என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் இன்று காலை ஆண் பிணம் மிதந்தது. இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தீயணைப்பு நிலைய ஊழியர்களுடன் இணைந்து அகழியில் மிதந்த பிணத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பிணமாக மிதந்த வாலிபர் உடலில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தன.
மேலும் வாலிபர் கிடந்த இடத்தில் அகழி கரையில் ரத்தம் கொட்டியிருந்தது. மேலும் வாலிபரை அருகில் உள்ள பூங்காவில் இருந்து இழுத்து வந்த தடயங்களும் இருந்தன.
வாலிபரை கோட்டை பூங்காவில் வைத்து அடித்து கொலை செய்து இழுத்து வந்து அகழியில் வீசியுள்ளனர்.
வாலிபரை தாக்கிய ரத்தம் படிந்த கல் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கொலையான வாலிபர் யார் என்பது தெரியவில்லை.
வாலிபர் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. இதன் மூலம் கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் யார்? கொலை செய்து வீசிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
பூங்கா பகுதியில் மது, கஞ்சா பயன்படுத்தும் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோட்டை பூங்காவில் வாலிபர் கொலையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.
இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முருகன் பரோல் கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் காலை உணவு சாப்பிட மறுத்தார். பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
முருகன் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக அரசு மற்றும் கோர்ட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தண்ணீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்று காலை மயக்கமாகியுள்ளார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வேலூர் முத்து மண்டபம் டோபி கானா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராணி அம்மாள். கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.
இவர்களது வீட்டில் 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ.95 முதல் ரூ.150 வரை மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்த நிலையில் இவரது வீட்டுக்கு நேற்று மின்கட்டண அளவு எடுக்கப்பட்டது. அப்போது மின் கட்டணம் ரூ.1,60,642 கட்ட வேண்டும் என அட்டையில் எழுதி வைத்து விட்டு மின் ஊழியர் சென்று விட்டார்.
இதனை கண்டதும் ராணி அம்மாள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தோட்டப்பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இது பற்றி கேட்டனர்.
அப்போது ரூ.1 லட்சத்திற்கும் மேல் மின் கட்டணம் வந்தது குறித்து மனு ஒன்று எழுதி தரும்படி அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சத்து 60,642 மின்கட்டணம் வந்தது அங்குள்ள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ராணி அம்மாள் குடும்பத்தினர் கூறுகையில்:-
எங்கள் வீட்டில் 4 டியூப்லைட் விளக்கு, 2 மின்விசிறி, ஒரு டி.வி., பிரிட்ஜ் உள்ளது. பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் 3 பேரும் வேலைக்கு சென்று விடுகிறோம். இதனால் இரவு நேரத்தில் மட்டுமே எங்கள் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அரசு தந்தபோது நாங்கள் பெரும்பாலும் மின்கட்டணம் கட்டியதே இல்லை. தற்போது ரூ.95 முதல் 150 வரை கட்டணம் செலுத்தி வருகிறோம்.
இந்த மாதம் ரூ.1,60, 642 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என எழுதியுள்ளனர். இதுபற்றி அலுவலத்தில் கேட்டபோது மனு அளிக்குமாறு கூறி உள்ளனர். எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றனர்.
இவ்வளவு மின்கட்டணம் எப்படி வந்தது என்ற அதிர்ச்சியில் இருந்து ராணி அம்மாள் குடும்பத்தினர் மீளவே இல்லை.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்வுக்கு மாணவ, மாணவிகள் ஆயத்தமாகி உள்ளனர். முதல் நாளான இன்று மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுத சென்றனர்.
இந்த நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அரியூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் கோபி என்பவரது மகன் மோனிஷ் (வயது 16) தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தாய் பரிமளா ஷு கம்பெனியில் வேலைக்குச் சென்று மோனிசை படிக்க வைத்தார்.
நேற்று மாலை பரிமளா ஷு கம்பெனியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது மோனிஷ் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இன்று தேர்வு தொடங்குவதால் மாணவன் மோனிஷை படிக்குமாறு பரிமளா அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து மோனிஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.
மகன் தேர்வுக்கு படிக்கிறான் என நினைத்து பரிமாளாவும் அந்த அறைக்கு செல்லவில்லை. ஆனால் அறையில் இருந்த மோனிஷ் தேர்வுக்கு பயந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மோனிஷ் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு 9 மணிக்கு மோனிஷ் அறைக்கதவை திறந்து பரிமளா உள்ளே சென்றார். அங்கு மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று பிளஸ்-2 தேர்வு தொடங்கிய நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித அச்சம், பதட்டம் அடைய வேண்டாம். இதுபோன்ற விபரீத முடிவுகளில் ஈடுபட வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






