வேலூர் டோல்கேட்டில் அரசு பள்ளியை தரம் உயர்த்த கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

அனைத்து தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர் டோல்கேட்டில் அரசு பள்ளியை தரம் உயர்த்த கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர்:

வேலூர் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சின்ன அல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.

மண்டல செயலாளர் குமார் பொருளாளர் பாபு மண்டல துணைத்தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கார்த்தி அண்ணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சின்ன அல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் கூடுதல் வகுப்பறைகளை கட்ட வேண்டும். காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவியை நிரப்ப வேண்டும்.

அனைத்து தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும். ஆறுகள் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.இந்து கோவில்களை எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இளைஞர் அணி மண்டல தலைவர் மோகன் மற்றும் திரளான பாஜகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com