என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்துக்கு எதிரன 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் மொகமது ஹபீஸ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என சமனிலை பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி மான்செஸ்டரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 57 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 76 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    அரை சதமடித்த ரிஸ்வான்

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 31 ரன்னும், ஜோஸ் பட்லர், மார்கன் தலா 21 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது ஜேசன் ராய்க்கும், தொடர் நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கும்  வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து ஒயிட்வாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
    கொழும்பு:

    இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ர ன்கள், அசலங்கா 65, கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் சேர்த்தனர்.

    இந்திய அணி சார்பில் புவி, சஹல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 12 ஓவரில் இந்தியா 65 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. 

    அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ்

    மணீஷ் பாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்னில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா டக் அவுட்டானார்.  குருணால் பாண்ட்யா 35 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது.

    8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஜோடி நிதானமாக ஆடியது. சாஹர் 66 பந்துகளில் அரை சதமடித்தார். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. 

    தீபக் சாஹர் 69 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 84 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
    எம். முகமது, அஸ்வின் கிறிஸ்ட் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஆர். சதீஷின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8.2 ஓவரில் 36 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    8-வது விக்கெட்டுக்கு எம். முகமது உடன் அஸ்வின் கிறிஸ்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி திருப்பூர் அணியை சரிவில் இருந்து மீட்டது. திருப்பூர் அணி 16.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

    எம். முகமது 10 ரன்களுடனும், அஸ்வின் கிறிஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சார்பில்  ஆர். சதீஷ் 5 விக்கெட்டும், தேவ் ராகுல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    மழை தொடர்ந்ததால் இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
    இலங்கை அணி 275 ரன்கள் குவித்த நிலையில் தவான், பிரித்வி ஷா, இஷான் கிஷன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
    இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ 50 ர ன்கள், அசலங்கா 65, கருணாரத்னே ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் புவி 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், சஹல் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா (13), ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 12 ஓவரில் இந்தியா 65 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட் இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. இந்தியா 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

    18-வது ஓவரின் 2-வது பந்தில் மணிஷ் பாண்டே 31 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில், துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். பாண்ட்யா வந்த வேகத்திலேயே டக்அவுட்டில் வெளியேறினார்.

    இதனால் இந்தியா 116 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மித-வேகப்பந்து வீச்சாளர் சதீஷ் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சதீஷ் வீசினார். 2-வது பந்திலேயே தினேஷ் டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்த ஓவரில் சித்தார்த் ஒரு ரன்னில் வெளியேறினார்.

    3-வது ஓவரை சதீஷ் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் அரவிந்த் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் பிரான்சிஸ் ரோகின்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    சதீஷ் அவரின் 3-வது ஓவரில் 1 விக்கெட்டும், 4-வது ஓவரில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இதனால் 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். சதீஷ் ஐந்து வீக்கெட் வீழ்த்தியதால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 ஓவரில் 30 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

    12 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.
    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    சென்னை:

    8 அணிகள் பங்கேற்ற 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு தொடங்கியது.

    பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின.

    முதலில் கோவை அணி விளையாடியது. அந்த அணி வீரர் சாய் சுதர்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 87 ரன்கள் (8 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.

    கோவை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

    டி.என்.பி.எல். போட்டி 2-வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இதில் என்.ஜெகதீசன் டி.என்.பி.எல். போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராக உள்ளார். அவர் 32 இன்னிங்சில் 1352 ரன் எடுத்து உள்ளார். சராசரி 54.08 ஆகும். ஒரு சதமும், 14 அரை சதமும் அடித்துள்ளார். விக்கெட் கீப்பரான அவர் 21 கேட்ச் பிடித்துள்ளார். 13 ஸ்டம்பிங் செய்து உள்ளார். இதனால் ஜெகதீசன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இலங்கை தொடருக்கான இந்திய அணியுடன் வலைப் பயிற்சியில் பந்து வீச்சாளராக சென்றிருக்கும் சாய் கிஷோர், சந்திப் வாரியர் ஆகியோர் அந்த தொடர் முடிந்ததும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இணைகிறார்கள்.

    எம்.முகமது தலைமையில் பெயர் மாற்றத்துடன் களம் காணும் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு வர்ணனையாளராக பணியாற்றுவதால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார். வலுவான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சவாலை சமாளிப்பது திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்கவிட்ட சாய் சுதர்சன், 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    சென்னை:

    ஐந்தாவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற சேலம் அணி, கோவை கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு அதிரடியாக ஆடி 33 ரன்கள் குவித்து, கணேஷ் மூர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின்னர் இணைந்த கவின்-சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்கவிட்ட சாய் சுதர்சன், 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 43 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 பவுண்டரி, 5 சிக்சர்களில் இந்த இலக்கை எட்டினார்.

    முன்னதாக கவின் 33 ரன்களிலும், கேப்டன் ஷாருக்கான் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். முகிலேஷும் ஒரு ரன் மட்டுமே எடுத்து, ரன்அவுட் ஆனார்.

    18 ஓவர் முடிவில் கோவை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    மைதானத்தில் நிலவிய ஈரப்பதத்தை உலர வைக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்காததால் இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
    தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
     சென்னை:

    ஐந்தாவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு அதிரடியாக ஆடினார். 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த அவர், கணேஷ் மூர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின்னர் கவின், சாய் சுதர்சன் ஆகியோர் நிதானமாக விளையாடினர்.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்றம், கோல்ப் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் குறித்த செய்தியை காணலாம்.
    பவுத் மிர்சா - குதிரையேற்ற வீர‌ரான இவருக்கு வயது 29. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1992 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. உலக அரங்கில் குதிரையேற்றத்தில் பவுத் மிர்சா பிடித்துள்ள இடம் 78

    அனிர்பன் லஹிரி - குழிப்பந்தாட்ட (கோல்ப் )வீர‌ரான இவருக்கு வயது 34. புனேவில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவர், உலக அரங்கில் 348 வது இடத்தில் உள்ளார்.

    உதயன் மனே - குழிப்பந்தாட்டவீர‌ரான இவருக்கு வயது 30. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர். உலக தர வரிசையில் தற்போது 360 வது இடத்தில் உள்ளார்.

    அதிதி அசோக் - குழிப்பந்தாட்ட வீராங்கனையான இவருக்கு வயது 23 . கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1998 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பிறந்தவர். உலக தர வரிசையில் 178 வது இடத்தில் உள்ளார்.
    இஷான் கி‌ஷன் தனது அறிமுக போட்டியிலேயே அதிவேகத்தில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார்.

    கொழும்பு:

    ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்று உள்ளது.

    கொழும்பில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 80 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்தது. ‌ஷமீகா கருணா ரத்னே அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். தீபக் சாகர், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்தியா 36.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது.

    கேப்டன் தவான் 95 பந்துகளில் 86 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), இஷான் கி‌ஷன் 42 பந்தில் 59 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் எடுத்த போது தவான் ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை அதிவேகத்தில் கடந்த 2-வது இந்தியர் என்ற சாதனையை பெற்றார். அவர் 140 இன்னிங்சில் 17 சதம், 33 அரை சதம் உள்பட 6063 ரன் எடுத்துள்ளார்.

    கங்குலியின் சாதனையை தவான் முறியடித்தார். கங்குலி 147 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். விராட் கோலி 136 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 6 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த வீரர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை எடுத்த 10-வது இந்திய வீரர் தவான் ஆவார். தெண்டுல்கர் (18,426 ரன்), விராட்கோலி (12,169), கங்குலி (11,221), ராகுல் டிராவிட் (10,768), டோனி (10,599), அசாருதீன் (9,378), ரோகித்சர்மா (9,205), யுவராஜ்சிங் (8,609), ஷேவாக் (7,995) ஆகியோரது வரிசையில் தவான் இணைந்தார்.

    இஷான் கி‌ஷன் தனது அறிமுக போட்டியிலேயே அசத்தினார். முதல் போட்டியிலேயே அதிவேகத்தில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார். அவர் 33 பந்தில் அரை சதத்தை தொட்டார்.

    குணால் பாண்ட்டியா அறிமுக போட்டியில் 26 பந்தில் அரை சதம் எடுத்து சாதனை படைத்து இருந்தார். 

    ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.

    ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் கொரோனாவின் பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. முதலில் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து நேற்று 3 விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. இதில் 2 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்தவர்கள். மற்றொரு வீரர் ஓட்டலில் தங்கி இருந்த வர் ஆவார்.

    இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த மேலும் 3 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த 3 பேரும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் அல்ல. ஒலிம்பிக் கிராமத்தோடு தொடர்புடையவர்கள். ஒரு பத்திரிகையாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 95-க்கும் மேற்பட்ட முதல் குழு நேற்று ஜப்பான் சென்றடைந்தது.

    இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இங்கிலாந்து தொடரில் ஆடும் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), வாஷிங்டன் சுந்தர் (சேலம்) ஆகியோர் இந்த சீசனுக்கான டி.என்.பி.எல். போட்டியில் விளையாட வாய்ப்பில்லை.
    சென்னை:

    சென்னையில் இன்று தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் கோவை-சேலம் அணிகள் மோதுகின்றன.

    தமிழ்நாட்டில் கிராம அளவிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமையை அடையாளம் கண்டு வெளிக்கொணரும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை நடந்துள்ள 4 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறையும் பட்டம் வென்றன. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 5-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. வழக்கமாக 3-4 இடங்களில் இந்த போட்டி நடத்தப்படுவது உண்டு. ஆனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறை மற்றும் மின்னொளி வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஒரே மைதானத்தி லேயே போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த சீசனில் சில அணிகளின் பெயர் மாற்றம், புதிய கேப்டன்கள், புதிய பயிற்சியாளர் என்று அதிரடி மாற்றங்கள் ெசய்யப்பட்டுள்ளன. குறிப்பாக முந்தைய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இப்போது சேலம் ஸ்பார்டன்ஸ் என்ற பெயரில் நுழைகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இங்கிலாந்து தொடரில் ஆடும் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), வாஷிங்டன் சுந்தர் (சேலம்) ஆகியோர் இந்த சீசனுக்கான டி.என்.பி.எல். போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (திருப்பூர்), தனிப்பட்ட காரணங்களுக்காக முரளிவிஜய் (திருச்சி), இங்கிலாந்து தொடரில் வர்ணனையாளராக பணியாற்றும் தினேஷ் கார்த்திக் (திருப்பூர்) ஆகியோர் விலகியுள்ளனர். இதே போல் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் அங்கம் வகிக்கும் வருண் சக்ரவர்த்தி (மதுரை), சாய் கிஷோர், சந்தீப் வாரியர்ஸ் (இருவரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) ஆகியோர் அந்த தொடர் முடிந்ததும் டி.என்.பி.எல். போட்டியில் இணைந்து கொள்வார்கள்.

    ஒரு பக்கம் முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் இன்னொரு புறம் இந்திய அணிக்காக ஆடிய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (சேலம்), ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் கலக்கிய ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் (கோவை கிங்ஸ்) மற்றும் விக்கெட் கீப்பர் ஜெகதீசன், கவுசிக் காந்தி (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), அருண் கார்த்திக் (மதுரை), முருகன் அஸ்வின், ஜி.பெரியசாமி (இருவரும் சேலம்), பாபா சகோதரர்களான அபராஜித், இந்திரஜித் மற்றும் அதிசயராஜ் டேவிட்சன்(3 பேரும் நெல்லை), ஹரி நிஷாந்த் (திண்டுக்கல்) உள்ளிட்டோரின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கொரோனா முன்ெனச்சரிக்கை எதிரொலியாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

    முதல் நாளான இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்சை சந்திக்கிறது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட இவ்விரு அணி வீரர்களும் வெற்றியுடன் போட்டியை தொடங்கும் முனைப்பில் உள்ளனர்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ×