search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுச்சேரியான புதுச்சேரி கொலைசேரியாக மாறுகிறது
    X

    கோப்பு படம்.

    மதுச்சேரியான புதுச்சேரி கொலைசேரியாக மாறுகிறது

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
    • தேசிய விசாரணை அமைப்புகள் புதுவைக்கு வந்து விசாரிப்பது சட்ட ஒழுங்கு சீர்குலைவை வெளிக்காட்டுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மதுச்சேரியாக, கஞ்சா சேரியாக, ஊழல் சேரியாக மாறியுள்ளது. இப்போது கொலை சேரியாகவும் மாறுகிறது. அடிக்கடி வெட்டவெளியில் கொலைகள் சாதாரணமாக நடப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதைத்தான் பெஸ்டு புதுவை என கவர்னர் பெருமையோடு சொல்கிறாரா? அமைதி பூங்காவாக இருந்த புதுவையில் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் குற்றங்கள் நெஞ்சுருக்கும் நிலையில் உள்ளது. தேசிய விசாரணை அமைப்புகள் புதுவைக்கு வந்து விசாரிப்பது சட்ட ஒழுங்கு சீர்குலைவை வெளிக்காட்டுகிறது.

    இதைத்தான் எல்லா துறைகளும் வளர்ந்துள்ளது என முதல்- அமைச்சர் சுதந்திர தின உரையில் கூறுகிறாரா உருளையன் பேட்டையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது என கொலை நடக்கும் முன்பே தொகுதி எம்.எல்.ஏ. நேரு காவல் துறையை எச்சரித்துள்ளார். ஆனால் காவல்துறை இதை கண்காணிக்கவில்லை. குற்றங்கள் நடக்கும் முன்பே தடுப்பதுதான் திறமையான காவல்துறை.

    அதற்கு கண்காணிப்பு பிரிவை வலுப்படுத்த வேண்டும். சமூக ஆய்வு நடத்தி நிரந்தரமான சமூக, பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தால்தான் புதுவை குற்றங்களிலிருந்து விடுபட்டு அமைதி பூமியாக உருவெடுக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×