என் மலர்
நீங்கள் தேடியது "People gathered in large numbers"
- 1 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை
- மகிழ்ச்சியில் பொதுமக்கள்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது . தக்காளி ஒரு கிலோ ரூ. 130 வரை விற்கப்பட்டு உச்சத்தை தொட்டது.
சமையலுக்கு அத்தியாவசிய பொருளான தக்காளி வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது விலை சற்று குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
குடியாத்தம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேனில் கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது
இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று இரவு குடியாத்தம் பகுதியில் வேனில் எடுத்துவரப்பட்ட தக்காளி இரண்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதை அறிந்த பொதுமக்கள் தக்காளி வேனை சூழ்ந்து அதிகளவில் வாங்கிச் சென்றனர்
சந்தையிலும் கடைகளிலும் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் சாலையோரம் வாகனத்தில் 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
வரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் தக்காளி வாங்கி சென்றனர்.






