என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 raiders arrested"

    • ஆயுதங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகிக்கும் வகையில் சிலர் தங்கி இருப்பதாக விருதம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் தங்கும் விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் (38), அவரது தம்பி கவுஸ்பாஷா (31), வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (34), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா (36), மோகன்குமார் (31) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் காட்பாடி பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மன்சூர், கவுஸ்பாஷா ஆகியோர் ரவுடி ஜானியின் கூட்டாளிகள் என்பதும், சதீஷ்குமார் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவுடி ராஜா மீது காஞ்சிபுரத்தில் 4 கொலை உள்ளிட்ட 17 வழக்குகள், ரவுடி மோகன்குமார் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து, போலீசார் கூட்டுக்கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டியதாக 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ×