என் மலர்
புதுச்சேரி
- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- வங்கி அல்லது தனிப்பட்ட விபரங்களை அளிப்போரிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-23-ம் ஆண்டுக்கான வருவான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் வசதி கடந்தவாரம் தொடங்கியது. ஐ.டி.ஆர்.1, 4, படிவங்களை தாக்கல் செய்ய கடைசி நாளை அறிவித்துள்து. மோசடி பேர்வழிகள் சீசனுக்கு ஏற்றார்போல தங்களை அப்டேட் செய்துகொண்டு மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
தற்போது டேக்ஸ் ரீபண்ட் (வரி திரும்ப அளித்தல்) என்ற பெயரில் புதிய மோசடி ஈ.மெயில் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதில் போலி வருமான வரித்துறை இணையதள முகவரியை இணைக்கின்றனர். வங்கி அல்லது தனிப்பட்ட விபரங்களை அளிப்போரிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பாதுகாப்பு பிரிவு தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளது. இது போன்ற மோசடிகள் குறித்த தகவல்கள் கிடைத்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
- இதனால் அங்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுவையிலும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறையை நீடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி, துணை இயக்குனர் சிவகாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் யோசனை கூறப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனையின்பேரில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பள்ளிகள் ஜூன் மாதம் 7-ம் தேதி திறக்கப்படும். புதுவையில் உள்ள 127 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளி திறக்கும் நாளில் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என தெரிவித்தார்.
- புதுவை, பெங்களூரு, திருப்பதிக்கு முதல் மின்சார இன்டெர்சிட்டி பஸ் சேவையை தொடங்கியுள்ளது.
- சென்னையிலிருந்து புதுவைக்கு 12 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
கிரீன் மொபலிட்டி நிறுவனத்தின் பிரீமியம் மின்சார பஸ் பிராண்டான நியூகோ சென்னையிலிருந்து புதுவை, பெங்களூரு, திருப்பதிக்கு முதல் மின்சார இன்டெர்சிட்டி பஸ் சேவையை தொடங்கியுள்ளது.
சென்னையிலிருந்து புதுவைக்கு 12 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஒரு டிக்கெட்டின் ஆரம்ப விலை ரூ.319 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தி லிருந்து இந்த சேவை தொடங்குகிறது.
இந்த சேவைக்கு நியூகோ இணை யதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமலாகிறது.
- 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் அமலாகிறது.
1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 127 அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்துக்கு விண்ணப் பித்துள்ளன. இதில் ஒரு சில பள்ளிகளை தவிர அனைத்து பள்ளிகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
பள்ளிகள் விரைவில் திறக்க உள்ள நிலையில் சி.பி.எஸ்.இ. பாடபுத்தகம் கொள்முதல் செய்யவும் அரசின் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் ஆங்கிலம் கட்டாயமாகவும், 2 பிரிவில் தமிழ் கட்டாயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்து.
சமஸ்கிருதம், பிரெஞ்சு, இந்தி உள்ளிட்ட மொழிகள் விருப்ப பாடமாகவும் உள்ளது. மொத்தம் 19 பாடப்பிரிவுகளில் 6 பாடப்பிரிவுகளில் தமிழ் சேர்க்கப்படவில்லை. தமிழ் கட்டாயம் இல்லாமல் விருப்ப பாடமாக உள்ளதற்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதோடு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு முழுமை யாக தயாராகவில்லை. அதேநேரத்தில் சமீபத்தில் வெளியான 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. இதனால் மாணவர்களும் தயாராகாத நிலையில் உள்ளது. அவசர கோலத்தில் அரசு வேகவேகமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. வரும்காலத்தில் இது மாணவர்களின் கல்வியை பாதிக்கும்.
தாய்மொழி யான தமிழை படிக்காமலேயே மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து கல்வித்துறை முன்பு நாளை மறுநாள் முற்றுகை போராட்டம் நடத்த சமூக நல அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
அவசரகதியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே 8-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அடுத்த கல்வியண்டில் 9-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறி, 10-ம் வகுப்பில் தேர்வை எதிர்கொள்ள முடியுமா?
தமிழ் விருப்ப பாடம் என்பது தமிழை அழிக்கும் பா.ஜனதாவின் முயற்சியாக பார்க்க முடிகிறது. தமிழை கட்டாய பாடமாக அரசு பள்ளிகளில் அறிவிக்க வேண்டும். திட்டமிட்டு தமிழை பின்னுக்குதள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதை வன்மை யாக கண்டிக்கிறோம்.
தமிழை, தமிழர் பண்பாடை புகழ்வதுபோல பாசாங்கு செய்துகொண்டு, அதை அழிக்க நினைக்கும் பாதக செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இந்த கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை ஒரேயடியாக கொண்டுவருவதை கைவிட்டு, படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனால் புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை அமல்படுத்த புதுவையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
- ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை ஒரு சில மாற்றங்களை தெரிவித்துள்ளனர்.
- பள்ளி திறக்கும் முன்பே ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
புதுச்சேரி:
அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆசிரியர் புதிய இடமாற்றல் கொள்கை குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை ஒரு சில மாற்றங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து இடமாற்றல் கொள்கை முடிவு செய்யப்படும். பள்ளி திறக்கும் முன்பே ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
ஆரம்ப பள்ளிக்கு 146 ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளோம். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதா? தேர்வு நடத்தி தேர்வு செய்வதா? என அமைச்சரவை யில் முடிவு செய்யப்படும். ஆசிரியர்கள் விரைவில் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக பெற்றோர்கள், மாணவர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அந்த நிறுவனத்துடன் குறிப்பிட்ட சில ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதை நிறுத்துவதால் சட்ட சிக்கல் வருமா? என ஆலோசித்து வருகிறோம். முட்டை, சிறுதானிய உணவு வழங்க அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்.
ஏற்கனவே காலையில் பால் வழங்கி வருகிறோம். அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பொது த்தேர்வு க்கு செல்லும் மாணவர்க ளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கலை, அறிவியல் பாடங்களுக்கு கவுன்சிலிங் விரைவில் தொடங்கும். போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் வாங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்துக்கு மாறினாலும் சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது. புகாருக்குள்ளான மாகி போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர். தொடர்ந்து விசாரணைக்கு நடைபெறுகிறது. விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- தமிழக வாரிய பாடத்தில் படிக்கும் போது 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு மாணவன் 6 பாடங்கள் படிக்க வேண்டும்.
- தமிழும், ஆங்கிலமும் கட்டாய பாடங்களாக இருக்கின்றன.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வாரிய பாடத்தில் படிக்கும் போது 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு மாணவன் 6 பாடங்கள் படிக்க வேண்டும். தமிழும், ஆங்கிலமும் கட்டாய பாடங்களாக இருக்கின்றன. ஆனால் சி.பி.எஸ்.இ. முறையில் 5 பாடங்கள்தான் உள்ளது.
இதில் ஆங்கிலம் கட்டாய பாடம். தமிழ் பாடத்தை விரும்பினால் படிக்கலாமே தவிர கட்டாயமில்லை. கலை மற்றும் மானுட பிரிவில் 19 விருப்ப பாடப் பிரிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆங்கிலம் கட்டாய பாடம். ஆங்கிலத் தோடு 4 பாடங்கள் உள்ள ஒரு பிரிவை மாணவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள லாம். இதனால் மாணவர்கள் தமிழ் படிக்காமலே மேல்நிலைக் கல்வியை முடித்து விடுவார். எனவே புதுவை மக்களின் உணர்வு களை புரிந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முன்பு போல் 6 பாடங்களாக மாற்றி அதில் தமிழை கட்டாய பாடமாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கூட குடிமை பணி போன்ற அகில இந்திய பணி தேர்வில் தமிழ் பாடத்தை ஒரு பாடமாக சேர்த்துள்ளது. தமிழில் பிரதானத் தேர்வு எழுதலாம் என்று அனுமதி அளிக்கிறது. தமிழ் பேசும் புதுவையின் மைந்தர்களின் உணர்வை மதித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருக்கனுாரை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி:
திருக்கனுாரை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்வ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடந்தது. கடந்த 28-ந் தேதி திரவுபதியம்மன், அர்ஜூனன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு முத்து பல்லக்கில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இன்று 30-ம் தேதி மாலை 6 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
- ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது
- புதுவை சுதேசி மில் அருகே ஐக்கிய முன்னணி சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. புதுவை சுதேசி மில் அருகே ஐக்கிய முன்னணி சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாசிலாமணி, கீதநாதன், ரவி, புருஷோத்த மன், சாந்தகுமார், கலியமூர்த்தி தலைமை வகித்தனர். ராஜா, முருகன், பெருமாள், ராமமூர்த்தி, தாமோதரன், கருணாகரன், பிரகாஷ், கண்ணன், ஆறுமுகம், முருகையன், ஆனந்தன், நாராயணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார்.
விவசாயிகளின் கடனிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும். விவசாய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். போராட்டத்தின்போது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
2020 மின்கட்டண சட்ட முன்வடிவை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விரிவான பயிர்காப்பீடு திட்டம் கொண்டுவர வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்.
பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்களின் நிலுவை சம்பளத்தை உடனே வழங்கி நிர்வாகத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தொடர் நோய் பயனாளிகளுக்கு கடந்த 6 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
- சிறுகுளறுபடி காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் உள்ள ஆதிதிராவிடர் தொடர் நோய் பயனாளிகளுக்கு கடந்த 6 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இது சம்பந்தமாக தொகுதி எம்.எல்.ஏ, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை நேரில் சந்தித்து பயனாளிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். சிறுகுளறுபடி காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என இயக்குநர் உறுதி யளித்தார். இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநர் அசோக்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சுய தொழில் தொடங்க இருக்கும் இளைஞர்களுக்கு கடனுதவி அளிப்பது சம்பந்தமாக அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.
அதற்கு மேலாண் இயக்குநர், அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும், பகுதி பகுதியாக கடன் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் இருதயராஜ். ராகேஷ், விஜயா, ஸ்ரீனிவாசன், சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.
- இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரதிகண்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரதிகண்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
கவியரசன் அங்குள்ள காலி மனையில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த பாரதிகண்ணன் திடீரென கவியரசனை கல்லால் தாக்கினார். மேலும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
இதில் படுகாயமடைந்த கவியரசன் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கவியரசனின் சகோதரர் பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மழைநீர் சேகரிப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.
- காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுவை வேளாண் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், ஆத்மா, காலாப்பட்டு காமராஜர் அறிவியல் நிலையமும் இணைந்து "மழைநீர் சேகரிப்பு" குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. காலாப்பட்டு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார்.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தலைமை உரையாற்றி தொடங்கி வைத்தார்.
வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் விஜயகுமார் நோக்க உரையாற்றினார்.
வேளாண்துறை பொறியியல் பிரிவு துணை வேளாண் இயக்குனர் பிரபாகரன், நீர் பாதுகாப்பு மற்றும் அவற்றின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.
ஜெயச்சந்திரன் ஆரோ சொசைட்டி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த நுணுக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் புதுவை பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஆத்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆதித்தன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டை காலாப்பட்டு மற்றும் தவளகுப்பம் உழவர் உதவியக களப்பணியாளர்கள் மாசிலாமணி, பன்னீர்செல்வம், இளங்கோ, மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.
- நாளை சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலா நடக்கிறது.
- 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 23-ந் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் வாகன ரூடராய் சகோதர வீதி உலா நடைபெற்றது. விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 5 தேர்களில் முதல் தேர் சொர்ண கணபதி, 2-வது வள்ளி சமேத சுப்பிரமணியர், 3-வது தேர் செண்பக தியாகராஜர், 4-வது தேர் நீலோத்பலாம்பாள், 5-வது தேரில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் இருந்தனர்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார், திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ., பி.ஆர்.சிவா , மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
நாளை (31-ந் தேதி) சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.






