என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை - கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்5 May 2022 9:27 AM GMT (Updated: 5 May 2022 9:27 AM GMT)
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடியாத்தம் தாலுகா கவுண்டன்ய ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு மாதத்துக்கு மேலாக ஆற்றில் பெரு வெள்ளம் ஓடியது.
இதனால் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. எனவே அங்கு குடியிருந்தவர்களை முகாம்களில் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த 1,282 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
இந்தநிலையில் குடியாத்தம் தாலுகா கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று பகுதியில் சிறிய வியாபாரிகள் பொம்மை கடைகள், விளையாட்டு ப்பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பொழுது போக்கிற்கான ரங்கராட்டினம் மற்றும் இதர கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வந்தால் மீண்டும் தொடர் மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், மண்வளம் குறித்த நிலைமை அறியாத நிலையில் ரங்கராட்டினம் போன்றவற்றை ஆற்றுப்பகுதியில் அமைத்தால் விபத்துக்கள் ஏற்பட வாய்யப்புள்ளது.
கோர்ட்டு உத்தரவில் நீர்வழிப் புறம்போக்குகளில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆக்கிரமிப்புகள் ஏதும் இருக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஆக்கிரமிப்புகள் செய்பவர்கள் மீது சட்டப்படி நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தப்படும்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்று புறம்போக்கில் எவ்வித கடைகள் அமைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X