என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக்: குதிரையேற்றம், கோல்ப் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்-வீராங்கனைகள் விவரம்
Byமாலை மலர்19 July 2021 1:44 PM GMT (Updated: 19 July 2021 1:44 PM GMT)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்றம், கோல்ப் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் குறித்த செய்தியை காணலாம்.
பவுத் மிர்சா - குதிரையேற்ற வீரரான இவருக்கு வயது 29. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1992 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. உலக அரங்கில் குதிரையேற்றத்தில் பவுத் மிர்சா பிடித்துள்ள இடம் 78
அனிர்பன் லஹிரி - குழிப்பந்தாட்ட (கோல்ப் )வீரரான இவருக்கு வயது 34. புனேவில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பிறந்தவர். ஆசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவர், உலக அரங்கில் 348 வது இடத்தில் உள்ளார்.
உதயன் மனே - குழிப்பந்தாட்டவீரரான இவருக்கு வயது 30. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர். உலக தர வரிசையில் தற்போது 360 வது இடத்தில் உள்ளார்.
அதிதி அசோக் - குழிப்பந்தாட்ட வீராங்கனையான இவருக்கு வயது 23 . கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1998 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பிறந்தவர். உலக தர வரிசையில் 178 வது இடத்தில் உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X