என் மலர்
நீங்கள் தேடியது "வேலூர் வீராங்கனை"
- கிராம மக்கள் வரவேற்பு
- நேபாளத்தில் தடகள போட்டி நடந்தது
வேலூர்:
வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி- சாவித்திரி தம்பதியினரின் மகள் கோமதி.
இவர் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டை கடந்த மே மாதம் நிறைவு செய்தார்.
தஞ்சாவூரில் நடந்த 19 வயதுக்குட்பட்ட ஈட்டி எறிதலில் மாநில போட்டியில் கலந்து கொண்ட கோமதி, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஜம்முவில் நடந்த போட்டியிலும் 3-ம் இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து இந்தோ- நேபால் தடகள போட்டி நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் நடந்தது.
இதில் இந்தியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஈட்டி எறிதல் போட்டி கடந்த 13-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடந்தது.
இதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் வேலூரை சேர்ந்த கோமதி கலந்து கொண்டு 48.83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய வீராங்கனை கோமதிக்கு, கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க தடப்புடலாக ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவி படித்த சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பிரதிநிதி பவுலின், வேலூர் மாவட்ட அறிவொளி இயக்க தலைவர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவரம் பள்ளி தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் வரவேற்றார்.
இதில் மாணவிக்கு மலர் மற்றும் சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






