என் மலர்
விளையாட்டு
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழந்து 315 ரன்கள் எடுத்தது.
- ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் களமிறங்கினர் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
பொறுப்புடன் ஆடிய பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரை சதமடித்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழந்து 315 ரன்கள் எடுத்தது. 2-வது நாளான இன்று மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 378 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசிம் ஷா, யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பாகிஸ்தான் அணி 65 ரன்னில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆடி வருகிறது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வர தொடங்கி உள்ளனர்.
- இன்று மேலும் 12 நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தனர்.
சென்னை:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வர தொடங்கி உள்ளனர்.
முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர் தீவைச் சேர்ந்த வீரர்கள் வந்தனர். அதைத் தொடர்ந்து அங்கேரி, ஜாம்பியா நாட்டு அணிகள் வந்தன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஆங்காங், வேல்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா, வியாட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வந்தனர்.
இன்று மேலும் 12 நாட்டு வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தனர். உகாண்டா, கோஸ்டாரிகா, மேகன்தீவு, கஜகஸ்தான், கயானா, தான்சானியா, போலந்து, எஸ்டோனியா, பல்கேரியா, செர்பியா, சோமோரோஸ் தீவு உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் இன்று அதிகாலையில் வந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இன்று இரவுக்குள் செக்குடியரசு, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, பார்படோஸ், உக்ரைன், பப்புவா நியூ கினியா, ஈரான், கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 31 வீரர், வீராங்கனைகள் வருகிறார்கள்.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- 1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 272 ரன்கள் சேசிங் செய்திருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் -இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 115 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ஷ்ரேயாஸ் அய்யர், சாம்சன், அக்ஷர் படேல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது. வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அக்ஷர் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 35 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரியும் 5 சிக்சரும் அடங்கும்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போர்ட் ஆஃப் ஸ்பெயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் 311 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் இந்திய அணி 34 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. 1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 272 ரன்கள் சேசிங் செய்திருந்தது. அந்த சாதனையை ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி முறியடித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3-வது அதிகபட்ச ரன்களை இந்திய அணி சேசிங் செய்துள்ளது. 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி 360 ரன்களை சேசிங் செய்து முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் இலங்கை அணியும் (312) உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2004-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 64 ரன்களை விளாசி இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.
- எனது குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் தன்னலமற்ற தியாகமும் தான் நான் இத்தனை காலம் சிறப்பாக விளையாடுவதற்கு தூண்டுதலாக இருந்தது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கருணா ஜெயின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2005 முதல் 2014 வரை விளையாடிய கருணா இந்தியாவுக்காக ஐந்து டெஸ்ட், 44 ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த போட்டிகளில் முறையே 195, 987 மற்றும் 9 ரன்களை சேர்த்துள்ளார்.
அவர் 2004-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 64 ரன்களை விளாசி இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.
ஓய்வு குறித்து கருணா கூறியதாவது:-
எனது குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் தன்னலமற்ற தியாகமும் தான் நான் இத்தனை காலம் சிறப்பாக விளையாடுவதற்கு தூண்டுதலாக இருந்தது.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எனது பயிற்சியாளர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் துணைப்பணியாளர்கள் உட்பட எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
- பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது.
- ஜமைக்கா, ஜெர்மனி நாடுகள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றன.
யூஜின்:
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்தது.
கடைசி நாளான இன்று நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் சுவீடன் வீரர் அர்மன்ட் டுப் லான்ட்ஸ் புதிய உலக சாதனை படைத்தார். அவர் 6.21 மீட்டர் உயரம் தாண்டி னார்.
ஒலிம்பிக் சாம்பியனான அர்மண்ட் இதற்கு முன்பு 6.20 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து அவர் புதிய உலக சாதனை புரிந்தார்.
அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் நீல்சன் 5.94 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிலிப்பைன்ஸ் வீரர் எர்ஸைட் 5.94 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. ஜமைக்கா, ஜெர்மனி நாடுகள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றன.
அமெரிக்கா 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆக மொத்தம் 33 பதக்கத்து டன் முதல் இடத்தை பிடித்தது.
- சேலத்தில் நாளை நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் மோதுகின்றன.
- 27-ந் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நெல்லை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை சாய்த்தது. முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றிருந்த சேலம் அணிக்கு கடைசி லீக்கில் முதல் வெற்றி கிடைத்திருக்கிறது.
நேற்றுடன் லீக் சுற்று முடிவடைந்து விட்ட நிலையில் புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சேலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் மோதுகின்றன.
அதைத் தொடர்ந்து 27-ந் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நெல்லை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது தகுதி சுற்று 29-ந்தேதியும், இறுதிப்போட்டி 31-ந்தேதியும் கோவையில் நடக்கிறது.
- முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் எடுத்திருந்தது.
- வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 115 ரன்கள் குவித்தார்.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.அடுத்து களம் இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த நிகோலஸ் பூரன் 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்கள் என்ற வலுவான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேப்டன் ஷிகர் தவான் 13 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சுப்மான் கில் 43 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 63 ரன்கள் குவித்தார். சூரியகுமார் யாதவ் 9 ரன்னுக்கு அவுட்டானார். சஞ்சு சாம்சன் 54 ரன்கள் அடித்தார். ஹூடா 33 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார்.

ஒருபுறம் இந்திய விக்கெட்கள் சரிந்த போதிலும் அதிரடி காட்டிய அக்சர் படேல் 35 பந்துகளில் 65 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அக்ஷர் பட்டேல் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார்.
இந்திய அணி 49.4 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 2-வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
- சேலம் அணி வீரர் கணேசன் பெரியசாமி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
- திண்டுக்கல் வீரர் விமல் குமார் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார்.
வாழப்பாடி:
6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. திண்டுக்கல் அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சேலம் அணியினரின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
அந்த அணியின் டேரில் பெராரியோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 38 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரனவ் குமார் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். திண்டுக்கல் அணி சார்பில் சிலம்பரசன், விவேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களம் இறங்கியது. அந்த அணி கேப்டன் நிஷாந்த் டவுக் அவுட்டானார். விமல் குமார் அதிகபட்சமாக 43 ரன்கள் குவித்தார். முகுந்த், ஹரிகரன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார்கள்.
20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 18 ரன் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கணேசன் பெரியசாமி 3 விக்கெட்களும், அஸ்வின், கார்த்திகேயன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களை எடுத்தது.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதமடித்து 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற சேலம் ஸ்பர்டன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி 124 ரன்களை எடுத்தது.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.
இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. திண்டுக்கல் அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சேலம் அணியினரின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
அந்த அணியின் டேரில் பெராரியோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 38 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரனவ் குமார் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திண்டுக்கல் அணி சார்பில் சிலம்பரசன், விவேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 136 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி 100 ரன்களில் சுருண்டது.
சேலம்:
6-வது டி.என்.பி.எல். டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அனிருத் 34 ரன்கள் எடுத்தார். ஆதித்யா 26 ரன்னிலும், ஜெகதீசன் கவுசிக் 22 ரன்னிலும் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் சன்னி சந்து 8 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் மதுரை வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இதனால் திருச்சி அணி ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது.
இறுதியில், திருச்சி அணி 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் சந்தோஷ் ஷிவ் 31 ரன்னும், அமித் சாத்விக் 23 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் மதுரை அணி 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்தது.
மதுரை அணி சார்பில் ஜெகதீசன் கவுசிக் 4 விக்கெட்டும், கிரண் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது.
- ஒஷாடா பெர்னாண்டோ 50 ரன்னும், தினேஷ் சண்டிமால் 80 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கல்லே:
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.
அணியின் எண்ணிக்கை 92 ஆக இருந்தபோது, பொறுப்புடன் ஆடிய பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100வது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்த நிலையில், மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரை சதமடித்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தன்ஞ்செய டி சில்வா 33 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 2விக்கெட் வீழ்த்தினார்.






