என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து50 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.

    மீதம் உள்ள 90 ஆயிரம் லிட்டர் பால் அண்டை மாநிலங்களில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.இந்த நிலையை மாற்றி நமது மாநிலத்திலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

    பால் உற்பத்தி யாளர்களுக்கு பாண்லே மூலம் வழங்கப்பட்டு வந்த 75 சதவீத மானிய விலையில் தீவனம் மீண்டும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. அவரது செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமியால் அவரது பதவி பறிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், அவரது கணவர் சண்முகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரபிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் தெரிவித்தார்.

    இந்தநிலையில் சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். வக்கீல்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்திரபிரியங்கா தானே நேரடியாக குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தான் ஏற்கனவே வகித்த அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் சண்முகம் ஈடுபட்டதாகவும், அதனை தட்டி கேட்டதால் அதிகார வட்ட நண்பர்கள் மற்றும் தரகர்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னை சண்முகம் கட்டுப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகளை சந்திரபிரியங்கா முன் வைத்துள்ளார்.

    மேலும் குடிகாரன், பெண் வெறியன், தன் மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண், தன்னைப் பற்றி கிசுகிசுக்களைப் பரப்பும் மற்றும் பேசும் ஒரு ஆணுடன் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்து இதை தாக்கல் செய்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கணவருடனான சந்திரபிரியங்காவின் மோதல் தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டு வரை சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவு
    • கடந்த 6 மாதமாக சந்திர பிரியங்கா தனது கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்கு வரத்துதுறை அமைச்சர் சந்திரபிரியங்கா செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் பத வியை பறித்தார்.

    அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ.வாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 6 மாதமாக சந்திர பிரியங்கா தனது கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசால் சந்திர பிரியங்காவுக்கு வழங்கப்பட்ட வீட்டில் இருந்து தனது பொருட்களை எடுக்க சென்ற சண்முகத்தை பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சண்முகம் காரைக்கால் திரும்பினார். தொடர்ந்து கணவன், மனைவி இடையே நிலவி வந்த குடும்ப பிரச்னை மோதலாக மாறியுள்ளது.

    இதற்கிடையே சந்திரபிரியங்கா டி.ஜி.பி ஸ்ரீநிவாசனை சந்தித்தார்.

    அப்போது தனது கணவர் சண்முகம், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும், அவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து விசாரித்து அறிக்கை தரும்படி, காரைக்கால் சீனியர் எஸ்.பி. கவுகால் நிதினுக்கு (பொறுப்பு) உத்தர விட்டுள்ளார். தற்போது சீனியர் எஸ்.பி. விடுப்பில் சென்றுள்ளார். 5 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருமாறு சண்முகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    புகார் குறித்து காரைக்கா லில் உள்ள சந்திர பிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்ட போது, எனக்கு கொலை மிரட்டல் அதிகம் உள்ளது. எனக்கு எதிராக சதி வேலை நடக்கிறது. எனவே இது தொடர்பாக சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்து உள்ளேன் என்றார்.

    • ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கு என தனித்தனியே ஷோரூம்கள் செயல்படுகிறது.
    • பெண்களுக்கான குர்தி வகை டிரஸ்கள் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நேரு வீதி ராஜேந்திராஸ் துணிக்கடை யில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளு படியில் ஆடைகள் விற்பனை செய்யப்படு கின்றன.

    புதுச்சேரி நேரு வீதியில் ராஜேந்திராஸ் துணிக்கடை கடந்த 27 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கு என தனித்தனியே ஷோரூம்கள் செயல்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான புத்தம் புதிய டிசைன்கள் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளன.

    மேலும் உலகத் தரம் வாய்ந்த கம்பெனிகளான ரேமான்ஸ், லெனின் கிளப், பிளாக்பெர்ரிஸ், சன் நெக்ஸ், போன்ற கம்பெனிக ளின் ஆடைகள் ஆண்க ளுக்காக குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகளுக்கும் சிறப்பு தள்ளுபடி விற்பனை வழங்கப்படுகிறது.

    மேலும் பெண்களுக்கான பட்டுப் புடவைகள், பேன்சி சாரிகள், சுடிதார் வகைகள், புத்தம் புதிய டிசைன்களில் விற்பனைக்கு குவிக்கப்ப ட்டுள்ளது. பெண்களுக்கான குர்தி வகை டிரஸ்கள் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சலுகை தீபாவளி வரை நடைபெற உள்ளது.

    • மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சங்கர், வாலிபர், மாதர் மாணவர் சங்க தலைவர்கள் ஆனந்த், இளவரசி, பிரவீன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வ லமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    • 14 ஆண்டு தண்டனை முடிந்தும், விடுதலை செய்யப்படவில்லை.
    • பிற மாநிலங்கள் போல புதுவை யிலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் ஆயுள் கைதிகள் 8-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இவர்கள் 14 ஆண்டு தண்டனை முடிந்தும், விடுதலை செய்யப்பட வில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காந்தி, காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாளில் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

    ஆனால் புதுவையில் இது போன்ற நடைமுறை இல்லை. இந்த கைதிகளில் சிலர் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த கைதிகளை விடுவிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் மனு அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று புதுவை தலைமை நீதிபதி சந்திரசேகரனை ஆயுள் தண்டனை கைதிகளின் குடும்பத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில், 14 ஆண்டுகள் முடிந்தும் பல ஆண்டாக தங்கள் குடும்பத்தி னர் சிறையில் உள்ளனர். நன்னடத்தையை சுட்டிக்காட்டி சிறை நிர்வாகம் விடுவிக்க முடி யாது என கூறி வருகிறது.

    இந்த கைதிகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். சிலர் சிறைக்குள் தொழில்கள் செய்துள்ளனர், அவர்களுக்கு சான்றிதழம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை விடுவிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. 

    • முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி சுதேசிமில் அருகே வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர்.
    • பல்நோக்கு ஊழியர்கள் காலி பணியிடத்தை வவுச்சர் ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் 10 ஆண்டாக பணிசெய்த ஊழியர்களுக்கு பணிநி ரந்தரம் செய்யப்பட்டு, ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்ப டும் என முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தார்.

    இதை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி அரசு பணியா ளர்கள் நல கூட்டமைப்பினர் ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி சுதேசிமில் அருகே வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் நுற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஆயிரத்து 500 வவுச்சர் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பல்நோக்கு ஊழியர்கள் காலி பணியிடத்தை வவுச்சர் ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

    மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சட்டக்கூலி ரூ.852 வழங்க வேண்டும். விடுபட்ட 117 ஊழியர்களை பொதுப்பணித்துறையில் இணைத்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • தொழிலாளர் நலன் குறித்து விசாரணை
    • தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர்கள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதில் 14 தொழிலாளர்கள் உடல் கருகி படுகாயமடைந்தனர். இவர்களில் 11 பேர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த சம்பவம் காரணமாக காலாப்பட்டு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு ள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தொழிலாளர் துறையின் தொழிலக ஆய்வக பிரிவு அதிகாரி முரளி தலை மையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    தீ விபத்து நடந்த ரெக்கவரி யூனிட், டிரை யூனிட் பகுதிகளில் தடயங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்த அதிகாரிகள், விபத்து குறித்து விளக்கி ஆய்வறி க்கையை ஒப்படைத்தனர்.

    இதையடுத்து அந்த தொழிற்சாலையில் மருந்து உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையாணை நோட்டீஸ் கம்பெனியின் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்களை கொண்டு ஆராயவும் புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

    தீ விபத்து தொடர் பாகவும், தொழிலாளர் பாதுகாப்பு குறித்து கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தர விட்டுள்ளனர். தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தொழிற்சாலையை நடத்த அனுமதியளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இதனிடையே காலாபட்டில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.இதனால் தொழிற்சாலை முன்பும், சுற்றுப்புற கிராமங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

    • விபத்து நடந்த தொழிற்சாலையை பொதுமக்கள் அடித்து சூறையாடிய நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    • அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் காலாப்பட்டு கோயிலில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காயமடைந்த அனைவரும் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த தொழிற்சாலையை பொதுமக்கள் அடித்து சூறையாடிய நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையை முழுமையாக மூட வேண்டும் என்று கூறி இன்று காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனகச் செட்டிகுளம், பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ பஞ்சாயத்து நிர்வாகி வேலு தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விபத்து நடந்த தனியார் தொழிற்சாலை மீது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினர். மேலும் அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு உறுதி தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. விபத்து நடந்த தனியார் தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    இதனை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் காலாப்பட்டு கோயிலில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுமார் ஒரு மணி நேர மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
    • தேசிய விசாரணை அமைப்புகள் புதுவைக்கு வந்து விசாரிப்பது சட்ட ஒழுங்கு சீர்குலைவை வெளிக்காட்டுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

     புதுச்சேரி மதுச்சேரியாக, கஞ்சா சேரியாக, ஊழல் சேரியாக மாறியுள்ளது. இப்போது கொலை சேரியாகவும் மாறுகிறது. அடிக்கடி வெட்டவெளியில் கொலைகள் சாதாரணமாக நடப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதைத்தான் பெஸ்டு புதுவை என கவர்னர் பெருமையோடு சொல்கிறாரா? அமைதி பூங்காவாக இருந்த புதுவையில் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் குற்றங்கள் நெஞ்சுருக்கும் நிலையில் உள்ளது. தேசிய விசாரணை அமைப்புகள் புதுவைக்கு வந்து விசாரிப்பது சட்ட ஒழுங்கு சீர்குலைவை வெளிக்காட்டுகிறது.

    இதைத்தான் எல்லா துறைகளும் வளர்ந்துள்ளது என முதல்- அமைச்சர் சுதந்திர தின உரையில் கூறுகிறாரா உருளையன் பேட்டையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என கொலை நடக்கும் முன்பே தொகுதி எம்.எல்.ஏ. நேரு காவல் துறையை எச்சரித்துள்ளார். ஆனால் காவல்துறை இதை கண்காணிக்கவில்லை. குற்றங்கள் நடக்கும் முன்பே தடுப்பதுதான் திறமையான காவல்துறை.

    அதற்கு கண்காணிப்பு பிரிவை வலுப்படுத்த வேண்டும். சமூக ஆய்வு நடத்தி நிரந்தரமான சமூக, பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தால்தான் புதுவை குற்றங்களிலிருந்து விடுபட்டு அமைதி பூமியாக உருவெடுக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பிராங்களின், தமிழ் எழுத்தாளர் சங்கம் புதுவை தமிழ்நெஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    • நிலத்தடி நீருக்கு ஆதாரமான வேல்ராம்பட்டு ஏரியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பொதுப்ப ணித்துறை பொறியா ளர்களை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்துக்கு லோகுஅய்யப்பன் தலைமை வகித்தார். மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், திராவிடர் கழகம் சிவவீரமணி, வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர்களம் அழகர், பெரியார்சிந்தனையாளர் இயக்கம் தீனா, அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், ராவணன் படிப்பகம் அபிமன்னன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தேசிய இளைஞர் முன்னணி கலைபிரியன், பீ போல்ட் பஷீர்அகமது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பிராங்களின், தமிழ் எழுத்தாளர் சங்கம் புதுவை தமிழ்நெஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தையொட்டி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தின் நுழைவுவாயிலை ஊழியர்கள் பூட்டினர். இதையடுத்து பொதுப்பணித்துறை நுழைவுவாயிலை முற்றுகையிட்டு சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி கோஷம் எழுப்பினர். நிலத்தடி நீருக்கு ஆதாரமான வேல்ராம்பட்டு ஏரியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பொதுப்ப ணித்துறை பொறியா ளர்களை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

    • மீனவ மக்களும் மீன் விற்பனை செய்வதால் அவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
    • மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் அந்தப்பகுதியில் சாகும் வரை கருப்புக் கொடி ஏந்தி உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் அருகே தந்திராயன்குப்பம் மீனவ பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    மீன்பிடி தொழிலை பிரதானமாக செய்து அவர்கள் படகை தங்களுடைய பகுதியில் நிறுத்தி வருகின்றனர்.

     இந்நிலையில் பக்கத்து மீனவர் பகுதியான சின்னமுதலியார்சாவடி மீனவர்கள் அவர்களது பகுதியில் படகை நிறுத்த இடம் இல்லை எனக் கூறி தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் படகுகளை நிறுத்தி வருகின்றனர்.

    இதனால் தந்திராய்குப்பம் மீனவர்களுக்கு இடம் பற்றாக்குறை உள்ளதாகவும் தந்திராயன் குப்பம் பகுதியில் இரண்டு மீனவ மக்களும் மீன் விற்பனை செய்வதால் அவர்களுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் படகு நிறுத்த இடம் இல்லாததாலும், பக்கத்து மீனவ கிராம மக்கள் இங்கு வந்து மீன் விற்பனை செய்வதால் தங்களுக்கு பொருளாதாரம் பாதிப்பு ஏற்படுவதாகவும் உடனே சந்திராயன் குப்பம் பகுதியில் உள்ள சின்ன முதலியார் சாவடி மீனவ படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்திராயன்குப்பம் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் அந்தப்பகுதியில் சாகும் வரை கருப்புக் கொடி ஏந்தி உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    தந்திராயன் குப்பத்தில் உள்ள சின்ன முதலியார் சாவடி மீனவ படகுகளை உடனடியாக அகற்றாவிட்டால் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்த நிலையில் அங்கு கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் அங்கு வானூர் தாசில்தார் நாராயணமூர்த்தி, கடலோர காவல் படை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் தந்திராயன் குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

    ×