search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    வேலூர் ஜெயிலில் பரோல் கேட்டு முருகன் உண்ணாவிரதம்

    30 நாள் பரோல் வழங்கக்கோரி வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    முருகன் பரோல் கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் காலை உணவு சாப்பிட மறுத்தார். பரோல் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    முருகன் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக அரசு மற்றும் கோர்ட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தண்ணீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்று காலை மயக்கமாகியுள்ளார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    Next Story
    ×