என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் இன்று 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 51,891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,417 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,145 பேர் பலியானார்கள். தற்போது 1,329 பேர் சிகிச்சையின் உள்ளனர்.

    இன்று 294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வேலூர் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிமாவட்டத்தினர் உள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 130&க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர்.

    தற்போது பாதிப்பு ஏற்பட்ட வர்களில் 80 சதவீதத்திற்கு மேற் பட்டோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை.

    மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 

    கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்த கார்த்திகேயன் (வயது59) உள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களாக சளி, இருமலுடன் லேசான காய்ச்சல் இருந்து வந்தது.

    இதையடுத்து வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
    அவர் வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணு பிரியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதேபோல கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர் மோகன் என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முழுவதும் சுகாதார பணிகள் செய்யப்பட்டன.

    பாதிக்கப்பட்ட அலுவலகங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    வேலூரில் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சு ஊழியர்களுக்கும் கொரோனா பரவி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். வேலூர் நகரப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் சுமார் 7 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக லாட்ஜ்களில் தங்கி இருக்கக்கூடிய வெளிமாநிலத்தவர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று வெளி மாநிலத்தவர்கள் 65 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் சிஎம்சி ஆஸ்பத்திரியில் உள்ள நர்சு மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது. நேற்று வரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் 200 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 50 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வெளிமாநிலங்களில் உள்ளவர்களுக்கு இந்த கொரோனா காலகட்டத்தில் சிகிச்சைக்கு அனுமதி இல்லை என உத்தரவிட்டுள்ளது.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லாட்ஜிகளில் தேவையில்லாமல் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மாநகராட்சி 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும். கூடுதலாக தங்கியிருப்பவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

    லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களும் ஒரு நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    வேலூரில் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சு ஊழியர்களுக்கும் கொரோனா பரவி உள்ளது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.அதனை மீறியும் வெளிமாநிலத்தவர்கள் சுற்றித் திரிகின்றனர்.

    இதனால் தேவையில்லாமல் தங்கி இருப்பவர்களை வெளியேற்றி வருகிறோம்.லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதியில் நோயாளியுடன் ஒருவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும் மற்றவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

    கொரோனா காலத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மருத்துவ மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஆஸ்பத்திரியில் சுமார் 100 பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக பயிற்சி ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் கொரோனா ஊக்கத்தொகை மற்றும் ஜூலை மாதம் சம்பளம் நிலுவை ஆகியவை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    மூன்று மாதங்களாக பயிற்சி டாக்டர்கள் சம்பளம் கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திரண்டு சம்பளம் வழங்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

    எங்களுக்கு மாதந்தோறும் ரூ 25,000 பயிற்சி ஊதியமாக வழங்கப்படுகிறது. 3 மாதங்கள் இந்த ஊதியம் வழங்கப்படவில்லை. கொரோனா ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்துக்கு பதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்குகின்றனர். அதேபோல ஜூலை மாத சம்பளம் அரியர் பணமும் குறைந்த அளவே வழங்கியுள்ளனர்.

    மற்ற மருத்துவ கல்லூரிகளில் முறையாக சம்பளம் வழங்கும் போது இங்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முறையான சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

    கொரோனா காலத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

    இதனால் வேலூர் மாநகர பகுதியில் பால் மெடிக்கல் ஆஸ்பத்திரிகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படவில்லை. வேலூர் அண்ணா சாலை, காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, ஆரணி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

    காட்பாடி காந்திநகர் மற்றும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, விஐடி சாலை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    மாவட்டத்தின் புறநகர் பகுதியான குடியாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கே. வி குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    வேலூர் மாநகரப் பகுதியில் நேற்று மாலை காய்கறி மற்றும் மீன் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக இறைச்சி கடைகளில் பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு மீன் கோழி ஆடு இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாநில, மாவட்ட எல்லைகள் உட்பட100- க்கும் மேற்பட்ட இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆஸ்பத்திரி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்களுக்கு உரிய ஆதாரங்களை காண்பித்த பிறகு போலீசார் செல்வதற்கு அனுமதி அளித்தனர்.

    ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருவபவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    வெளியூர்களில் இருந்து வேலூர் திரும்புபவர்கள் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்ல வாகன வசதி இல்லை என்றால், 

    வேலூர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாடு அறை 9498181358, 9092700100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி, சந்தேகங்களுக்கு கேட்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 51,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,366 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,145 பேர் பலியானார்கள். தற்போது 1078 பேர் சிகிச்சையின் உள்ளனர்.

    இன்று 315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வேலூர் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டத்தினர் உள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 130-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர். வேலூர் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 400 படுக்கைகளும் வி ஐடி பல்கலைகழகத்தில் 700 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயாராக உள்ளன.

    தற்போது பாதிப்பு ஏற்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை.

    மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூரில் ஊரடங்கை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    முழு ஊரடங்கால் வேலூரில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரை மட்டும் போலீசார் அனுமதித்து வருகின்றனர். வேலூர் கோட்டை எதிரே வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவையின்றி வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கூறுகையில்:-

    வெளி மாநிலத்தில் இருந்து வரும் பஸ்கள் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப் படுகின்றன. வெளிமாநிலத்தில் இருந்து வரும் பஸ்கள் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் விதி மீறலில் ஈடுபடுகின்றனர். 

    50 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி வருவது மற்றும் முக கவசம் அணியாமல் இருப்பது போன்று சாதாரணமாக உள்ளனர்.

    மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் குழு அமைக்கப்பட்டு முககவசம்
    அணியாமல் இருப்பவர் களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    முன்எச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3500 க்கும் அதிகமான படுக்கைகள் தற்போது மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது. ஏ ‘நிலையில் உள்ள நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறுகையில்:-

    வேலூர் மாவட்டத்தில் 52 சோதனை சாவடிகள் மற்றும் மாநில எல்லைகளில் 6 சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கை யானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு தொடங்கிய நிலையில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    தேவையின்றி வெளியில் சுற்றி செய்வோருக்கு ஸ்பாட் பைன் மற்றும் வழக்குகள் பதியப்படுகின்றது என்றார்.
    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி பட்டதாரி இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றிய திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    வேலூரில் உள்ள உணவகம் ஒன்றில் மாவு பிசையும் வேலை செய்து வந்தார். பண ஆசை அவரை திருடனாக மாற்றியது. 2017-ம் ஆண்டு முதல் வேலூர் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்தார் இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்‌.

    வேலூர் போலீஸ் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் இவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு 11 மாதங்கள் சிறையில் இருந்தார்.

    அப்போதும் வெளியே வந்தவர் திருந்தி வாழாமல், திருட்டு தொழில் செய்தால் மாட்டிக்கொள்கிறோம் என்பதை உணர்ந்து திருட்டை தவிர்த்து மாற்று வழியில் பணம் சம்பாதிக்க முடிவெடுத்தார்.

    இதற்காக அவர் தேர்ந்தெடுத்த பாதை தான் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி பட்டதாரி இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றலாம் என முடிவு செய்தார்.

    இதற்காக வேலூர் மத்திய ஜெயிலில் வேலை செய்து வருவது போன்ற ஒரு போலியான காவலர் அடையாள அட்டை தயார் செய்தார்.

    அதை மற்றவர்களிடம் காட்டி சிறை துறை, காவல் துறை, பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வசூலித்தார்.

    அவரிடம் ஏமாந்த கணியம்பாடி பகுதியை சேர்ந்த அரவிந்த், பிரம்பபுரத்தை சேர்ந்த சாந்தகுமார், விஷ்ணுகுமார், மணிகண்டன் ஆகிய பட்டதாரி இளைஞர்கள் மோசடி பேர்வழி உதயகுமிரிடம் பணம் கொடுத்து ஏமாந்து புகார் அளித்தனர்.

    பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த பெண்களிடம் "நீங்கள் 20 பேர் கொண்ட மகளிர் குழுவை உருவாக்குங்கள், அதில் தலா 2800 ரூபாய் கொடுத்தால் 85 ஆயிரமும், 5000 கொடுத்தால் ரூ.1 லட்சம் வரை லோன் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார்.

    மகளிர் குழு பெண்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யவே "இந்தாங்க சப்-கலெக்டர் நம்பர் நீங்களே போன் பண்ணி கேளுங்க" என ஒரு நம்பரை கொடுத்துள்ளார்.

    அந்த எண்ணுக்கு பெண்கள் போன் செய்த போது உதயகுமாரே சப் கலெக்டர் போல மிமிக்ரி செய்து பேசியுள்ளார். இதனை அறிந்த பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இது போன்ற மோசடி செயலை செய்யும் உதயகுமார் ஏமாற்ற இருப்பவர்களை நம்ப வைக்க ஒரு பாண்டு பத்திரத்தில் எழுதி கையெழுத்தும் போட்டுக்கொடுத்துள்ளார். இது போல மொத்தம் ரூ.8 லட்சத்து 33,800 வரை ஏமாற்றியுள்ளார்.

    இதுகுறித்து இதுரை 7 புகார்கள் வந்த நிலையில், வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதயகுமாரை நேற்று கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 21 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் போலி போலீஸ் ஐடி கார்டையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் காரனமாக மேலும் 2 தெருக்கள் மூடப்பட்டன.
    வேலூர்:-

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக வரும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டவரை தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகின்றனர். 

    வேலூர் காந்தி ரோடு, பாபுராவ் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் நூற்றுக்கணக்கான வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். இவர்கள் மூலமாக தொற்று அதிகரித்து வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    வேலூர் கோட்டை மற்றும் பூங்காவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் வெளிமாநிலத்தவர்களை கண்காணிக்கவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை விடுதிகளில் செய்து கொடுத்து அவர்களை வெளியே நடமாட அனுமதிக்க கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.

     அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு தேவைப்பட்டால் விடுதிப் பணியாளர்கள் மூலம் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள பாபுராவ் தெருவில் தங்கும் விடுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் சிலருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து பாபுராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் வெளியில் வரமுடியாத படி அங்கு தடுப்புகள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 

    இதை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் சில பகுதிகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து தங்கும் விடுதிகளில் உள்ளவர்களை வெளியே வராமல் இருக்க பாபுராவ் தெருவில் இரும்புத் தகடுகள் கொண்டு அடைத்தனர். 

    இன்று காலை சி.எம்.சி.ஆஸ்பத்திரி எதிரே உள்ள சுக்கையா வாத்தியார் தெரு, லத்திப்பாஷா தெருக்கள் மூடப்பட்டன.

    சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தியாகராஜன் (27), தணிகைவேல் (47) ஆகியோர் பாபு ராவ் தெருவில் தனிமை படுத்தி அமைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்து சேதப்படுத்தி அகற்றினர். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 505 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    வேலூர்:-

    கொரோனா வைரஸ் தொற்று, ஒமைக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் ஆகியவை கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது.

    இத்தொற்றுகளில் இருந்து பொதுமக்கள் தங் களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக அமைகிறது. அதனால் அரசின் சார்பில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் வசிக்கும்  பகுதிகளிலேயே எளிதாக போட்டுக் கொள்ளும் வகை யில் மெகா தடுப்பூசி முகாம் கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கடந்த வாரங் களில் சனிக்கிழமை வந்ததால் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டன.

    இன்று வழக்கம் போல மீண்டும் சனிக்கிழமைக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் கள் மாற்றப்பட்டு நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    முதல் தவணை மற்றும் 2-ம் தவணை செலுத் தாதவர்கள் இந்த முகாம் களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் முதல் டோஸ் 88 சதவீதம், 2-வது டோஸ் 58 சதவீதம் போடப்பட்டுள்ளது.
    சுற்றுலா பயணிகள் அமிர்தி பூங்காவிற்கு வரும் முன்பு கால்களைத் தண்ணீரால் சுத்தம் செய்ய பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்காவில் மான், மயில், புள்ளி மான், மலைப்பாம்பு, நட்சத்திர ஆமை, முயல் என 17 வகையான விலங்குகள் பறவைகள் உள்ளது.

    இந்த விலங்குகள், பறவைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு அனைத்து விலங்குகள் உள்ள அறைகளுக்கு உட்புறமாக மஞ்சள்தூள் தூவியும், பிளீச்சிங் பவுடர் தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதேபோல் சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு வரும் முன்பு கால்களைத் தண்ணீரால் சுத்தம் செய்ய பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமைதி வனத்துறை ரேஞ்சர் முருகன் கூறுகையில்:-

    கொரோனா பாதிப்பு வந்தது முதலே விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மஞ்சள்தூள், பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளும் கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.

    இன்று பூங்கா வழக்கம் போல செயல்பட்டது. நாளை ஊரடங்கையொட்டி பூங்கா மூடப்படுகிறது.
    ×