என் மலர்
உள்ளூர் செய்திகள்

அணைக்கட்டு ஒன்றிய குழு கூட்டம் நடந்த காட்சி.
பீஞ்சமந்தை மலைப்பகுதிக்கு மினி பஸ் இயக்கப்படும்
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தகவல்
- அணைக்கட்டில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
ஆணையாளர் சுதாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அலுவலக மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் சித்ரா குமார பாண்டியன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு பேசியதாவது:-
அணைக்கட்டு தொகுதியில் பொது மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாக முத்துக் குமரன் மலை அடிவாரத்தில்இருந்து பீஞ்ச மந்தை வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5.50 கோடியில் தார் சாலை பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.
நாளை மறுநாள் நீர்ப் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைத்து, அந்த வழித்தடத்தில் ஒடுகத்தூரில் இருந்து பீஞ்சமந்தை வரை அரசு மினி டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
மேலும் ஆயிரக்க ணக்கான ஏழை எளிய மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
தொகுப்பூதியம்
இதனையடுத்து பேசிய கவுன்சிலர் சின்னப்பள்ளி குப்பத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை.
இரவு நேரங்களில் ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கவுன்சிலர் சுதாகர் பேசும்போது ஊராட்சி களில் மேற்கொள்ளப்படும் பணியினை ஒன்றிய பொறியாளர்கள் பார்வையிடுவதில்லை என்றார்.
அப்போது ஒரு கவுன்சிலர் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு மாததொகுப்பு ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த விதமான தொகுப்பூதியமும் வழங்குவதாக அறிவிக்க வில்லை. ஆகவே கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய கவுன்சிலர், ஒன்றியக் குழு தலைவர்களுக்கும் மாத ஊதியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையாளர் சுதாகரன் நாங்கள் இதுகுறித்து அரசுக்கு கடிதம் அனுப்புகிறோம். என்று கூறினார்.
முடிவில் அலுவலக உதவியாளர் நன்றி கூறினார்.






