என் மலர்
நீங்கள் தேடியது "Cauvery water supply stopped"
- பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி
- சேண்பாக்கம் பாலாற்றில் பணிகள் நிறைவடைந்தது
வேலூர்:
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
பொதுப்பணி துறையின் மூலம் வேலூர் அடுத்த சேண்பாக்கம் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இதில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதனால் கடந்த 8-ந் தேதி முதல் காவிரி குடிநீர் சப்ளை நிறுத்த பட்டது.
வேலூர் மாநகராட்சி, மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், ஆரணி ஆகிய நகராட்சி பகுதிகள் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கனியம்பாடி, வாலாஜா, ஆற்காடு ஒன்றிய பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் சீரமைக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களின் மூலம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் வேலூர் மாநகராட்சி பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். பல இடங்களில் பொதுமக்கள் லாரி டிராக்டர்களில் வழங்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சேண்பாக்கம் பாலாற்றில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று காலை முதல் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதனால் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை இயல்புநிலைக்கு திரும்பி உள்ளதாக குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






