என் மலர்tooltip icon

    வேலூர்

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
    • பள்ளிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வுதுறை சார்பில் கள்ள சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மேலும் பஸ்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். பின்னர் அவர் கூறுகையில்:-

    கள்ளசாராயத்தை முற்றிலும் ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாராயம் குடித்து 30,40,50 பேர் இறந்து போய் உள்ளனர். நாட்டில் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து உள்ளது.

    கள்ள சாராயம் மற்றும் மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    போலீசார் ஆங்காங்கே போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். போதைப் பொருள் பயன்படுத்துவதால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைய தலைமுறையினர் வழி தவறி செல்கின்றனர்.

    பள்ளிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசாரை நியமித்து சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் வருவாய்த் துறையினரும், நானும் ஆய்வு செய்து வருகிறேன். வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் இல்லாமல் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு, உதவி கலெக்டர் பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூரில் வருகிற 10-ந்தேதி
    • கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுரை

    வேலூர்:

    பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் மாதத்தின் 2-வது சனிக்கிழமை தோறும் குறைதீர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

    ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கும் மனு செய்தால் செல்போன் எண் பதிவு செய்தல் குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் செய்தல் உள்ளிட்டவர்கள் மேற்கொள்ள மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதன்படி வரும் சனிக்கிழமை வேலூர் தாலுகாவில் கணியம்பாடி அடுத்த கம்ம சமுத்திரம், அணைக்கட்டு தாலுகாவில் பள்ளிகொண்டா அடுத்த சத்தியமங்கலம், காட்பாடி தாலுகாவில் வண்டறந்தாங்கல், குடியாத்தம் தாலுகாவில் கருணீக சமுத்திரம், கே.வி. குப்பம் தாலுகாவில் அங்கராங்குப்பம், பேரணாம்பட்டு தாலுகாவில் அறவட்லா ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் சிறப்பு குறைவு தீர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே சிறப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் அரசு வகுத்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் அணிதல் சமூக இடைவெளி கடைபிடித்தால் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தால் உள்ளிட்டவர்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்ப ட்டுள்ளது.

    • 2 வாரத்தில் ரூ.1 கோடி வசூலானது
    • கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் வீட்டு வரி, கடை வரி, வணிக நிறுவனங்களின் வரி, வாடகை வரி, தொழில் வரி, குடிநீர் வரி என கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிப்பாக்கி ரூ.10 கோடியே 18 லட்சம் நிலுவையில் இருந்தது.

    10 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி இருந்ததால் குடியாத்தம் நகராட்சி பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர நிதி பற்றாக்குறையால் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகிறது.

    இதற்காக வரிவசூலில் தீவிரம் காட்டும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினார்கள்.

    வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பி. குபேந்திரன் உத்தரவின் பேரில், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆலோசனை பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமையில் நகராட்சி மேலாளர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் வருவாய் உதவியாளர்கள் கொண்ட வரிவசூல் குழுக்கள் அமைக்கப்பட்டு குடியாத்தம் பகுதியில் கடந்த 2 வாரமாக தீவிரமாக வரி வசூலில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் வரி வசூல் ஆனதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் தொடர்ந்து நடைபெறும் எனவும், அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடுப்புச் சுவர் அமைக்கப்படுவதால் குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம் இருக்காது
    • 3 மாதத்தில் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 139 கோடியில் நீர்வளத்துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில், காட்பாடி வட்டத்தில் இரட்டை ஏரியான கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகள் புனரமைப்பு பணி ரூ.28.45 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது.

    முத்தரசிகுப்பம் ஏரியின் தெற்கு பிரதான கால்வாய் ரூ.62 லட்சத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. அரும்பருத்தி பாலாற்றின் குறுக்கே ரூ.24.82 கோடியில் தரைகீழ் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. தரைகீழ் தடுப்பணை 720 மீட்டர் நீளமும், 8 மீட்டர் உயரமும் கொண்டது.

    தரைகீழ் தடுப்பணை அமைந்தால் 2 கி.மீ சுற்றளவில் உள்ள 8 கிராமங்கள் 2500 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    குகையநல்லூர் அருகே பொன்னையாற்றின் குறுக்கே 270 மீட்டர் நீளமும் 1.50 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை ரூ.12.70 கோடியில் கட்டப்பட உள்ளது. தடுப்பணையில் மட்டும் 2.86 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். கவுன்டன்யா ஆற்றின் 2 கரைகளில் 2½ கி.மீ தொலைவுக்கு வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கப்படுவதால் குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம் இருக்காது.

    ராணிப்பேட்டை மாவட்டம் திருபாற்கடல்-வளவனூர் கிராமத்தின் அருகே பாலாற்றின் குறுக்கே 1,345 மீட்டர் நீளமும் 9 மீட்டர் உயரம் கொண்ட தரைகீழ் தடுப்பணை ரூ.47.87 கோடியில் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் 1,316.48 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தில் சரஸ்வதி ஆற்றில் கொத்தூர் கிராமம் முதல் கல்லாற்றுடன் இணையும் வரை 27 கி.மீ தொலைவுக்கு ரூ.9.94 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. ஆம்பூர் வட்டம் நரியம்பட்டு கிராமத்தில் மலட்டாற்றின் குறுக்கே ரூ.11.83 கோடியில் 300 மீட்டர் நீளமும் 6.50 மீட்டர் உயரம் கொண்ட தரைகீழ் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது.

    பொன்னை ஆற்றின் குறுக்கே கடந்த 1856-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அணை கடந்தாண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    அணையில் உள்ள ஷட்டர்கள் சேதம் ஏற்பட்டதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருக்கிறது.

    இதற்காக ரூ.19.46 கோடியில் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    அதேபோல், பொய்கை கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.18.79 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணியும், கோவிந்தம்பாடி அகரம் ஆற்றின் குறுக்கே ரூ.11.63 கோடியில் தடுப்பணை, குடியாத்தம் செதுக்கரை பகுதியில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ.11.21 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி என 3 பணிகளுக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் பெற்று அடுத்த 3 மாதத்தில் பணிகள் தொடங்கவும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை
    • 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மத்திய சிறையில் காலி யாக உள்ள ஒரு முடிதிருந்துநர், வேலூர் சிறைக்காவலர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் ஆகிய பணியிடங்க களுக்கு தகுதியுடையோர் தேர்வு செய் யப்பட உள்ளனர்.

    இதற்கான செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வேலூர் மத்திய சிறையில் நடைபெற உள்ளது.

    முடி திருத்துநர், இரவுக் காவலர் ஆகிய இரு பணிகளுக்கும் எழுதப்ப டிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் பெற முடியும்.

    எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி., பிரிவி னருக்கு 18 முதல் 37 வயது வரையும், பிசி., எம்.பி.சி., பிசி (எம்) பிரிவின ருக்கு 34 வயது வரையும், ஓசி பிரிவி னருக்கு 32 வயது வரையும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுடையவர்கள் கல்வி, ஜாதிச் சான்று, வயது வரம்புச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றை யும் இணைத்து விண்ண ப்பத்தை தபால் மூலம் சிறைக் கண்காணிப் பாளர், மத்திய சிறை, வேலூர் என்ற முகவரிக்கு டிசம்பர் 20- ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • விவசாயிகள் அச்சம்
    • தமிழக வனப் பகுதிக்குள் வராதவாறு தடுக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே தமிழக எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆந்திரா மாநில பகுதியில் 15 யானைகள் கொண்ட கூட்டம் சாலையின் குறுக்கே இப்பகுதியில் இருந்து அப்பகுதிக்கு கடந்து சென்றுள்ளது.

    இதனால் குடியாத்தம் பலமநேர் சாலையில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் நின்று ஒலி எழுப்பி யானைகள் வனப்பகுதிக்கு சென்ற பின்னரே வாகனங்களை இயக்கினர்.

    குறிப்பாக முசலமடுகு காலவபல்லி பகுதியில் நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் கடந்து வந்து சென்றுள்ளது.

    தமிழக வனப் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த யானைகள் முகாமிட்டு இருப்பதால் ஆந்திர மாநிலம் எல்லையோரம் உள்ள தமிழக கிராமங்களான சைனகுண்டா, மோர்தானா கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, கொல்லப்பல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் யானைகள் கூட்டம் மீண்டும் விலை நிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    வனத்துறையினர் அந்த யானைகள் கூட்டத்தை தமிழக வனப் பகுதிக்குள் வராதவாறு தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர், மேயர் ஆய்வு
    • அரசு நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என தகவல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பாலாற்றில் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் பாலாறு மாசுபட்டு வருகிறது. பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    பாலாற்றில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவதை தடுக்க உடனடியாக கம்பி வேலி அமைக்க வேண்டும் என்றும் நீர்வளத் துறை அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று பாலாற்றங்கரையில் உடனடியாக கம்பி வேலி அமைக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் பாலாற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பாலாற்று பகுதியில் தடுப்பு வேலி அமைக்க எவ்வளவு நிதி தேவை ப்படும் என்பது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அரசு நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

    • தொடர்ந்து சாராயம் விற்று வந்ததல் நடவடிக்கை
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மாரியம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 28). தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சின்னராஜை பிடித்து கைது செய்தனர். சின்னராஜை நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சின்னராஜ் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததாலும் அவர் மீது பல வழக்குகள் இருந்ததாலும் சின்னராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று சின்னராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    • மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பெயரில் நடவடிக்கை
    • இந்த மாத இறுதிவரை ெகடு

    வேலூர்:

    வேலூரில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியில் பலவன்சாத்து ஏரி பகுதியில் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் அங்கு சென்று அளவீடு செய்தனர். அதில் சுமார் 200 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    பின்னர் இதுகுறித்த தகவலை அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் தற்போது 200 வீடுகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த நோட்டீசில், குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் உள்ள பொருட்களை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும்போது பொருட்கள் திரும்பி தரப்படாது என்றும் கூறியிருந்தனர்.

    ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் இந்த மாத இறுதியில் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வேலூர்:

    சென்னையை நெருங்கிவரும் மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மேலும், புயல் காரணமாக வட மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
    • பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள காட்பாடி, குடியாத்தம், ஆற்காடு, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ஏரிகள், தடுப்பணைகள், வெள்ளத்தடுப்புக்கரை புதியதாக அமைக்கும் பணிகள் மற்றும் புனரமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழா காட்பாடி கழிஞ்சூரில் இன்று நடந்தது.கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை ரூ.139.21 கோடியில் புணரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.

    மேலும் இந்த திட்டத்தில் கழிஞ்சூர் ஏரி ரூ.28.5 கோடியில் சுற்றுலா தலமாக மாற்றப்படுகிறது.இந்த பணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

    ஏரிகளை புனரமைக்கும் பணி காட்பாடி தொகுதியில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள 8 ஏரிகளில் செய்வதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.

    சுற்றுலாத்தலமாக்க அடிக்கல்

    கழிஞ்சூர் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கே உள்ள கரையை மேம்படுத்தி வாக்கிங் செல்ல வசதியாக மாற்றப்படும். ஏரியில் மலர் தோட்டங்கள், நடுவில் செயற்கை தீவு, படகு சவாரி கழிவறை வசதி செய்யப்படும். ஏரி கால்வாய் பகுதியில் உள்ள குடியிருப்புகளை இந்த பணிகளுக்காக அகற்ற வேண்டி உள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் தந்துவிட்டு அதற்கு பிறகு அவர்கள் இந்த இடத்தை விட்டு காலி செய்யப்படுவார்கள்.

    கழிஞ்சூர் ஏரி பகுதியில் கலைஞர் ஆட்சி காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர திட்டமிட்டேன். அதற்குள் எங்கள் ஆட்சி மாறிவிட்டது. இந்த ஏரிக்கு மேல் புதிய டவுன்ஷிப் ஒன்று கொண்டு வர முயற்சி செய்தேன்.ஆட்சி மாற்றத்தால் அதுவும் எங்கே போனது என்று தெரியவில்லை.

    இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். இங்கு குப்பை கொட்ட வந்தால் மாநகராட்சி லாரியை பறிமுதல் செய்துவிட்டு எனக்கு ஒரு போன் செய்யுங்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. பொன்னையில் ரெயில்வே பாலம் அருகே தனியார் கம்பெனி குப்பைகளை குவித்து வைத்துள்ளனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ரூ.300 கோடியில் ஏரிகளை தூர் வாருவதாக கூறினார்கள். அந்த ஏரிகளின் பட்டியலை கேட்டேன். கடைசி வரை அவர்கள் தரவே இல்லை. அனைத்து பணிகளையும் ஒருவருக்கே டெண்டர் விட்டார்கள்.ரூ.250 கோடியை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். மீதிரூ.50 கோடியை டெண்டர் எடுத்தவர் எடுத்துக் கொண்டார். எங்கள் ஆட்சியில் அப்படி நடக்க முடியாது. 10 ஏரிகளுக்கு ஒரு கான்டிராக்ட் பணிகளை விடுகிறோம். அதில் திருப்தி இருந்தால் மட்டுமே மற்ற பணிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

    நடைபயிற்சி

    குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றங்கரையில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் கரைகளை மேம்படுத்தி நடை பயிற்சி பூங்கா அமைக்கப்படும்.

    தண்டல கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வஞ்சூர் சேண்பாக்கம் இடையே பாலாற்றில் தரை பாலம் அமைக்கப்படும்.

    பத்திரப்பள்ளி அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது அந்த பணிகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சதுப்பேரி ஏரி சுற்றுலா சுற்றுலா தலம் ஆக்கப்படும் மேலரசம்பட்டு புதிய அணை கட்டும்பணி இந்த ஆண்டு தொடங்கப்படும்.

    ஆற்காடு கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

    பங்கேற்றவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், ஈஸ்வரப்பன், அமுலு விஜயன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடவடிக்கை
    • உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர்கள் அதிரடி உத்தரவு

    வேலூர்:

    அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறி சென்னை, புதுச்சேரிக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    இதனால் நாளை முதல் 10-ந் தேதி வரை 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த புயல் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை மூலம் பாதிப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ஏற்கனவே அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறைகள் மீண்டும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கும் பகுயதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள கால்வாய்கள் மீண்டும் தூர்வரப்படுகின்றன.

    இது தவிர மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக முகாம்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக அனைத்து சாா்பு அலுவலா்களுடனான காணொலி ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    புயல் முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்து மழை மானிகளையும் அந்தந்த வட்டாட்சியா் தணிக்கை செய்து அவை நல்லமுறையில் இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மழைமானிகளின் தினசரி மழை அளவுகளை காலை 8 மணிக்குள் அளிக்க வேண்டும்.

    வேலூர் மாநகரில் தாழ்வான, மழைநீா் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து உடனுக்குடன் மழைநீரை அகற்ற வேண்டும். இதற்குண்டான சாதனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அருகே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.

    சித்தூா் பஸ் நிறுத்தப் பகுதியில் கால்வாயை உடனடியாக தூா்வாரி சீரமைக்க வேண்டும்.

    தொரப்பாடி-அரியூா் சாலையில் நீா் தேங்குவதை சீரமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தாழ்வான இடங்களில் நீா் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும்.

    அனைத்து அலுவலா்களும் மழைவெள்ள பாதிப்பு தகவல்களை உடனுக்குடன் வேலூா் மாவட்ட பேரிடா் மேலாண்மை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட வேண்டும். மழையால் பயிா்ச் சேதங்கள் ஏற்பட்டால் அவற்றை எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்காமல் கணக்கெடுப்பு நடத்தி, நிதியுதவி கோரிக்கையை அரசுக்கு அனுப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    ×