என் மலர்tooltip icon

    கதம்பம்

    • சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சுரைக்காய் சாப்பிடுவது மிகச்சிறந்தது ஆகும்.
    • சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலை அடையும்.

    கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு உடல் சூடு ஏற்படும். இந்த உடல் சூட்டை குறைக்க சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. நாவறட்சியை போக்கும். மேலும் சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.

    சுரைக்காயில் பல்வேறு மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது.

    சுரைக்காய் வைட்டமின் பி மற்றும் சி சத்துக்களை கொண்டுள்ளது. இவற்றை சாப்பிடுவதால் உடல் பலமாக இருக்கும்.

    சுரைக்காயின் சதை பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வந்தால் சிறுநீரக கோளாறு படிப்படியாக குறையும்.

    சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சுரைக்காய் சாப்பிடுவது மிகச்சிறந்தது ஆகும்.

    சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலை அடையும்.

    சுரைக்காயை வெயில் காலத்தில் தொடர்ந்து சாப்பிட, வெப்ப நோய்கள் தாக்காமல் காப்பதோடு சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கும்.

    சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.

    அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம்.

    வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி நீங்க வேண்டுமெனில் சுரைக்காயின் சதை பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட வேண்டும். இதனால் தலைவலி நீங்கும்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலானோர் கணினி சம்பந்தமான பணிகளில் இருப்பதால் கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய கண் குறைபாடுகள் நீங்க சுரைக்காயை பயன்படுத்தலாம்.

    சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது. சுரைக்காயின் இலைகளை நீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகி வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கை, கால் எரிச்சல் உள்ள இடத்தில் சுரைக்காயின் சதை பகுதியை வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும்.

    -கணேஷ்ராம்

    • மார்புச்சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்கு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.
    • கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது.

    மஞ்சள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சருமப் பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே.

    மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள். புண்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. அழற்சி-வீக்கத்தை குறைக்கும் அற்புதமான நிறமி.

    மஞ்சளில் நச்சுத்தன்மை கிடையாது. மார்புச்சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்கு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன் தரும்.

    மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பான பட்டியலுக்கு முடிவே கிடையாது. ஏற்கனவே, சொன்ன பலன்களைத் தாண்டி கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது. மண்ணீரல், கணையம், வயிற்றுச் செயல்பாடுகளை அது மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்குகிறது. செரிமானத்தை எளிதாக்குவதுடன், கருப்பை கட்டிகள், கருப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்கிறது.

    பாக்டீரியாவையும் அழிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவை முறைப்படுத்தவும் சிலர் மஞ்சளைப் பயன்படுத்துகிறார்கள். மஞ்சளில் இருக்கும் சத்துகள் என்று பார்த்தால் இரும்புச்சத்து, மாங்கனீசு, வைட்டமின்-பி6, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.

    • ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.
    • குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள்.

    இருபத்தைந்து வயதானாலும் பலர் மொபைல் போனில் புது புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது.

    அதேநேரம் பல் முளைக்காத சின்னஞ்சிறுசுகள் செல்போன் கேட்டு அடம் பிடிப்பதையும் செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகி விடுவதையும் வீடுகள் தோறும் காண முடிகிறது. செல்லுக்கு கட்டுப்படும் குழந்தைகள் தாயின் சொல்லுக்குகூட கட்டுப்படுவது இல்லை. அந்த குழந்தைகளே செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் போன்ற படங்களை பார்த்தும் ரசிக்கிறது.

    அதை பார்த்ததும் 'ஆஹா... என் பிள்ளையின் ஆற்றலைப் பார்...! என்று பெருமைப்படும் பெற்றோரும் உண்டு. என் குழந்தைகள் எப்போதும் செல்போனில்தான் விளையாடும். அவனுக்கு செல்போனை கையில் கொடுத்தால் போதும் இரவில் கூட பக்கத்தில் வைத்து கொண்டுதான் தூங்குவான். 'என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும். செல்போனை கையில் கொடுத்தால்தான் சாப்பிடும்..." இது தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதி!

    ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோபசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.

    ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள்.

    நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது.

    உலகம் முழுவதும் செல்போன் விற்பனை செய்யும் உலக கோடீசுவரரான டிம் குக் தனது குழந்தைக்கு விளையாட செல்போன்கள் கொடுப்பதில்லை என்பதை நம்ப முடிவதில்லை.

    ஆனால் குழந்தையின் ஆரோக்கியம் கருதி செல்போன் கொடுப்பது கிடையாது என்பதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

    கொரோனா பெருந்தொற்று காலகட்டம்தான் பலரையும் கட்டாயமாக செல்போனுக்குள் மூழ்க வைத்தது.

    ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் செல்போன்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. எனவேதான் தேவைக்கான என்ற நிலை மாறி செல்போன்களிலேயே மூழ்க வைத்து விட்டது.

    குழந்தைகள் செல்போன்களின் ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்த்து கொண்டிருந்தால் அவர்களுக்கு பல், கண் பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடுகள் ஏற்படலாம்.

    பேச்சு திறன் குறையும். மற்றவர்களோடு பேசும் திறன் குறையும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து பழகவோ, விளையாடவோ முடியாமல் தனிமைப்பட்டு விடுகின்றன.

    குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பில் சுமார் 60 சதவீத குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்களாம். அதிலும் 31 சதவீதம் பேர் 2 வயதுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கி விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    குழந்தை பருவம் என்பது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மூளை செல்களை வலுப்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கட்டமாகும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் எந்நேரமும் அல்லது அதிக நேரம் போன்களில் மூழ்கி இருக்கும் போது, அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை தவிர்க்கிறார்கள்.

    தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு செய்ய கூடியது. அதிலும் குறிப்பாக Blue light radiation-க்கு தொடர்ந்து கண்களை வெளிப்படுத்துவது, ஒருவரது விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை பாதிக்கிறது. தவிர குறுகிய கால நினைவாற்றலில் (short-term memory) குறுக்கிடுகிறது.

    இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியேறும் புளூ ரேடியேஷன்ஸ், இது இரவல்ல பகல் என்று மூளையை நம்ப வைக்கிறது. இதனால் உடல் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே அடுத்த நாள் தூக்கமின்றி களைப்பாகவும் எந்த வேலையையும் முழு திறனில் செய்ய முடியாமலும் ஒருவர் பாதிக்கப்படுவார்

    செல்போனில் மூழ்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்துள்ளதால் பள்ளிகளுக்கு ஓரிரு நாள் விடுமுறை கிடைத்தாலே ஏன்தான் விடுமுறை விட்டார்களோ என்று நினைக்கிறார்கள்.

    இந்த நிலையில் கோடை விடுமுறை வர உள்ளது. இதில் 85 சதவீத குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடப்பார்களே என்று பெற்றோர்கள் கவலையில் மூழ்கி இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

    அமேசான் நிறுவனம் நாடு முழுவதும் 10 மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 2 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் 750 பெற்றோரிடம் ஆய்வை நடத்தி உள்ளது.

    செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களில் மூழ்கும் போது குழந்தைகளிடம் சுறுசுறுப்பான உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதாக 90 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    2 மணி நேரம் வரை செல்போன்களை பயன்படுத்தலாம் என்று கூறும் நிலையில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    96 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு அழைத்து செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    82 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகள் கவனத்தை திசை திருப்பி வேறு எந்தவிதமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

    இதில், குழந்தைகள் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 50 சதவீத பெற்றோரும், நல்லொழுக்கம் மற்றும் சமூக பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டுமென 45 சதவீத பெற்றோரும், நடனம், பாட்டு, இசைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 36 சதவீத பெற்றோரும், கலை மற்றும் கைவினை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும் விருப்பம் கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது' என்றார்.

    • தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும்.
    • தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும்.

    மணி எட்டு ஆச்சுடா... இன்னுமா தூங்குறே என்று அம்மாவோ, அப்பாவோ அலாரம் அடித்த பிறகுதான் பெரும்பாலும் படுக்கையில் இருந்து லேசாக புரள்வார்கள்.

    ஆனாலும் எழும்ப மாட்டார்கள். ஏம்மா தூக்கத்தை கெடுக்கிறே என்றுதான் கோபப்படுவார்கள். ஆனால் இப்போது தூக்கம் வராததே பலருக்கு பிரச்சினையாகி வருவது ஆச்சரியமாகி உள்ளது.

    பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

    சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எல்லா நோய் சார்ந்த பிரிவுகளைபோல் தூக்க குறைபாடு சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த துறைக்கு பிரத்யேகமாக மருத்துவ குழுவினரும் இருக்கிறார்கள். இதுபற்றி மருத்துவர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் தூக்கம்தான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம். அயர்ந்து தூங்கி எழுந்தாலே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.

    தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. இருப்பினும் வயதுக்கு ஏற்ப தூக்க முறையில் மாற்றமும் வரும். உதாரணமாக வயதானவர்களுக்கு இரவில் தூக்கம் குறையலாம். அதற்கு ஈடுகட்டும் வகையில் பகலில் தூங்குவார்கள்.

    தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும். அன்றாடம் செய்யும் வேலை திறனை குறைக்கிறது.

    அது மட்டுமல்ல. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதயநோய் போன்றவற்றை அதிகரிக்க செய்யும். உடலில் இருக்கும் பல்வேறு வலிகள், மோசமான உணவு பழக்கங்கள், பணி நேர மாறுதல்கள், மனஅழுத்தம், கவலை, ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

    ஆஸ்துமா, கீல்வாதம், நெஞ்செரிச்சல், நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களாலும் தூக்கம் கெடும். ஒரு நோயாளியின் தூக்கமின்மைக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். சிறந்த தூக்க பழக்கத்தை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்.

    * சோர்வாக உணரும்போது மட்டும் தூங்க வேண்டும்.

    * தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் சூடான பால் குடிக்கலாம்.

    * படுக்கை அறை அமைதியாகவும், இருட்டாகவும் இருக்க வேண்டும்.

    * படுக்கைக்கு செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

    * படுக்கையில் டி.வி. பார்ப்பது, படிப்பது, செல்போன் பயன்படுத்துவது, லேப்டாப்பில் மூழ்கி இருப்பது, கவலைப்படுதலை தவிர்க்க வேண்டும். இவை தூக்கத்தை கலைத்துவிடும்.

    தூக்க கோளாறுகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானது.

    நேத்து ராத்திரி...யம்மா தூக்கம் யோச்சுடி...யம்மா என்பது இரவு சுகமான அனுபவமாக இருக்கலாம்.

    எந்நாளுமே தூக்கம் போச்சே என்று புலம்பினால் அது சோக வாழ்க்கையின் அறிகுறிதான்.

    • ஏதாவது ஒரு பாடலை இயற்றி தானே மெட்டமைத்து, பெஞ்ச்சிலோ, தீப்பெட்டியிலோ தாளம் போட்டுக்கொண்டு பாடுவாராம்.
    • எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற, அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அழியாத மிகப்பிரபலமான “தூங்காதே தம்பி தூங்காதே” பாடல்.

    அப்போது சென்னை மைலாப்பூரில் தங்கியிருந்த காமெடி ஏ.வீரப்பன் அறைக்கு அடிக்கடி போவாராம் பட்டுக்கோட்டையார். சில சமயம் இரவில் அங்கேயே தங்கிவிடுவது உண்டாம்.

    ஆனால் கவிஞர் எப்பொழுதும் அதிகாலையில் எழுந்துவிடுவாராம். எழுந்து ஏதாவது ஒரு பாடலை இயற்றி தானே மெட்டமைத்து, பெஞ்ச்சிலோ, தீப்பெட்டியிலோ தாளம் போட்டுக்கொண்டு பாடுவாராம்.

    ஆனால் அங்கு தங்கியிருக்கும் வேறு சில நண்பர்கள் பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் தூங்கிக் கொண்டு இருப்பார்களாம். அப்படி ஒருநாளில் இதைப் பார்த்த வீரப்பன்,தமாஷாக

    "தூங்காதீங்க தம்பிகளா தூங்காதீங்க...

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக்

    கெடுத்து இப்படி சோம்பேறி ஆகாதீங்க "

    என எதார்த்தமாகச் சொன்னாராம்.

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த கவிஞர், "மாப்ள! ஒரு பாட்டுக்கு பல்லவி கிடைக்காம திண்டாடிட்டு இருந்தேன். அருமையான பல்லவியைக் கொடுத்து விட்டீங்க"என்று கூறி, அப்பொழுதே பாடலை எழுதி அதற்கு மெட்டமைத்து, தாளம் போட்டுக்கொண்டே பாடினாராம்.

    அதுதான் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற, அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அழியாத மிகப்பிரபலமான "தூங்காதே தம்பி தூங்காதே" பாடல்.

    -பரதன் வெங்கட்

    • ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி “சார் நீங்கள் உடனே கிளம்பலாம்” என்றார்.
    • ‘பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா.

    1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) எம்.ஆர். ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான்.

    வீட்டில் தூங்கி கொண்டிருந்த எம்.ஆர்.ராதா அவர்களை இரவில் எழுப்பி மிசாவில் கைது செய்து சிறையில் அடைந்தார்கள்.

    சிறையில் அவரை பார்க்க வந்த அவரது மனைவி, "இனிமே இப்படி செய்யமாட்டேன்னு" எழுதிக் கொடுத்தா விட்டுருவாங்கலாமே... நீங்க எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே? என்று புலம்பினார்.

    எம்.ஆர்.ராதா பதில் சொன்னார்; "அட நீ வேற...தூங்கிக்கிட்டு இருந்தவனை தூக்கிட்டு வந்து ஜெயிலிலே போட்டுருக்காங்க. இனிமே தூங்கமாட்டேன்னா எழுதி கொடுக்கமுடியும்..?அவனா புடிச்சான்...அவனே விடட்டும்!"

    நடிகவேள் ராதாவின் மரண கலாய்!

    ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி "சார் நீங்கள் உடனே கிளம்பலாம்" என்றார்.

    'பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்' என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா.

    இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.

    -வள்ளியம்மை

    • மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் ‘ட’ இருக்கிறதா, அப்ப இங்கே மூன்று சுழி ‘ண்’ தான் வரும்.
    • கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் ‘ற’ இருக்கிறதா, அங்கு இரண்டு சுழி ‘ன்’ தான் வரும்.

    எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லித்தர பிள்ளைகளுக்குச் சில விளக்கங்கள்...

    "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?

    ஓர் எளிய விளக்கம் :-

    மூன்று சுழி "ண", இரண்டு சுழி "ன" மற்றும் "ந" என்ன வித்தியாசம்?

    தமிழ் எழுத்துகளில் இரண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

    "ண" இதன் பெயர் டண்ணகரம்,

    "ன" இதன் பெயர் றன்னகரம்,

    "ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

    மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதற்கு "டண்ணகரம்" என்று பெயர்.

    தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருகிறதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு "றன்னகரம்" என்று பெயர்.

    இது இரண்டும் என்றுமே மாறி வராது..நினைவில் கொள்க..

    மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் 'ட' இருக்கிறதா, அப்ப இங்கே மூன்று சுழி 'ண்' தான் வரும். ஏன் என்றால் அது "டண்ணகரம்".

    கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தால்... பக்கத்தில் 'ற' இருக்கிறதா, அங்கு இரண்டு சுழி 'ன்' தான் வரும். ஏன் என்றால் அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம்.

    இதே மாதிரிதான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" என்று சொல்ல வேண்டும். ஏன் என்றால் இந்த 'ந்' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

    -வங்கனூர் அ.மோகனன்.

    • மற்றவர்களைவிட நாம் தாழ்ந்து தான் போய்விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், மனம் உடைந்து போய்விடும்.
    • தனிமை, யாரைப் பார்த்தாலும் தேவையில்லாத மன எரிச்சல் இவற்றின் வித்தாகிவிடும்.

    " உன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, உன் அகங்காரத்தின் விளையாட்டுதான்.

    ஒப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும்.

    அது எந்த விதத்திலும் துன்பத்தை தந்து விடும்.

    இரண்டு வகையிலும் துயரம் உன்னை ஆட்கொண்டு விடும்.

    ஒன்று, மற்றவர்களைவிட நீ உயர்ந்தவன் என்ற எண்ணம் உனக்குத் தோன்றிவிட்டால், அது ஒருவித பெருமிதத்துடன், தேவையில்லாத ஆணவத்தையும் உனக்குள் ஏற்படுத்திவிடும்.

    அது, மன இறுக்கம், தனிமை, துயரம் இவற்றின் விதையாகி விடும்.

    இரண்டு, மற்றவர்களைவிட நாம் தாழ்ந்து தான் போய்விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், மனம் உடைந்து போய்விடும். அது, தனிமை, யாரைப் பார்த்தாலும் தேவையில்லாத மன எரிச்சல் இவற்றின் வித்தாகிவிடும்.

    இரு விதத்திலும், துயரமும், துன்பமும்தான்.

    இந்த இரண்டு பாறைகளுக்கு இடையே சிக்கி,நொறுங்கிப் போய்விடும் வாழ்க்கை.

    இவைகள், வாழ்வின் தொடர் எண்ணங்களாகவும் போய்விடும்.

    ஆகையால், மற்றவர்களுடன், உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடுவது நல்லது.

    • பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை மட்டுமே விரும்புகிறது.
    • பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.

    பசும் பாலுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கும் புரியாது. பெரும்பாலான மக்களுக்குத் எதுவுமே தெரியாது பசுவுக்கும், எருமை மாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்வேமே!

    * எருமை சேற்றை (சகதியை) விரும்புகிறது.

    * பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை மட்டுமே விரும்புகிறது.

    * எருமையை 2 கி.மீ. தூரம் கொண்டு போய் விட்டுவிட்டால். வீடு திரும்பமாட்டார். நினைவு சக்தி பூஜ்ஜியம்.

    * நாம் ஒரு பசு மாட்டை 5 கி.மீ. தொலைவில் விட்டாலும், அது வீட்டிற்குத் தானாக திரும்பும்.

    * பசும்பாலுக்கு நினைவாற்றல் சக்தி உண்டு.

    * பத்து எருமை மாடுகளை கட்டி வைத்து விட்டு அதன் குழந்தைகளை விட்டு சென்றால் ஒரு குட்டி கூட தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளாது.

    * ஆனால் பசுவின் கன்று, சில நூறு மாடுகளுக்கு நடுவே இருந்தாலும் தன் தாயை அடையாளம் கண்டு விடும்.

    * பாலை கறக்கும் போது எருமை தன் பால் முழுவதையும் கொடுக்கிறது.

    * பசு தன் குட்டிக்காக சிறிது பாலை மறைக்கிறது. குட்டி குடிக்கும் போது தான் சேமித்து வைத்த பாலை வெளியிடுகிறது.

    * பசுவின் பாலில் மென்மை உள்ளது.

    * எருமையால் வெயிலையோ, அதிகமான வெப்பத்தையோ தாங்க முடியாது.

    * பசு மே-ஜூன் மாதங்களில் வரும் சூரியனையும் தாங்கும்.

    * எருமை பெரியது, சோம்பேறி மற்றும் விரைவாக கத்துவதில்லை. இதன் பால் கெட்டியானது மற்றும் ஜீரணிக்க கடினமாக உள்ளது. அதன் பாலை நாம் உட்கொள்ளும் போது நமக்கும் அதே சோம்பல் மற்றும் அஜீரணம் ஏற்படுகிறது. எருமை பால் கறக்கும் நேரத்தில் உரிமையாளரலே வளர்க்கப்படுகிறது.

    * பசுவின் கன்று தாயிடமிருந்து கன்று பிரிந்தால் அதைக் கையாள்வது மிகவும் கடினம். பால் கறக்கும் நேரத்தில் கன்றுக்குட்டியை கட்டுப்படுத்த முடியாது, அது தன் பங்கு பாலை தாயிடம் இருந்து குடித்து முடித்த பிறகும். அந்த அக்கறையும் மென்மையும் அதன் பாலில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

    பசுவின் முதுகில் இருக்கும் "நரம்பு" வெயில் இருக்கும் போது விழித்துக் கொள்ளும். இந்த நரம்பு சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் பிரபஞ்சத்தில் இருந்து "காஸ்மிக் சக்தியை" உறிஞ்சுகிறது. அதனால் நோய்களை நீக்கும் சக்தி பசும்பாலுக்கு உண்டு. பிரபஞ்சத்தில் உள்ள எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சக்தி இல்லை.

    உண்மையில், பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது, மேலும் நமது உடலிலும் சர்க்கரை அதிகரிக்கிறது (ஜெர்சி பாலில் அதிகமாக உள்ளது) சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல தல்ல. ஆனால் பசுவின் பாலை உட்கொள்ளும் போது அதற்கு நேர்மாறாக இருக்கும்.

    * எருமைப் பாலை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கும் போது அதில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது சத்து ஆவியாகிவிடும்.

    * பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.

    • சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது!
    • சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி!

    உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது! அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னணியில் இருந்தது!

    இந்தியா பூனை, பாகிஸ்தான் பூனை, ஜெர்மனி பூனை, ஆஸ்திரேலியா பூனை, இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!

    அமெரிக்கா பூனையல்லவா, பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு, கொழுவென இருந்தது!

    கடைசி இறுதி சுற்று.... இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்! பார்வையாளர்களுக்கு வியப்பு!

    சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது!

    இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!

    பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!

    போட்டித்துவங்கியது!

    அமெரிக்கா பூனை அலட்சியமாக சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!

    சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி!

    அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!

    கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.

    பார்வையாளர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்கள்!

    சற்று நேரம் சென்றபின், மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை!

    சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!

    போட்டியில் வென்றதற்காக சோமாலியா பூனையை எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!

    மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின்அருகில் சென்று இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி? என்று கேட்டது அமெரிக்க பூனை!

    அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது!

    நான் பூனையே இல்லை.! புலி...டா...!

    என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!

    பாலும், கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!

    பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!

    • உத்தரபிரதேசம் அளவு பெரிய மாநிலத்தில் ஐம்பது லட்சம் பேர் வசிப்பதை கற்பனை செய்யமுடிந்தால் அதுதான் நியூசிலாந்து.
    • 51 லட்சம் பேருக்கு 2.5 கோடி செம்மறி ஆடுகள் உள்ளதால் மனிதர்களை விட ஐந்து மடங்கு செம்மறி ஆடுகள் உள்ள நாடு.

    உலகிலேயே மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு என நியூசிலாந்தை சொல்லலாம். நியூசிலாந்தை பாலினேசியர்கள் கண்டுபிடித்து குடியேறுகையில் சுமாராக 13ம் நூற்றாண்டு. அதற்குமுன்? கிவி பறவைகள் தான் தீவில் சுற்றிக்கொன்டு இருந்தன. அதாவது தமிழகத்தில் ராஜராஜ சோழன், குலோத்துங்கசோழன் ஆட்சி எல்லாம் நடந்து முடிந்தும் நியூஸிலாந்தில் மனிதனின் கால் தடமே படவில்லை என்றால் பார்த்துக்கலாம்.

    மனிதர்கள் மட்டுமல்ல, நியூசிலாந்தில் பெரிய மிருகங்களுக்கும் பூர்வீகம் கிடையாது. கடல்வாழ் டால்பின்கள், திமிங்கிலங்கள், வவ்வால்கள் தான் அத்தீவின் இயற்கையான பாலூட்டிகள். மான், சிங்கம், பூனை, யானை... எதுவும் அங்கே பூர்வீகமா இல்லை. தீவில் தம்மை வேட்டையாட யாரும் இல்லாததால் கிவி பறவைகள் கூட பறப்பதை விட்டுவிட்டு நிலம்வாழ் பறவைகள் ஆகிவிட்டன.

    ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து நாடு என சொல்லிகிட்டாலும் ஆஸ்திரேலியா இங்கிருந்து 2000 கிமி தொலைவு. ஆஸியிலேயே மனிதர்கள் குறைவு, நியூஸியில் அதைவிட குறைவு.

    உத்தரபிரதேசம் அளவு பெரிய மாநிலத்தில் ஐம்பது லட்சம் பேர் வசிப்பதை கற்பனை செய்யமுடிந்தால் அதுதான் நியூசிலாந்து.

    இங்கே 13ம் நூற்றாண்டில் பாலினேசியர்கள் குடியேறுகிறார்கள். வடக்கு, தெற்கு என இரு தீவுகள். விவசாய நிலம் வெகு குறைவு. ஆனால் புல்வெளிகள் மிக அதிகம். நாட்டின் 51% நிலபரப்பில் புற்கள் தான். அதனால் அங்கே எல்லாம் செம்மறிஆடுகளையும், மாடுகளையும் வளர்க்கிறார்கள். 51 லட்சம் பேருக்கு 2.5 கோடி செம்மறி ஆடுகள் உள்ளதால் மனிதர்களை விட ஐந்து மடங்கு செம்மறி ஆடுகள் உள்ள நாடு. இத்தனை புல்வெளிகள் இருப்பதால் கால்ப் கிளப்புகளும் கூடுதல்.

    - நியாண்டர் செல்வன்

    • தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.
    • மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

    தினசரி யாருக்கு, எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின் படி,

    3 மாதம் வரையுள்ள குழந்தைகள் 14 - 17 மணிநேரம்,

    4 - 12 மாதம் வரையுள்ள குழந்தைகள் 12 - 16 மணிநேரம்,

    1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகள் 11 - 14 மணிநேரம்,

    3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் 10 - 13 மணிநேரம்,

    6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் 9 - 12 மணிநேரம்,

    13 - 18 வயது வரையுள்ள வளிரிளம் பருவத்தினர் 8 - 10 மணிநேரம்

    மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 - 9 மணிநேரம், தினந்தோறும் தூங்க வேண்டும்.

    தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய், ஆஸ்துமா, உடல் பருமன், மனச்சோர்வு, குழப்பம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

    மேலும், தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.

    தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

    ஒழுங்கற்ற தூக்க அட்டவணை, தூக்க நேரத்தில் செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, தூங்கும் அறையில் அதிகளவு வெளிச்சம் அல்லது சத்தம் இருத்தல் போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும். காஃபீன், நிக்கோட்டின், மது போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

    உளவியல் பாதிப்புகள், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா, மனச்சோர்வு நோய், இருமல் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தும் சில மருந்துகளும் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

    -எம். எஸ். சீதாராமன்

    ×