என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்த இருப்பதால் ஜேமிசன் கோலிக்கு பந்து வீச மறுத்துவிட்டார்.
    ஆர்சிபி அணியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் இடம் பிடித்துள்ளார். 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர், சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட் முடிந்த பின்னர், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டியுக் பந்து பயன்படுத்தப்படும்.

    ஆர்சிபி வீரர்கள் தொடரின் தொடக்கத்தில் பயிற்சி மேற்கொண்டபோது, ஜேமிசனிடம் விராட் கோலி வலைப்பயிற்சியின்போது டியுக் பந்துகளை தனக்கு போடுவீர்களா? என்று கேட்டுள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஜேமிசன், அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    ஒருவேளை விராட் கோலி டியுக் பந்தை சிறப்பாக எதிர்கொண்டால், இறுதிப் போட்டியில் சிக்கல் ஏற்பட்டு விடும் என்பதனாலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலை அந்த அணியில் இடம் பிடித்துள்ள டேனியல் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி, ஜேமிசன்

    இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கிறிஸ்டியன். நாங்கள் நெட் பயிற்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது விராட் கோலி ஜேமிசன் டெஸ்ட் போட்டி பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

    விராட் கோலி: ஜேமிசன் நீங்கள். டியுக் பந்தில் அதிகமாக பந்து வீசினீர்களா? என்றார்.

    மேலும் அது பற்றி பேசிக் கொண்டனர்.

    ஜேமிசன்: ஆம் நான் இங்கே ஒன்றிரண்டு பந்துகள் கொண்டு வந்துள்ளேன். இங்கிலாந்து செல்வதற்கு முன் இங்கு பயிற்சி மேற்கொள்வேன் என்றார்.

    விராட் கோலி: அப்படியா, வலைப்பயிற்சியில் எனக்கு பந்து வீச விரும்புவீர்களா? என்றார். மேலும், நான் உங்கள் பந்தை எதிர்கொள்ள மிகவும் சந்தோசம் அடைவேன் என்றார்.

    ஜேமிசன்: நான் உங்களுக்கு பந்து வீச வாய்ப்பு இல்லை. நீங்கள் நான் பந்தை ரிலீஸ் செய்யும் இடத்தை கவனித்து விடுவீர்கள். அதன்பின் எல்லாவற்றையும் டியுக் பந்தில் செய்து விடுவீர்கள் என்றார்.

    இப்படி உரையாடல் நடந்ததாக டேனியில் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு அணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி நடனத்தில் தாயாருடன் சேர்ந்து வெளுத்து வாங்கிய வீடியோ வைரலானது.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் யுஸ்வேந்திர சாஹல். கடந்த ஆண்டு டிசம்பரில் தனஸ்ரீ சர்மா என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது.

    இதன்பின்னர் சமூக ஊடகங்களில் இந்த தம்பதி அதிகம் பேசப்பட்டனர். இவரது மனைவி தனது நடன திறமையால் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார். அதுபற்றிய வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை பலர் பின்தொடருகின்றனர்.

    இந்த நிலையில், சர்வதேச நடன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தனஸ்ரீ தனது தாயாருடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர்கள் இருவரும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்த டால் என்ற இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடியுள்ளனர். இதற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
    பிரித்விஷாவிடம் உங்களது இயல்பான ஆட்டத்தை விளையாடுமாறு கூறினேன் என்று டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

    அகமதாபாத்:

    14-வது ஐ.பி.எல். போட்டியில் அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது. ஆந்த்ரே ரசல் 45 ரன்னும், சுப்மன்கில் 43 ரன்னும் எடுத்தனர். டெல்லி தரப்பில் அக்சர் படேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் நல்ல அடித்தளம் அமைத்தனர். குறிப்பாக பிரித்விஷா அதிரடியாக விளையாடினார்.

    ஷிவம் மாவி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் பிரித்விஷா 6 பவுண்டரி அடித்து அசத்தினார். அவர் 41 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். டெல்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து வென்றது.

    ஷிகர் தவான் 46 ரன் எடுத்தார். டெல்லி பெற்ற 5-வது வெற்றி (7 ஆட்டம்) இதுவாகும். கொல்கத்தா 5 தோல்வியை (7 ஆட்டம்) சந்தித்தது.

    தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் மார்கன் கூறியதாவது:-

    தோல்வி அடைந்தது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் மெதுவாக ஆடினோம். ஒரு ஓவரில் விக்கெட்டுகளை இழந்தோம். இறுதி கட்டத்தில் ஆந்த்ரே ரசல் 150 ரன்னுக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் நாங்கள் மீண்டும் பந்து வீச்சில் மெதுவாகவே செயல்பட்டு விட்டோம்.

    இந்த போட்டித் தொடரில் இதுவரை ஒரு ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படுவதில் சிரமப்பட்டு வந்துள்ளோம்.

    முன்னோக்கி நகரும் போது, அணியில் பெரிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவது எங்களது தேவை. நீங்கள் நேர்மையாகவும், யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.

    எங்களிடம் பெரிய அளவில் திறமைகள் உள்ளன. ஆனால் திறமைகள் மட்டும் உங்களை அழைத்து செல்லாது. நீங்கள் திறமைகளை செயல்திறனாக மாற்ற வேண்டும். நாங்கள் அதை செய்யவில்லை. அதிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    வெற்றி குறித்து ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    பிரித்விஷாவிடம் உங்களது இயல்பான ஆட்டத்தை விளையாடுமாறு கூறினேன். இந்த ஆட்டத்தில் ரன்-ரேட்டை உயர்த்த முயற்சித்தோம். இதுபோன்ற ஆட்டங்களில்தான் நிகர ரன்-ரேட்டை பற்றி சிந்திக்க முடியும்.

    எல்லோரிடமும் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுமாறும், அவர்களால் முடிந்ததை செய்யுமாறும் கூறினோம்.

    கடந்த ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றோம். ஆனாலும் எங்கள் செயல்முறையை மாற்ற வேண்டாம் என்று நினைத்தோம். செயல் முறையை நீங்கள் நம்பினால், நீங்கள் முடிவை (வெற்றி) பெறுவீர்கள் என்றார்.

    தோல்வியில் இருந்து மீண்டு வர பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூரு அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியில் தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல், ஜேமிசன் ஆகியோர் உள்ளனர். பெங்களூரு அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 4 போட்டியில் தோற்றது. அந்த அணியில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், பூரன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆனாலும் பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சில் முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் உள்ளனர்.

    தோல்வியில் இருந்து மீண்டு வர பஞ்சாப் அணி முயற்சிக்கும், அதற்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் மீது அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரீன் மையோர்கா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.


    பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் மீது அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரீன் மையோர்கா பாலியல் புகார் தெரிவித்தார்.

    2009-ம் ஆண்டு லாஸ் வேகாசில் உள்ள ஓட்டல் ஒன்றில் தன்னை ரொனால்டோ பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டினார். இந்த புகாரை கேத்ரீன் மையோர்கா 2018-ம் ஆண்டு தெரிவித்தார்.

    இதை ரொனால்டோ மறுத்தார். இருதரப்பின் விருப்பத்துடன் கூடிய உறவு தான் என்று ரொனால்டோ தரப்பினர் தெரிவித்தனர்.

    ரொனால்டோ - கேத்ரீன் மையோர்கா

    இதுதொடர்பாக வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரொனால்டோவை விடுவிப்பதாக கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்தநிலையில் இவ்விவகாரத்தை கேத்ரீன் மையோர்கா மீண்டும் கிளப்பி உள்ளார். அவர் ரொனால்டோவிடம் 56 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.579 கோடி) நஷ்டஈடு கோரி உள்ளார்.

    கடந்த கால வலி மற்றும் துன்பங்கள், எதிர்கால வலி மற்றும் துன்பங்கள், சட்ட ரீதியான கட்டணம் ஆகியவற்றுக்காக நஷ்டஈட்டை கேத்ரீன் மையோர்கா கேட்டுள்ளதாக இங்கிலாந்தின் மிரர் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் எளிதாக வெற்றி பெற்றதுடன், புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 171 ரன்கள் எடுத்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி 16.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்

    மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி 5 வெற்றிகள் பெற்றிருந்தாலும் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    ஐபிஎல் அணிகளின் புள்ளிகள் பட்டியல் முழு விவரம்:

    வ.எ.அணிகள்போட்டிகள்வெற்றிகள்புள்ளிகள்நெ.ர.ரேட்
    1சி.எஸ்.கே.65101.475
    2டெல்லி75100.466
    3ஆர்.சி.பி.65100.089
    4மும்பை6360.071
    5கே.கே.ஆர்724-0.494
    6பஞ்சாப்624-0.608
    7ஆர்.ஆர்.624-0.690
    8ஐதராபாத்612-0.264
    பிரித்வி ஷா சிக்சர், பவுண்டரிகளாக விளாசி தள்ள, ஷிகர் தவான் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி.
    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 25-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

    ராணா 15 ரன்னிலும், ராகுல் திரிபாதி 19 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய கேப்டன் இயன் மோர்கன், சுனில் நரைனும் டக் அவுட்டாகினர்.

    தொடர்ந்து களமிறங்கிய ஆந்தரே ரசல், துவக்க வீரர் ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷுப்மான் கில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அதிரடி காட்டிய ரசல் டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 27 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் அக்சர் பட்டேல், லலித் யாதவ் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    132 ரன்கள் சேர்த்த பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி

    பிரித்வி ஷா தொடக்கம் முதல் ஓவரில் இருந்தே விளாசினார். அவருக்கு ஷிகர் தவான் பக்கபலமாக இருந்தார். அதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா அரை சதமடித்தார்.
    அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் 46 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர்.

    41 பந்தில் 82 ரன்கள் குவித்த நிலையில் பிரித்வி ஷா அவுட்டானார். அடுத்து இறங்கிய பண்ட் 8 பந்தில் 16 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், டெல்லி அணி 16.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது டெல்லி அணி பெற்ற 5வ்து வெற்றி ஆகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. ஆட்ட நாயகன் விருது பிரித்வி ஷாவுக்கு வழங்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.
    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் வீரர் டிகாக் அரை சதம் அடித்து அசத்தினார்.
    டெல்லி:

    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் போல்ட், பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 14 சூர்ய குமார் யாதவ் 16 ரன்கள் எடுத்து வெளியேறினர். டிகாக் குர்ணால் பாண்ட்யா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குர்ணால் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

    குர்ணால் பாண்ட்யா அவுட் ஆன காட்சி

    இறுதியில் 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி டிகாக் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். பொல்லார்டு 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.  இது மும்பை அணிக்கு 3-வது வெற்றி ஆகும். 

    ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் 2 விக்கெட்டும் முஸ்பிகுர் ரகுமான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    பட்லர் 41 ரன்களும், ஜெய்ஸ்வால் 32 ரன்களும், சாம்சன் 42 ரன்களும், ஷிவம் டுபே 35 ரன்களும் அடிக்க மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பட்லர் 32 பந்தில் 41 ரன்களும், ஜெய்ஸ்வால் 20 பந்தில் 32 ரன்களும் விளாசி நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

    மும்பை வீரர்கள்

    ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 9.5 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ரன் வேகத்தில் மந்த நிலை ஏற்பட்டது. சஞ்சு சாம்சன் 27 பந்தில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷிவம் டுபே 31 பந்தில் 35 ரன்களே அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே அடித்தது.
    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் லாபஸ்சேன், ஏலத்தில் ஏலம் போகாதது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்று தற்போது சூறாவளியாக அடித்து வருகிறது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

    இந்தியாவில் உருமாறிய கொரோனா, ஆஸ்திரேலியாவில் புகுந்து சேதமாக்கிடவிடக் கூடாது என்பதால், அந்நாட்டு அரசு இந்தியாவில் இருந்து விமானங்கள் செல்ல தடைவிதித்துள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களே, அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. விமானத்தடை மே 15-ந்தேதி வரை உள்ளது.

    இந்த நிலையில் பெரும்பாலான ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு திரும்ப விரும்புகிறார்கள். இறுதிக்கட்டத்தில் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை சொந்த நாடு திரும்பிவிட்டனர்.

    இனிமேல் ஆஸ்திரேலியா செல்வது கடினம். இந்த நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபில் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படாதது மறைமுகமாக கிடைத்த ஆசீர்வாதம் என ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் லாபஸ்சேன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாபஸ்சேன் கூறுகையில் ‘‘நான் நிச்சயமான ஐபிஎல் தொடரில்இருந்து விளையாடாததை முறைமுகமாக கிடைத்த அசீர்வாதமாக நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் விரும்பினேன். ஐபிஎல் தலைசிறந்த தொடர். ஆனால், நாணயத்தின் இருபக்கம் போல் எனது நிலை. ஐபிஎல் சென்றிருந்தால் உள்நாட்டு தொடரில் பட்டம் வென்றிருக்க முடியாது. இது அடிக்கடி வருவதல்ல. 2-வதாக, இந்தியாவில் தற்போதை சூழ்நிலை சிறப்பாக இல்லை’’ என்றார்.
    ஐபிஎல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியதால், அவருக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்காவின் வான் டெர் துஸ்செனை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். பஞ்சாப் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் அடித்த பந்தை பிடிக்கும்போது, கை விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பினார்.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் வான் டெர் துஸ்செனை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். துஸ்சென் அதிரடி பேட்ஸ்மேன் ஆவார்.

    பென் ஸ்டோக்ஸ் விளையாடாததால் மற்றொரு தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேனான டேவிட் மில்லருக்கு ஆடும் லெவன் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடும் நிலையில், ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் வீரர்கள் தங்களால் முயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமான பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் வெளிநாடுகள் ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை அனுப்பி வருகின்றன.

    தற்போது ஐபிஎல் போட்டிகள் மிகுந்த பாதுகாப்பு வளையத்திற்குள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் அமெரிக்க டாலரை ஆக்சிஜன் வாங்கி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நன்கொடையாக வழங்கினார்.

    பிரெட் லீயும் நன்கொடை வழங்கியுள்ளார். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இந்தியாவிற்கு 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

    ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் திரட்டிய நிதி, இந்தியாவுக்கு உதவ உதவும், ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் பவுண்டேசன் தொடர்ந்து பல முயற்சிகளைக் கொண்டுள்ளது’’ என ராஜஸ்தான் ராயல்ஸ் தெரிவித்துள்ளது.
    ×