என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை மறைமலையடிகள் சாலையில் சுதேசி மில் சுற்றுச்சுவரை ஒட்டி பூ, பழம், குளிர்பானம், இலை என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • அப்போது வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மறைமலையடிகள் சாலையில் சுதேசி மில் சுற்றுச்சுவரை ஒட்டி பூ, பழம், குளிர்பானம், இலை என பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே புதுவை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை போலீசார் உதவியுடன் புதுவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக  சுதேசி மில் சுவரை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

    அப்போது வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் 2 நாள் கால அவகாசம் கொடுத்தனர். 2 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.

    இல்லையென்றால் பொக்லைன் எந்திரம் வைத்து அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனை வியாபாரிகள் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.இதேபோல் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில ஆக்கிரமிப்பு அகற்றம் நடந்தது.

    மடுகரை பஸ் நிலையத்தில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான 20கடைகளும், மரக்காலீஸ்வரர் தேவஸ்தான கமிட்டிற்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட கடைகளும் இயங்கி வருகின்றன. கொம்யூன் பஞ்சாயத்தின் கீழ் 10கடைகள் ஏலம்விடப்பாடாமல் பூட்டியே கிடக்கின்றதது.

    பஸ் நிலைத்தில் வணிக கடை நடத்தி வருபவர்கள் அவர்களின் கடைகளுக்கு வெளியே சீமைஓடுகள் மற்றும் தகர சீட்டுகள் அமைத்து கடையை நீட்டிப்பு செய்துள்ளனர்.

    கடலூர், விழுப்புரம், புதுவை என 3 மார்க்கங்களுக்கும் பஸ்கள் மடுகரையில் இருந்து செல்கின்றது. வணிக கடை வைத்திருப்பர்கள் கடையை நீட்டிப்பு செய்துள்ளதால், பஸ்கள் திரும்புவதற்கு இடையூறாக உள்ளது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை கடையின் வாசலிலே விட்டு செல்வதாலும், பஸ் டிரைவர்களுக்கு மிகுந்த சிரமாக உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசாரன் உதவியோடு, மடுகரை பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் நீட்டிப்பு செய்துள்ள பகுதிகளை அதிரடியாக இடித்து தள்ளினர். இதனால் மடுகரை பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பு நீடித்தது. வியாபாரிகளுக்கு முன்கூட்டியே எந்தவித அறிவிப்பு இல்லாமல் பொதுப்பணித்து றையினர் செய்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வணிகர்கள் சார்பில் 2 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதால், பொதுப்பணித்துறையினர் பணியை பாதியில் விட்டு சென்றனர்.

    • புதுவை காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது.
    • கடந்த ஆண்டு முதல்- அமைச்சர் ரங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது.

    இங்கு 500 -க்கும் மேற்பட்ட மாணவ -மாணவி்கள் படித்து வருகின்றனர். இங்கு பேராசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக, பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    பஸ் வசதி மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம்,தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பூட்டிக்கிடக்கும் விடுதியை திறந்து மாணவர்களுக்கு ஒதுக்குமாறு மாணவர்கள் வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு முதல்- அமைச்சர் ரங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினார். அப்போது 3 மாதங்களில் ஆசிரியர், பற்றாக்குறை தீர்க்கப்படும். பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை இதனை கண்டித்தும் தொடர்ந்து 5 ஆண்டுகளாக நிரப்பபடாத பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி பேராசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் அனவைரும் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காவிட்டல் கவர்னர் மாளிகை, சட்டசபை ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுவையின் முக்கிய வணிக வீதியான நேரு வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்துவது வழக்கம்.
    • இதனை தடுக்க வடக்கு-கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையின் முக்கிய வணிக வீதியான நேரு வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு முன்பு நிறுத்துவது வழக்கம்.

    தற்போது பண்டிகை காலம் என்பதால் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த வழி இல்லாமல், வணிக நிறுவன ஊழியர்களின் வாகனங்களின் பின்னால் 2-ம் வரிசையில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    வாகனங்கள் நிறுத்த தடை இதனை தடுக்க வடக்கு-கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள கடை ஊழியர்கள் தங்களது வாகனங்களை கடைகளின் முன் விடாமல், பழைய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பார்க்கிங் ஏரியாவில் விட வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. ஆயினும் இதுவரை அந்த உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை.

    இதனையடுத்து நேரு வீதி வணிகர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பழைய சிறைச்சாலையில் விடுவதற்கு பார்க்கிங் கட்டணமாக மாதம் ஒன்றுக்கு ரூ.100 வசூலிக்கப்படும். ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது வாகனங்களை நிறுத்தி, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.

    அதன்படி, முதல் வணிக நிறுவனஊழியர்கள் வாகனங்களை கடை முன்பு நிறுத்த கூடாது. பொதுமக்கள் மட்டும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம். இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், துணை உதவி ஆய்வாளர் வேணுகோபால் ஆகியோர் இன்று ஒவ்வொரு கடையாக சென்று ஊழியர்களிடம் எடுத்துரைத்தனர்.

    மேலும் அவர்கள், வாகனங்களில் செல்லும்போது தாங்களாகவே முன்வந்து தலைகவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.

    • விவேகானந்தன் காரைக்கால் பொதுப்பணித்துறைக்கும், பிரேமா காமராஜர் என்ஜினீயர் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • ஊழல் குற்றச்சாட்டில் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    கழிவறை கட்டியதில் மோசடியில் ஈடுபட்டு அரசு பணத்தை ஊழல் செய்த இளநிலை என்ஜினீயர், கல்லூரி இயக்குனர் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

    புதுவையில் கடந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வட்டார வளர்ச்சி முகமை மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் புதுவை அரியாங்குப்பம் முன்னாள வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா ஆகியோர் கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டாமல் கட்டியதாக கணக்கு காட்டி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையே விவேகானந்தன் காரைக்கால் பொதுப்பணித்துறைக்கும், பிரேமா காமராஜர் என்ஜினீயர் கல்லூரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை முடிந்து அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதில் கழிவறை கட்டாமல் பயனாளிகள் பெயரை பயன்படுத்தி அரசு பணத்தை மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

    அதனடிப்படையில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் விவேகானந்தன் மற்றும் அரசு என்ஜினீயர் கல்லூரி இயக்குனர் பிரேமா ஆகியோரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி), சென்னை ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
    • இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி), சென்னை ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.

    முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் முகமத் நசீம் மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார்.

    இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்த முகாமை கல்லூரி முதல்வர் எஸ்.மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. கல்லூரி, மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி, மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி, புதுவை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் நகரை சுற்றியுள்ள பல தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அனைத்து துறை இறுதி ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி எம்.ஜெயக்குமார் மற்றும் வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து இருந்தனர்.

    • திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அடுத்த புளிச்சபள்ளம் கிராமம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அழகுசுந்தரம்.
    • அப்போது ஆம்னி வேனில் புளிச்சபள்ளம்-புதுவை பைபாஸ் சாலையில் அழகுசுந்தரம் ஆம்னி வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதை அறிந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அடுத்த புளிச்சபள்ளம் கிராமம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அழகுசுந்தரம் (வயது 52).

    இவர் தமிழக பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கும் பொது மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி புதுவை பகுதியில் உள்ள ஓட்டல்களில் குறிப்பாக சாலையோரத்தில் உள்ள நேர ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பதற்காக விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா மதிக்கு புகார் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் முகாமிட்டு அழகுசுந்தரம் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    அப்போது ஆம்னி வேனில் புளிச்சபள்ளம்-புதுவை பைபாஸ் சாலையில் அழகுசுந்தரம் ஆம்னி வாகனத்தில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதை அறிந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

    அவரிடம் தமிழக பகுதி ரேஷன் அரிசி 650 கிலோ இருந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் கடத்திய ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.

    • புதுவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சாலையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகின்றது.
    • இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும், தள்ளுவண்டிகளும் வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொது செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சாலையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகின்றது. இதில் அன்றாட வயிற்று பிழைப்புக்காக தள்ளுவண்டி உள்ளிட்டவைகள் மூலம் வைத்துள்ள நடைபாதை கடைகளும் அகற்றப்பட்டு வருகின்றது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும், தள்ளுவண்டிகளும் வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

    ஆனால் சாலையோர கடைகளை அகற்ற வரும் அதிகாரிகள் முதலில் எளிதில் அகற்ற கூடிய வகையில் உள்ள கடைகளைத்தான் அகற்றி வருகின்றனர். இவ்வளவுக்கும் அவர்கள் நகராட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு வரிகளையும் செலுத்தி வந்துள்ளனர். அதற்கான ரசீதுகளை காண்பித்தாலும் அகற்றப்பட்டு வருகின்றது.

    மேலும் எளிதில் அகற்ற கூடிய சாலையோர வியாபாரிகளை அகற்றும் அதிகாரிகளும், போலீசாரும் நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான சாலையோர இடத்தில் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ள கடைகளின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

    கைவிட வேண்டும்

    எனவே அன்றாட வயிற்று பிழைப்புக்காக சாலையோரத்தில் வைத்துள்ள கடைகளை அகற்றும் பணியை கைவிட வேண்டும். அல்லது முதலில் சாலையோரத்தில் கட்டிடங்களை கட்டி லட்சகணக்கில் சம்பாதித்து கோடீஸ்வரர்களாகி யுள்ளவர்களின் கடைகளை முதலில் அகற்ற வேண்டும்.

    மாறாக அராஜகமான நடவடிக்கையை அரசு தொடர்ந்தால் சமூக ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பாகூர் தொகு–திக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
    • இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகு–திக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தை புனரமைத்து மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால், பொதுப்பணித்துறை சார்பில் இப்பள்ளி கட்டிடத்தை ரூ.35 லட்சம் செலவில் புதுப்பித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கட்டிட ஒப்பந்ததாரர் ஆனந்தன், தி.மு.க., தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் சர்வதேச சுற்றுலா உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா புதுவையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் ரங்கசாமி,புதுவையில் சுற்றுலா துறை வேகமாக வளர்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் சர்வதேச சுற்றுலா உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா புதுவையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. புதுவை அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சிங்கப்பூர் யுனைடெட் ஹோல்டிங்ஸ் இன்க் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.

    இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளை ஆன்லைனில் இணைத்தது. சிங்கப்பூர் யுனைடெட் ஹோல்டிங்ஸ் இன்க் தலைவர் முகமது ஜின்னா வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் ரங்கசாமி,புதுவையில் சுற்றுலா துறை வேகமாக வளர்கிறது.புதுவையின் முக்கிய வருவாய் சுற்றுலா துறையில் இருந்து கிடைக்கிறது.

    புதுவையில் கடற்கரையை மேம்படுத்துவது போல ஏரி,குளங்களை அரசு மேம்படுத்துகிறது.

    தற்போது வாரத்தில் கடைசி 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.வாரத்தின் 7 நாட்களும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக புதுவையை அரசு மாற்றி அமைத்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பழமை மாறாமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கிராமப்புற சுற்றுலாவை மேம்படுத்த இந்த மாநாட்டில் ஆலோசித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் எம்.எல்.ஏ. சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இந்தியைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழி என்ற திணிப்பு எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
    • நுழைவுத் தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழி என்ற திணிப்பு எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. யார் எந்த மொழியையும் பயில்வதற்கு தி.மு.க. தடையாக இருந்ததில்லை. அரசு மிருகப்பலத்தை கொண்டு திணிப்பதைத்தான் தி.மு.க. எதிர்க்கிறது.

    நுழைவுத் தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இது அனைவருக்குமான சமஉரிமை-சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் தி.மு.க. இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கிறது.

    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணையேற்று தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன போராட்டங்களை நடத்த அறிவிப்பு செய்துள்ளார்கள்.

    அதன்படி மாநில தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் 9 மணியளவில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் நமது மாநில தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைப் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தி.மு.க. தொண்டர்கள் என அனைவரும் திரளாக தி.மு.க. கொடியுடன் அணிவகுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விதவை பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது‌.
    • மேலும் என் மேல் என்ன குறைகள் இருந்தாலும் தைரியமாக சுட்டிக் காட்டலாம் இவ்வாறு அவர் பேசினார்.

    புதுச்சேரி:

    ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விதவை பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது‌.

    இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ. சரவணன்குமார் கலந்து கொண்டு சுமார் 80 விதவை பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறு வதற்கான அட்டையை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பேசியதாவது:-

    பொது மக்களாகிய நீங்கள் உங்கள் தேவை களை என்னிடம் கட்சி அலுவலகத்திலும், சட்டசபையிலும் அல்லது எனது வீட்டிலும் நேரடியாக வந்து தெரிவிக்கலாம். உங்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் இருக்கிறேன்.

    மேலும் என் மேல் என்ன குறைகள் இருந்தாலும் தைரியமாக சுட்டிக் காட்டலாம் இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில செயலாளர் ஜெயக்குமார், தொகுதி தலைவர் தியாகராஜன், பா.ஜனதா பிரமுகர் அய்யனார், துணைத் தலைவர் முரளி, கிளை தலைவர் முரளி, ஊசுடு தொகுதி மகளிர் மேம்பாட்டு துறை பொறுப்பாளர்கள் ஜெய்சங்கர், தேவா, பிரசாந்த், கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் உள்ள ஏரி மற்றும் குளம் மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
    • மழை நீர் ஏரிப் பகுதிக்கு செல்லாமல் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நின்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள ஏரி மற்றும் குளம் மழைநீர் வடிகால் வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட மதகடிப்பட்டில் இருந்து சன்னியாசி குப்பம் ஏரிக்கு செல்லும் மழை நீர் வடிகால் வாய்க்கால் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

    இதனால் மழை நீர் ஏரிப் பகுதிக்கு செல்லாமல் பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் கோரிக்கை அளித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் 10 லட்சத்து 53 ஆயிரம்நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான தொடக்க பணி இன்று நடைபெற்றது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×