search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பன்ட்
    X
    ரிஷப் பன்ட்

    2வது டெஸ்ட்- முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களில் ஆல் அவுட்

    சென்னையில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்குடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது.அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, 161 ரன்கள் குவித்தார். ரகானே 67 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்தது. அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அரை சதம் கடந்த ரிஷப் பன்ட், தொடர்ந்து நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. 96வது ஓவரில் குல்தீப் யாதவ் (0), முகமது சிராஜ் (4) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஷப் பன்ட் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஓலி ஸ்டோன் 3 விக்கெட், ஜேக் லீச் 2 விக்கெட், ஜோ ரூட் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. துவக்க வீரர் ரோரி பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் டாம் சிப்லி, லாரன்ஸ் இருவரும் நிதானமாக ஆடினர்.
    Next Story
    ×