என் மலர்
நீங்கள் தேடியது "யாரிடமும் பேசாமல் விரட்டியில் இருந்து வந்தார்"
- வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இவரது மகள் ஷாஜ லதா (வயது 36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாஜ லதாவின் தாய் உடல் நல குறைவால் இறந்து விட்டார். தாய் இறந்தது முதல் ஷாஜலதா யாரிடமும் பேசாமல் விரட்டியில் இருந்து வந்தார்.
இதனால் அவருக்கு சற்று லேசான மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷாஜலதா அடிக்கடி வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் அரியூருக்கு வந்த ஷாஜ லதா அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று இரவு தனது சகோதரர் லட்சுமி காந்திற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்.
வாட்ஸ் அப்பில் தகவலை பார்த்த அவரது சகோதரர் அலறியடித்துக் கொண்டு வேலூருக்கு விரைந்து வந்தார். ஷாஜலதா தங்கி இருந்த லாட்ஜ் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாஜலதா பிணத்தை மீட்டு பிரத பரிசோ தனைக்காக வேலூர் அடுக்கம்பா றை அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜ லதா தற்கொ லைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.






