என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட தொழிாளர்களுக்கு சம்பளத்துடன் பயிற்சி
    X

    கட்டிட தொழிாளர்களுக்கு சம்பளத்துடன் பயிற்சி

    • வயது 18-லிருந்து 40 ஆக இருத்தல் வேண்டும்
    • கட்டணம் ஏதும் கிடையாது

    வேலூர்:

    வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் அறிக்கையில் கூறியதாவது:-

    தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

    இதில் பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு இருக்கலாம். வயது 18-லிருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்றவை ப்பவர், மின்சாரபயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர், உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

    பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

    மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இந்த பயிற்சி தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு வழங்கப்படும். பயிற்சியானது தையூரில் தமிழ்நாடு கட்டுமான கழகம் அமையுள்ள இடத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும், பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.

    தினமும் ரூ.800

    மேலும் 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.

    தமிழ்நாடு கட்டுமான கழகம், எல்&டி திறன் பயிற்சி நிலையம் இணைத்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.இப்பயிற்சிகள் 2023 ஆகஸ்டு 15-ந் தேதி முதல் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×