடி அலெக்சாண்டர் 6-7(6) கைப்பற்றினார். ஆனாலும், அடுத்தடுத்த செட்களை கைப்பற்றிய ஜோகோவிச் போட்டியில் வெற்றி பெற்றார்.
ஏறக்குறைய 3 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் 6-7(6), 6-2, 6-4, 7-6(8) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அறிமுக வீரராக விளையாடிய அஸ்லான் கரத்சேவ் உடன் அடுத்த போட்டியில் விளையாடுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 29-வது முறையாக ஐந்து விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சில் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் சதம் விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 5-வது சதத்தைப் பதிவு செய்தார். சொந்த மண்ணில் சதம் விளாசுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் சதத்தையும் பதிவு செய்தார்.
அஸ்வின் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் சதம் விளாசுவது இது மூன்றாவது முறை ஆகும். இந்த சாதனையை ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் 2 இன்னிங்சிலும் சேர்த்து 119 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்நிலையில், என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என தமிழக வீரர் அஸ்வின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை விரும்பிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.






