search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    • தொடர்ந்து சாராயம் விற்று வந்ததல் நடவடிக்கை
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மாரியம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 28). தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சின்னராஜை பிடித்து கைது செய்தனர். சின்னராஜை நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    சின்னராஜ் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததாலும் அவர் மீது பல வழக்குகள் இருந்ததாலும் சின்னராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று சின்னராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    Next Story
    ×