என் மலர்
வேலூர்
- பொதுமக்கள் நேரிலோ அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ரேசன் கடை பணியாளர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று விநியோகம் செய்கின்றனர்.
இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உரிமை தொகை பெறுவது சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
பொதுமக்கள் நேரிலோ அல்லது போன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உரிமை தொகை விண்ணப்பங்கள், டோக்கன்கள் கிடைக்கவில்லை என்றாலும் அல்லது இந்த திட்டம் குறித்த சந்தேகங்கள் குறித்தும் பொதுமக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதில் அதிகாரிகள் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்படும்.
கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416-2258016 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது
- பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர்:
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு 4,58,473 விண்ணப்ப படிவங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகள் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள், டோக்கன் வழங்கும் பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கினர்.
- முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
- சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம்-சித்தூர் சாலையில் பாக்கம் ஊராட்சி பாக்கம் ஏரிக்கரையில் காளியம்மன் கோவில் உள்ளது.
அதன் அருகிலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் முனீஸ்வரன் கோவில் அமைக்கப்பட்டது.
இந்த முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலில் இருந்த 2 சாமி சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்தனர். மேலும் கோவிலில் இருந்த கருப்பசாமி சிலையை திருடி சென்று விட்டனர்.
இன்று காலையில் கோவிலில் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.
இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சுற்றுப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் கிணற்றில் கருப்பசாமி சிலையை வீசி சென்றுள்ளனரா என ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது.
- அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
டோலி கட்டி தூக்கி செல்லும்போது உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது. சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
10 கிலோமீட்டர் தூரம் வரை தாய், குழந்தையின் உடலை சுமந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சாலை அமைக்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.
அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு சங்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையை கட்டுவது போல் பிண்ணி கொண்டது.
பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயன்ற போது சங்கரின் கையில் 2 முறை கடித்தது. வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, மனைவி மற்றும் மகள்கள் எழுந்து கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்றனர்.
இது குறித்து அந்த கிராமத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் அல்லேரியில் வந்து தயார் நிலையில் காத்திருந்தனர்.
ஆட்டு கொந்தரை மலை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரிக்கு பாம்பு கடித்த சங்கரை அந்த கிராமத்தினர் டோலி கட்டி தூக்கி வந்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்சுடன் காத்திருந்த மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் இறந்துபோன சங்கரின் உடலை தங்கள் கிராமத்திற்கு மீண்டும் திருப்பி எடுத்துச் சென்றனர்.
சாலை வசதி இருந்திருந்தால் நாங்கள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருப்போம். 3 கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்ததால் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. எனவே அல்லேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மலை கிராமத்தில் பாம்பு கடித்து அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- வேலை வாங்கி தருவதாக மோசடி
- வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. கோடீஸ்வரன் ஆகியோர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் மனு அளிக்க வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கையை அறுத்துக் கொள்ள முயன்றார்.
அருகில் இருந்த போலீசார் இளம் பெண்ணிடம் இருந்த பிளேடை பறித்தனர். பின்னர் இளம் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பேரணாம்பட்டு சேர்ந்த ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணம் நடந்த 3 ஆண்டுகளில் கணவர் என்னை விட்டு பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
2-வது மனைவியின் வீட்டார் எனது மகனை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக இளம் பெண் தெரிவித்தார்.
பேரணாம்பட்டை சேர்ந்த 2 இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு இளம் பெண் ஏன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாய். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரமடைந்த இளம்பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அவரது தோழியை மாடியில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க 2 இளம் பெண்களின் வீட்டாரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 24). மாற்றுத்தி றனாளி. பி எஸ் சி பி எட் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
இவர் அளித்த மனுவில் கூறியதாவது:-
நான் கடந்த 2022-ம் ஆண்டு பத்தாம் மாதம் மாவட்ட திறன் மேம்பாடு பயிற்சி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக செய்தித்தாளில் விளம்பரம் வந்தது. விளம்பரத்தை கண்ட மகாலட்சுமி வேலைக்காக விண்ணப்பித்தேன்.
இந்த நிலையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.25 லட்சம் வாங்கினார். மாவட்ட திறன் மேம்பாடு பயிற்சி மையத்தில் கேட்டபோது அந்த வேலை வேறு ஒருவருக்கு வழங்கி விட்டதாக தெரிவித்தனர்.
வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றவர் வேலையை வாங்கி தரவில்லை பணத்தையும் திரும்ப தரவில்லை.
தற்போது அவர் தலைமறைவாக உள்ளார் எனவே பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-
தினம்தோறும் வரும் புகார்கள் குறித்து அன்றே விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது. இதனால் தற்போது குறைவு தீர்வு கூட்டத்தில் 25 முதல் 30 மனுக்கள் மட்டுமே வருகின்றன.
அடிதடி சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இல்லையென்றால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
- செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
- வீடு வீடாக விண்ணப்பம் வினியோகம்
வேலூர்:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வேலூருக்கு வந்தது. இந்த விண்ணப்பங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 699 ரேசன் கடைகள் உள்ளது. இந்தகடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 942 ரேசன் அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் அனைத்துக்கும் விண்ணப்பங்கள் வினியோகம் செய் யப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருந்து அந்தந்த ரேசன்கடைகளுக்கு பிரித்து அனுப்புவதற்கான பணிகள் நடக்கிறது. கடைகளுக்கு விண்ணப்பங்கள் சென்றவுடன் பொதுமக்களுக்கு வீடு வீடாக வினியோகிக்கப்படும்.
பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்த கீழ் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது நிலத்தில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று மாலை புள்ளி மான் ஒன்று விழுந்து.
பின்னர் அப்பகுதியினர் மான் தத்தளித்துக் கொண்டு இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், வனத்துறை அலுவலர் இந்து உத்தரவின்பேரில் மீட்கப்பட்ட புள்ளி மானை அருகே உள்ள பரவமலை காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.
- காலை 9 மணி முதல், மதியம் 2 மணி தடை
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
வேலூர்:
வேலுர் மின் பகிர்மான வட்டம், சத்துவாச்சாரி, சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு மற்றும் தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி சத்துவாச்சாரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சத்துவாச்சாரி பேஸ் 1, 2, 3, 4, 5, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாபேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதபட்டரை, இ.பி. நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
சாத்துமதுரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாத்துமதுரை, சாத்துப்பாளையம், நெல்வாய், குளவிமேடு, நாயக்கனேரி, துத்திப்பட்டு, அடுக்கம்பாறை, ஆற்காட்டான்குடிசை, மூஞ்சூர்பட்டு, நாகநதி, துத்திக்காடு, பங்களத்தான், பாலாத்துவண்ணான், கனிகனியான், சோழவரம், புதூர், கணியம்பாடி, பாலம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
அதேபோல் கீழ்ப்பள்ளிப்பட்டு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்ப்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், கொங்கராம்பட்டு, கீழ்அரசம்பட்டு, காட்டுக்கானூர், ரெட்டிபாளையம், மேட்டுகுடிசை, அமிர்தி, நீப்பலாம்பட்டு, சாத்தம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், மேல்வல்லம், மோத்தக்கல், மோட்டுபாளையம் கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், சலமநத்தம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், தொரப்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொரப்பாடி, அல்லாபுரம், சின்ன அல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்தார்.
- சாலை அமைக்கும் பணி பாதிப்பு
- கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. தம்பதியரின் 1½ வயது மகள் தனுஷ்கா.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமையை பாம்பு கடித்தது.
அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக நடந்தே, அவரது பெற்றோர் குழந்தையை தூக்கி சென்றனர்.
சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டு வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்திமரத்துகொல்லை கிராமத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போதுமான சாலை வசதி இல்லை. இதனால் குழந்தையின் உடலை, அவரது பெற்றோர் 10 கிலோ மீட்டர் தொலைவு சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
அல்லேரி மலைப் பகுதியில் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது. அல்லேரி மலை கிராமத்தில் சாலை அமைப்பது தொடர்பாக கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
தார்சாலை அமைப்ப தற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என வனத்துறையினர் அடம் பிடிக்கின்றனர்.
தற்போது வழங்க ப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறி யுள்ளனர். சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகாரிகள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். வனத்துறையினரின் இந்த அலைக்கழிக்கும் செயல்களைக் கண்டு வருவாய்த்துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
பல்வேறு காரணங்களை காட்டி, சாலை அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தலையிட்டு அதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுவர் இடிந்து விழுந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கீழ் கொத்தூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பலியாகினார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சல்லாபுரி (வயது 55) தொழிலாளி.
இவர் கீழ்க்கத்தூர் அருகே இருக்கும் புளியங்குடிசை கிராமத்தில் தேவன் என்கின்ற வரின் வீடு கட்டும் பணி செய்து வந்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- வனத்துறையினர் நடவடிக்கை
- 2 பேரை மடக்கி பிடித்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கீரைகுட்ட காப்புக் காட்டு பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் வனத்துறை அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த லாரியின் அருகே சென்று பார்த்தனர். வனத்துறை யினர் வருவதை பார்த்த அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கீரை குட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்(வயது64)மற்றும் டிரைவர் சுஜித்(29) என்பதும், இவர்கள் லோடு ஆட்டோ மூலம் மூங்கில் மரங்களை வெட்டி கடத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மூங்கில் வெட்டி கடத்திய குற்றத்திற்காக ரூ. 1.70 லட்சம் அபராதம் விதித்து அவர்களை எச்சரித்து அனுப்பினார்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லோடு ஆட்டோ மற்றும் மூங்கில் கொம்புகளை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் போராடி அப்புறப்படுத்தினர்
- போக்குவரத்து பாதிப்பு
செங்கம்:
பெங்களூருவில் இருந்து லோடுகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நோக்கி செங்கம் வழியாக கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.
செங்கம் - போளூர் சாலையில் நேற்றிரவு தாசில்தார் அலுவலகம் அருகே வளைவில் திரும்பும்போது திடீரென கன்டெய்னர் கழிவு நீர் கால்வாயில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒரு மணி நேரம் போராடி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்களை இரவு 10 மணிக்கு மேல் உள்ளே அனுமதித்தால் இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






