என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்
    X

    குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

    குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

    • 2 நாட்களாக பைப்லைன் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    குடிநீர் கொண்டு வரப்படும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் வேலூர் மாநகராட்சிக்கு தண்ணீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக பைப் லைனில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் சைதாப்பேட்டை பிடிசி ரோடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி மூலம் குடிநீர் வழங்குவதாகவும் மறியலை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×