என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளிலுமே சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் முதல் வெற்றியை எந்த அணி பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சுசாம்சன், பென்ஸ்டோக்ஸ், பட்லர், கிறிஸ்மேரிஸ், ராகுல் திவேதியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க்அகர்வால், கிறிஸ்கெய்ல், நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

    கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் ராகுலும், அகர்வாலும் அபாரமான அதிரடியை வெளிப்படுத்தினார்கள். அதே போல் இந்த சீசனிலும் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். பனித்துளி காரணமாக 2-வது பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரு அணிகளும் இதுவரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் ராஜஸ்தான் 12-ல், பஞ்சாப் 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.

    ஐபிஎல் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    மும்பை:

    உலகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் வருமானம் கொட்டுவது ஐ.பி.எல். போட்டியில்தான். இதில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகின்றன.

    கொரோனா பரவல் இருந்த போதிலும் இந்த போட்டியை கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடத்தி முடித்தது.

    இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இதனால்தான் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தற்போது 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் ரூ.3,600 கோடி முதல் ரூ.3,800 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

    அந்த நிறுவனம் 10 வினாடிக்கு விளம்பர கட்டணமாக ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை பெறுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை விட 14 முதல் 15 சதவீதம் அதிகமாகும்.

    ஆண்டுக்கு ஆண்டு ஐ.பி.எல். போட்டியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதனால் விளம்பர கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இந்த போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விளம்பரங்கள் வழியாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றன.

    சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9-ந் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது.

    2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது.

    3-வது லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் நிதிஷ்ரானா 56 பந்தில் 80 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), ராகுல் திரிபாதி 29 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), திணேஷ்கார்த்திக் 9 பந்தில் 22 ரன்னும் (2 பவுண்டரி , 1 சிக்சர்) எடுத்தனர். ரஷீத்கான்,முகமது தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஐதராபாத் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 10 ரன்னில் வெற்றி பெற்றது.

    மனிஷ்பாண்டே அதிக பட்சமாக 44 பந்தில் 61 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பேர்ஸ்டோவ் 40 பந்தில் 55 ரன்னும் ( 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    கொல்கத்தா அணி தரப்பில் பிரதிஷ்கிருஷ்ணா 2 விக்கெட்டும், சகீப்-அல்-ஹச ன், கும்மின்ஸ் , ஆந்த்ரே ரஸல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும். 193 ஆட்டத்தில் விளையாடி அந்த அணி இந்த வெற்றியை பெற்று சாதித்தது.

    நேரடியாக 99 வெற்றியையும், சூப்பர் ஓவரில் 1 வெற்றியையும் ஆக மொத்தம் 100 வெற்றிகளை பெற்றது. 93 ஆட்டத்தில் தோற்று இருந்தது.

    ஐ.பி.எல். போட்டியில் 100-வது வெற்றியை பெற்ற 3-வது அணி என்ற சாதனையை கொல்கத்தா படைத்தது. மும்பை இந்தியன்ஸ் 118 ஆட்டங்களிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 106 போட்டிகளிலும் வெற்றி பெற்று முறையே முதல் 2 இடங்களில் உள்ளன.

    100-வது வெற்றியை பெற்ற கொல்கத்தா அணிக்கு அதன் உரிமையாளரும், பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் ‘‘ 100-வது வெற்றியை பெற்றது சிறப்பானது. இதற்காக வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை சென்னையில் நாளை எதிர்கொள்கிறது.

    ஐதராபாத் அணி 2-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 14-ந் தேதி சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்குவதாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
    மும்பை:

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி: நடப்பு ஐ.பி.எல். தொடரில் எந்த அணிக்கு எதிராக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர் நோக்குகிறீர்கள்?

    பதில்: சென்னை சூப்பர் கிங்ஸ்.

    கேள்வி: இந்த ஐ.பி.எல்.-ல் உங்களது தனிப்பட்ட இலக்கு என்ன?

    பதில்: கோப்பையை வெல்ல வேண்டும்.

    கேள்வி: ஐ.பி.எல்.-ல் எந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

    பதில்: ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை (இந்த வகையில் கிறிஸ் கெய்ல் ஒரு இன்னிங்சில் 17 சிக்சர் விளாசியதே சாதனையாக உள்ளது) நிகழ்த்த வேண்டும்.

    கேள்வி: ஐ.பி.எல்.-ல் உங்களது சிறந்த செயல்பாடு எது?

    பதில்: 2018-ம் ஆண்டு மும்பை இந்தியன்சுக்கு எதிராக 94 ரன்கள் விளாசிய இன்னிங்ஸ்.

    கேள்வி: கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் போது கடினமாக நினைக்கும் விஷயம்?

    பதில்: அறையில் தனிமையில் முடங்குவதால் எழும் அச்சம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நடித்துள்ள விளம்பர படம் ஒன்றில் காரில் இருந்தபடி ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக கத்துவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் களத்தில் கோபப்படமாட்டார், மிகவும் பொறுமைசாலி என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது அவர் நடித்துள்ள விளம்பர படம் ஒன்றில் காரில் இருந்தபடி ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக கத்துவது, கிரிக்கெட் பேட்டால் கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    ஷேவாக்


    இந்த காட்சியை பார்த்த இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், டிராவிட் ஒரு முறை டோனியிடம் கோபப்பட்ட புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ஷேவாக் கூறும் போது, ‘கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் நிதானத்தை இழந்து கோபப்பட்டதை நான் பார்த்து இருக்கிறேன். 2006-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடினோம். அப்போது டோனி இந்திய அணியின் புதிய வரவு. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டோனி ஒரு ஷாட் அடித்து ‘பாயிண்ட்’ திசையில் கேட்ச் ஆனார். ஆட்டமிழந்து வெளியேறிய டோனியிடம், டிராவிட் மிகவும் கோபப்பட்டார். இந்த மாதிரி தான் விளையாடுவாயா? நீ ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று கூறி சத்தம் போட்டார். டிராவிட் ஆங்கிலத்தில் திட்டிய வார்த்தைகளில் பாதி எனக்கு புரியவில்லை. நான் அப்படியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். பிறகு அடுத்த ஆட்டத்தில் டோனி பெரிய அளவில் ஷாட்டுகள் அடிக்கவில்லை. அவரிடம் நான், உனக்கு என்ன பிரச்சினை என்று விசாரித்தேன். அதற்கு அவர் நான் மீண்டும் டிராவிட்டிடம் திட்டு வாங்க விரும்பவில்லை. ஆட்டத்தை நிதானமாக ஆடி முடித்து விட்டு திரும்பலாம் என்று கூறினார்’ என்றார்.
    கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட 9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
    பியூனஸ் அயர்ஸ்:

    கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட 9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை ஏற்படுத்தி தந்தார். இதன் பின்னர் 28 மற்றும் 30-வது நிமிடங்களில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் பெரீரோ அடுத்தடுத்து கோல் போட்டார். இதனால் 1-2 என்ற கணக்கில் பின்தங்கிய இந்திய அணி கடைசி நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங்கின் சாதுர்யத்தால் தப்பியது.

    அதாவது ஆட்டம் முடிய வெறும் 6 வினாடி மட்டுமே இருந்த நிலையில் அவர் பெனால்டி கார்னர் வாய்ப்பில் மறுபடியும் கோல் அடித்து உள்ளூர் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். வழக்கமான ஆட்ட நேர முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதால் முடிவை தீர்மானிக்க ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றது. பெனால்டி ஷூட்-அவுட்டில் ஹீரோவாக ஜொலித்த இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் எதிரணியின் 5 வாய்ப்புகளில் மூன்றை முறியடித்து பிரமாதப்படுத்தினார். அதே சமயம் இ்ந்தியாவின் 5 வாய்ப்புகளில் ரூபிந்தர் சிங், லலித் உபாத்யாய், தில்பிரீத்சிங் ஆகியோர் கோலாக்கினர். திரில் லிங்கான ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுடன், போனஸ் புள்ளியையும் தட்டிச் சென்றது.

    இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா 12 புள்ளிகளுடன் 5-வது இடம் வகிக்கிறது. 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள அர்ஜென்டினா 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. இந்தியா-அர்ஜென்டினா அணிகள் இதே மைதானத்தில் மீண்டும் ஒரு முறை மோத உள்ளன.
    சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மணீஷ் பாண்டே கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது.
    சென்னை:

    ஐபிஎல் 2021 சீசனின் மூன்றாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    ஷுப்மான் கில் 15 ரன்னில் ஆட்டடமிழந்தார். அடுத்து நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதாராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தது.
     
    திரிபாதி 29 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் 5 ரன்னிலும், மோர்கன் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

    சிறப்பாக ஆடிய நிதிஷ் ராணா 80 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார்.

    இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் ரஷித் கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹாவும், டேவிட் வார்னரும் இறங்கினர்.

    கடைசி வரை போராடிய மணீஷ் பாண்டே

    வார்னர் 3 ரன்னிலும், சாஹா 7 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். 10 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஐதராபாத்.

    அடுத்து இறங்கிய மணீஷ் பாண்டேவும், பேர்ஸ்டோவும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். முகமது நபி 14 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 11 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 2 சிக்சர் உள்பட 16 ரன்கள் கிடைத்தது. மணீஷ் பாண்டே அரை சதமடித்தார்.

    இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணீஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அந்த் ரஸல், மோர்கன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 3-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் 15 ரன்னில் ஆட்டடமிழந்தார். அடுத்து நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதாராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தது.

    அணியின் ஸ்கோர் 15.2 ஓவரில் 146 ரன்னாக இருக்கும்போது திரிபாதி 29 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எளிதாக 200 ரன்னைத் தாண்டுவது போல் இருந்தது.

    ஆனால் அந்த்ரே ரஸலை (5) ரஷித் கானும், மோர்கன் (2) மற்றும் நிதிஷ் ராணாவை (80) முகமது ரபியும் வீழ்த்த கொல்கத்தாவின் ரன் வேகம் குறைந்தது. தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    ரஷித் கான் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், முகமது நபி 4 ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ஆடுகளம் அதிக அளவில் ட்ரையாக உள்ளது. இந்த ஆடுகள் சற்று வித்தியாசமானது. நாங்கள் பந்து வீச்சை தேர்வு செய்கிறோம் என டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 3-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:-

    1. ஷுப்மான் கில், 2. ராகுல் திரபாதி, 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. அந்த்ரே ரஸல், 7. ஷாகிப் அல் ஹசன், 8. பேட் கம்மின்ஸ், 9. ஹர்பஜன் சிங், 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:

    1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. சகா, 4. மணிஷ் பாண்டே, 5. விஜய் சங்கர், 6. அப்துல் சமாத், 7. முகமது நபி, 8. ரஷித் கான், 9. புவி, 10. டி நடராஜன், 11. சந்தீப் சர்மா
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக எம்எஸ் டோனியின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 188 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர்கள் ருத்துராஜ் (5), டு பிளிஸ்சிஸ் (0) சொதப்பினாலும் மொயீன் அலி (36), ரெய்னா (54), அம்பதி ராயுடு (23), ஜடேஜா (26), சாம் கர்ரன் (34) சிறப்பாக பேட்டிங் செய்தனர். டோனி டக்அவுட்டில் வெளியேறினார்.

    சிஎஸ்கே 13.5 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது விக்கெட்டாக அம்பதி ராயுடு ஆட்டமிழந்தார். அடுத்து டோனி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜடேஜா களம் இறக்கப்பட்டார். டோனி 7-வது வீரராக 16-வது ஓவரிலேயே களம் இறங்கினார்.

    எம்எஸ் டோனி 7-வது வீரராக களம் இறங்கியது குறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி அவரது பேட்டிங் ஆர்டர் குறித்து சில முடிவகளை எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் 7-வது இடத்தில் களம் இறங்கினார். நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வேண்டும் என அவர் ஒருவேளை நினைத்திருக்கலாம்.

    ஆனால், அவர் அணியை கூடுதலாக வழி நடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சென்னை அணியில் இளைஞர்கள் உள்ளனர். சில மிகவும் இளைஞர்கள். சாம் கர்ரன் கூட வயது மூத்தோர் கிடையாது. ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாடும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியை போன்று 3 அல்லது 4-வது இடத்தில் கூட களம் இறக்க பார்க்கலாம்.

    எம்எஸ் டோனி

    ஆனால், எம்எஸ் டோனி பேட்டிங் ஆர்டரில் கொஞ்சம் முன்னதாக களம் இறங்க வேண்டும். ஏனென்றால், போட்டியை  அவரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். டெல்லிக்கு எதிரான 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். இது எல்லோருக்கும் நடப்பதுதான். ஐபிஎல் தொடரில் அவர் முன்னதாக களம் இறங்க வேண்டும். ஐந்து அல்லது 6-வது இடங்களில் களம் இறங்க வேண்டும்’’ என்றார்.
    இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க நியூசிலாந்து தடைவிதித்திருப்பதால், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2021 டி20 கிரிக்கெட் சீசன் நேற்று முன்தினம் (ஏப்ரல் 9-ந்தேதி) தொடங்கியது. இந்தியாவில் ஆறு மைதானங்களில் மே 30-ந்தேதி வரை போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    இந்தியாவில் 2-ம் அலை கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. குறுகிய நாட்களிலேயே தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து விமானங்கள் தரையிறங்க நியூசிலாந்து தடைவிதித்துள்ளது.

    நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், ஜேமிசன் உள்பட டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுமார் 10 வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள்.

    நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மே 25-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் ஜூன் 18-ந்தேதி தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

    டிரென்ட் போல்ட்

    இந்தியாவில் இருந்து நியூசிலாந்து சென்றால், அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து குறிப்பிட்ட நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் இங்கிலாந்து சென்று அங்கும் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் போட்டியில் பங்கேற்க வேண்டும். இதனால் நியூசிலாந்து வீரர்கள் சொந்த நாடு திரும்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அப்படியே இங்கிலாந்து செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக 188 ரன்கள் அடித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பந்து வீச்சுதான் முக்கிய காரணம் என விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 188 ரன்கள் விளாசியது. ஆனால் டெல்லி அணி 18.4 ஓவரிலேயே 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் தோல்வியைத் தழுவியது.

    சென்னை அணியில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ, சாம் கர்ரன் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்தினர். இவர்களில் எவரும் 140 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் அல்ல. அதேபோல் அடிக்கடி பவுன்சர் வீசக்கூடியவர்ளும் இல்லை. இந்த இரண்டு சிறப்பம்சம் கொண்ட பந்து வீச்சாளருடன் சென்னை களம் இறங்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

    லுங்கி நிகிடி

    சென்னையில் தென்ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி, ஜேசன் பெரேண்டர்ப் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹசில்வுட் திடீரென விலகியதால் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    லுங்கி நிகிடி தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்து கோரன்டைன் நாட்களை முடிக்கவில்லை. ஜேசன் பெரேண்டர்ப்-க்கும் அதே நிலைதான். அதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான அடுத்த போட்டியிலும் இருவரும் பங்கேற்கமாட்டார்கள்.

    ஜேசன் பெரேண்டர்ப்

    நிகிடி விரைவில் வருவார். அதனைத் தொடர்ந்து பெரேண்டர்ப் அணியில் இணைவார். பந்து வீச்சில் அந்த இடத்தை கவனிக்க வேண்டும். தற்போது இந்திய பந்து வீச்சாளர்கள், சாம் கர்ரன் ஆகியோர் மீது கவனம் செலுத்துகிறோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
    ×