என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tax Refund"
- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- வங்கி அல்லது தனிப்பட்ட விபரங்களை அளிப்போரிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-23-ம் ஆண்டுக்கான வருவான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் வசதி கடந்தவாரம் தொடங்கியது. ஐ.டி.ஆர்.1, 4, படிவங்களை தாக்கல் செய்ய கடைசி நாளை அறிவித்துள்து. மோசடி பேர்வழிகள் சீசனுக்கு ஏற்றார்போல தங்களை அப்டேட் செய்துகொண்டு மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
தற்போது டேக்ஸ் ரீபண்ட் (வரி திரும்ப அளித்தல்) என்ற பெயரில் புதிய மோசடி ஈ.மெயில் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதில் போலி வருமான வரித்துறை இணையதள முகவரியை இணைக்கின்றனர். வங்கி அல்லது தனிப்பட்ட விபரங்களை அளிப்போரிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பாதுகாப்பு பிரிவு தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளது. இது போன்ற மோசடிகள் குறித்த தகவல்கள் கிடைத்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சேவை வரியை திரும்ப பெறமுடியாததால் சாய ஆலைகளின் நடப்பு மூலதனம் பாதிக்கப்படுகிறது.
- சேவைகளுக்கான உள்ளீட்டு வரியை கணக்கிட்டு ரீபண்ட் பெற விண்ணப்பிக்கமுடியும்.
திருப்பூர் :
திருப்பூர் சாய ஆலை சங்க தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழிவுநீர் சுத்திகரிப்புக்காக திருப்பூர் சாய ஆலைகள், 12 சதவீதம் வரி செலுத்துகின்றன. பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு செலுத்தப்படும் இந்த சேவை வரியை திரும்ப பெறமுடியாததால் சாய ஆலைகளின் நடப்பு மூலதனம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சாய ஆலை சங்கம் சார்பில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கான 12 சதவீத வரியை 5 சதவீதமாக மாற்றவேண்டும் அல்லது சாய ஆலைகளுக்கான வரியை 5 ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் உள்ளீட்டு வரியை திரும்பப்பெறும் விதிமுறையில் மாற்றம் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சேவைகளுக்கான உள்ளீட்டு வரியையும் கணக்கிட்டு ரீபண்ட் பெற விண்ணப்பிக்கமுடியும். இதற்காக, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சாய ஆலை சங்கம் நன்றி தெரிவிக்கிறது. அரசின் முறையான ஆணை வந்த பின், பொது சுத்திகரிப்பு மையங்கள், சாய ஆலைகளுக்கு எந்தெந்த வகையில் பயனளிக்கும் என தெரியவரும்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்