என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது.

    மும்பை:

    2007-ம் ஆண்டு முதல் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

    இதற்கு முன்பாக நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

    அதன்பின் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துவிட்டு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. கேப்டனாக டோனி முதல் முறையாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டோனி வெற்றிகரமாக கேப்டனாக அசத்தினார்.

    இந்த நிலையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2007-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதால் கடும் கொந்தளிப்புகள் இருந்தது. பின்னர் இரண்டு மாத இங்கிலாந்து சுற்றுப்பயணமும், தென்ஆப்பிரிக்காவுக்கும், அயர்லாந்துக்கும் ஒரு மாத சுற்றுப்பயணமும் இருந்தது.

    அதன்பின்னர் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்தது. வெளிநாட்டில் 4 மாதம் சுற்றுப்பயணம் இருந்தது. எனவே மூத்த வீரர்கள் தங்களுக்கு இடைவெளி தேவை என்று நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 20 ஓவர் உலக கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    எம்.எஸ்.டோனி

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் டோனி கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. யார் கேப்டன் ஆனாலும், அது ராகுல் டிராவிட்டாக இருந்தாலும், கங்குலியாக இருந்தாலும் எதிர்காலத்தில் யாராக இருந்தாலும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் அதை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வெல்ல யுவராஜ்சிங் முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டி தொடரில் தான் யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் தரவரிசையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    துபாய்:

    டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஜூன் 18-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது. 6-வது இடத்தைப்  பெற்றுள்ள பந்த் மற்றும் ரோகித் தலா 747 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

    பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து, டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.

    அஸ்வின்

    அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

    347 பந்துகளில் 200 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் டெஸ்ட் அறிமுக வீரர் டேவன் கான்வே டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 447 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் நுழைந்துள்ளார். நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன. தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    நேற்றிரவு நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசை சேர்ந்த பார்போரா கிரெஜ்சிகோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி ஆகியோர் மோதினர்.

    போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டில் 5-5 என்ற கணக்கில் போட்டி ‘டை’ ஆகி இருந்தது. அதன்பின், முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கிரெஜ்சிகோவா கைப்பற்றினார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட சக்காரி இரண்டாவது செட்டை அதிரடியாக ஆடி 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் இரு வீராங்கனைகளும் முழு திறமையை வெளிப்படுத்தினர்

    ஒரு கட்டத்தில் 7-7 என்ற கணக்கில் போட்டி ‘டை’ ஆகி விறுவிறுப்பு ஏற்படுத்தியது. ஆனாலும், கிரெஜ்சிகோவா கடும் போராட்டத்துக்கு பிறகு 3வது செட்டை தன்வசப்படுத்தினார்.

    இறுதியில், கிரெஜ்சிகோவா 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா மற்றும் செக் குடியரசின் கிரெஜ்சிகோவா ஆகியோர் மோதுகின்றனர்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டனாக டாம் லாதம் பொறுப்பேற்று உள்ளார்.
    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், பெர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் களமிறங்கினர். இருவ்ரும் நிதானமாக ஆடினர்.  முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. சிப்லி 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கிராலே டக் அவுட்டானார். கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னிலும், ஒல்லி போப் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ரோரி பர்ன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 81 ரன்னில் வெளியேறினார்.

    அரை சதமடித்த லாரன்ஸ்

    அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டேனியல் லாரன்சும் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 67 ரன்னுடனும், மார்க் வுட் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட், ஹென்றி, படேல் தலா 2 விக்கெட்டும்,  நீல் வாக்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    விராட் கோலி, ரோகித் சர்மா உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி இலங்கை சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.

    விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாததால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று இரவு இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேவ்தத் படிக்கல்

    இந்திய அணி விவரம்:-

    1. ஷிகர் தவான் (கேப்டன்), 2. புவனேஷ்வர் குமார் (துணைக் கேப்டன்), 3. பிரித்வி ஷா, 4. தேவ்தத் படிக்கல், 5. ஆர். கெய்க்வாட், 6. சூர்யகுமார் யாதவ், 7. மணிஷ் பாண்டே, 8. நிதிஷ் ராணா, 9. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 10. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 11. சாஹல், 12. ராகுல் சாஹர், 13. கே. கவுதம், 14. குருணால் பாண்ட்யா, 15 குல்தீப் யாதவ், 16. வருண் சக்ரவர்த்தி, 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. சி. சகாரியா.

    வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்கள்: இஷான் பெரேல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங்.
    செரீனா வில்லியம்ஸ், நவோமி ஒசாகா வெளியேறிய நிலையில் 31-ம் நிலை வீராங்கனை அனஸ்டாசியா பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை (31-ம் நிலை) அனஸ்டாசியா பவ்லுசென்கோவா தரநிலை பெறாத ஸ்லோவேனியாவின் தமரா ஜிடன்செக்கை எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினர். என்றாலும் இறுதியில் அனஸ்டாசியா பவ்லுசென்கோவா 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அனஸ்டாசியா பவ்லுசென்கோவா கையே ஓங்கியது. 2-வது செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றி 7-5, 6-3 என நேர்செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    தமரா ஜிடன்செக்

    மற்றொரு அரையிறுதியில் மரியா சக்காரி (கிரீஸ்)- பார்போரா கிரேஜ்சிகோவா (செக் குடியரசு) ஆகியோர் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் சாம்பியனுக்காக இறுதி ஆட்டத்தில் அனஸ்டாசியா பவ்லுசென்கோவாவை எதிர்கொள்வார்.
    உலக கோப்பையை போலவே ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

    ரோம்:

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்த மிகவும் பிரசித்தி பெற்றது ஐரோப்பிய கோப்பை போட்டியாகும்.

    உலக கோப்பையை போலவே ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.

    “யூரோ” கோப்பை என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் முதல் முறையாக நடந்தது. இதில் சோவியத் யூனியன் 2-1 என்ற கோல் கணக்கில் யூகோசுலாவியாவை வீழ்த்தி முதல் ஐரோப்பிய சாம்பியன் ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

    இதுவரை 15 யூரோ கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் ஜெர்மனி (1972, 1980, 1996), ஸ்பெயின் (1964, 2008, 2012) ஆகிய அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    பிரான்ஸ் 2 தடவை (1984, 2000) கோப்பையை வென்றுள்ளது. சோவியத் யூனியன் (1960), இத்தாலி (1968), செக்குடியரசு (1976), நெதர்லாந்து (1988), டென்மார்க் (1992), கிரீஸ் (2004), போர்ச்சுக்கல் (2016) ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    கடைசியாக யூரோ கால்பந்து போட்டி 2016-ம் ஆண்டு பிரான்சில் நடந்தது. இதில் போர்ச்சுக்கல் கோப்பையை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி கடந்த ஆண்டு நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 16-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நாளை (11-ந்தேதி) தொடங்குகிறது. ஜூலை 11-ந்தேதி வரை ஒரு மாத காலம் இந்த போட்டி நடக்கிறது.

    யூரோ கோப்பை போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:-

    குரூப் ஏ:- துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட் சர்லாந்து.

    குரூப் பி:- டென்மார்க், பின்லாந்து, பெல்ஜியம், ரஷியா.

    குரூப் சி:- நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, வடக்கு மாசி டோனியா.

    குரூப் டி:- இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக்குடியரசு.

    குரூப் இ:- ஸ்பெயின், சுவீடன், போலந்து, சுலோ வாக்கியா.

    குரூப் எப்:- அங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி.

    இத்தாலி தலைநகர் ரோமில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள துருக்கி- இத்தாலி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 6 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு பிரிவிலும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளில் சிறந்த 4 அணிகளும் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

    வருகிற 23-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. 2-வது சுற்று ஆட்டங்கள் 26 முதல் 29-ந்தேதி வரையிலும், கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 2 மற் றும் 3-ந்தேதிகளிலும், அரை இறுதி 6 மற்றும் 7-ந்தேதி களிலும் நடக்கிறது. இறுதி போட்டி ஜூலை 11-ந்தேதி லண்டனில் நடக்கிறது.

    யூரோ கோப்பை போட்டிகள் லண்டன் (இங்கிலாந்து), ரோம் (இத்தாலி), பகு (அசர்பெய்ஜான்), முனிச் (ஜெர்மனி), செயின்ட் பீட்டர்ஸ் பர்க் (ரஷியா), ஆம்ஸ்டர்டாம் (நெதர் லாந்து), புகாரெஸ்ட் (ருமேனியா), புடாபெஸ்ட் (அங்கேரி), கோபன்ஹேகன் (டென்மார்க்), கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து), செவில்லி (ஸ்பெயின்) ஆகிய 11 நகரங்களில் போட்டி நடக்கிறது.

    லண்டன் வெம்பர்லி மைதானத்தில் இறுதிப்போட்டி, 2 அரை இறுதி, 2-வது சுற்று ஆட்டம் மற்றும் லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

    ஏற்கனவே வென்ற நாடு கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்ற ஆவலுடன் ரசிகர்களால் எதிர்ர்க்கப்படுகிறது. இதில் விளையாடும் அனைத்து நாடுகளும் திறமையானது. இதனால் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.

    ஐரோப்பிய கால்பந்து போட்டி சோனி டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனில் நியூசிலாந்து அணிக்கெதிராக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகத்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற 18-ந்தேதி தொடங்கிறது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து ரசிகர்கள் விவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

    ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பண்ட் ஆகிய ஆறு பேரின் இடம் உறுதி என்பதில் சந்தேகமில்லை. ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளராக களம் இறங்குவார்கள்.

    அப்படி என்றால் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும். ஆஸ்திரேலியா தொடரின்போது பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா இல்லாமல் இளம் வீரர்கள் அசத்தினர். இதில் முகமது சிராஜ் அபாரமான பந்து வீசினார். இந்திய அணி 2-1 என ஆஸ்திரேலியாவை வெல்ல முகமது சிராஜியின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருந்தது. இவர் 13 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பிரிஸ்பேன் மைதானத்தில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.

    தற்போது பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் மூன்று பேரைத்தான் தேர்வு செய்ய முடியும். இந்திய அணி நிர்வாகம் முகமது சிராஜை களம் இறக்க ஆர்வமாக உள்ளது. அப்படி என்றால் முகமது ஷமி, பும்ரா, இஷாந்த சர்மா ஆகியோரில் ஒருவர் வெளியில் இருக்க வேண்டும்.

    இந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் பும்ரா (Bumrah), உலக சாம்பியன்ஷிப் (WTC 2021 Final) ஹேஸ்டேக் உருவாக்கி வேகப்பந்து வீச்சாளர்களில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி

    சிலர் பும்ரா சமீப காலமாக விக்கெட் வீழ்த்தவில்லை. அவருக்குப் பதிலாக முகமது சிராஜை சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். சிலம் வெளிநாட்டில் பும்ரா 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரை நீக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

    ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி நிர்வாகத்திற்கு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அலஸ்டைர் குக்கிடம் இருந்து பறித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அலஸ்டைர் குக். கடந்த உள்ளூர் சீசனில் இந்தியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடிய பின்னர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்திருந்த அலஸ்டைர் குக், இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அதிக போட்டிகளில் (161) போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.

    இன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். இது அவருக்கு 162-வது போட்டியாகும். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற அலஸ்டைர் குக் சாதனையை முறியடித்துள்ளார்.

    அலஸ்டைர் குக்

    சச்சின் தெண்டுல்கர் 200 டெஸ்டிலும், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் தலா 168 போட்டிகளிலும், கல்லீஸ் 165 போட்டிகளிலும், சந்தர்பால் 164 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
    இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் உள்பட 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் 2-வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து அணியில் முதல் போட்டியில் விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன், சான்ட்னெர், கைல் ஜேமிசன் உள்பட ஆறு பேர் இடம் பெறவில்லை. இந்த போட்டியில் பிளண்டெல், மிட்செல் ஹென்ரி, பட்டேல், டிரென்ட் போல்ட் இடம் பிடித்துள்ளனர்.

    இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் விளையாடி வருகிறது. 

    இங்கிலாந்து அணி:-

    1. ரோரி பேர்ன்ஸ், 2. டாம் சிப்லி, 3. ஜாக் கிராவ்லி, 4. ஜோ ரூட், 5. ஒல்லி போப், 6. டான் லாரன்ஸ், 7. ஜேம்ஸ் பிரேசி, 8. மார்க் வுட், 9. ஒல்லி ஸ்டோன், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    நியசிலாந்து அணி:-

    1. டாம் லாதம் (கேப்டன்), 2. டேவன் கான்வே, 3. வில் யங், 4. ராஸ் டெய்லர், 5. ஹென்ரி நிக்கோல்ஸ், 6. டாம் பிளண்டெல், 7. டேரில் மிட்செல், 8. நீல் வாக்னர், 9. மாட் ஹென்ரி, 10. அஜாஸ் பட்டேல், 11. டிரென்ட் போல்ட்.
    ரஷித் கான் கடைசி ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாச, லாகூர் குவாலண்டர்ஸ் கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடர் தொடங்கியது. மார்ச் 4-ந்தேதி வரை 14 போட்டிகள் நடைபெற்ற நிலையில், வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட, உடனடியாக போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    மீதமுள்ள போட்டிகளை அபு தாபியில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விரும்பியது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவிக்க ஜூன் 9-ந்தேதி முதல் (நேற்று) ஜூன் 24-ந்தேதி வரை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நேற்று பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முதல் போட்டி அபு தாபியில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் லாகூர் குவாலண்டர்ஸ்- இஸ்லாமாபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. பஹீம் அஷ்ரப் அதிகபட்சமாக 24 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லாகூர் குவாலண்டர்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் சோஹைல் அக்தர் 30 பந்தில் 40 ரன்கள் அடித்தார். பஹர் ஜமான் (9), முகமது பைஜான் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    லாகூர் அணிக்கு கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. ஹசன் அலி அந்த ஓவரை வீசினார். முதல் ஐந்து பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் கடைசி பந்தில் சிக்சர் விட்டுக்கொடுத்தார். இதனால் லாகூர் அணி 19-வது ஓவரில் 7 ரன்கள் எடுத்தது.

    ரஷித் கான்

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 6-வது விக்கெட்டிற்கு களம் இறங்கிய ரஷித் கான் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். இதனால் லாகூர் 4 பந்தில் 14 ரன்கள் அடித்தது. கடைசி 2 பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் 1 ரன்கள் அடிக்க போட்டி டை ஆனது. கடைசி பந்தில் ஒரு சிங்கிள் அடிக்க, லாகூர் அணி சரியாக 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    4 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த ரஷித் கான், பேட்டிங்கில் 5 பந்தில் 15 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
    மணிப்பூரை சேர்ந்த டிங்கோசிங் 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அதேஆண்டு அர்ஜூனா விருதையும், 2013-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார்.
    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் கடந்த 2017-ம் ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் 42 வயதான டிங்கோசிங் இன்று உயிரிழந்தார். மணிப்பூரை சேர்ந்த அவர் 1998-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அதேஆண்டு அர்ஜூனா விருதையும், 2013-ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார்.

    ×