என் மலர்tooltip icon

    வேலூர்

    • விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

    விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எம்.கோபால் கரும்பு விவசாயிகள் தலைவர் ஜி.கோவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிர்வாகிகள் சத்யா, மகாலட்சுமி, தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், மாநில தலைவர் சண்முகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை ஆதரித்தும், ஆம்பூர் சர்க்கரை ஆலை உடனே திறக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி 600 ரூபாய் கூலி வழங்க கேட்டும் அவர்களை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்,

    குடியாத்தம்-ஜிட்டப்பல்லி, கொட்டாரமடுகு வழியாக மோர்தானா அணைக்கு சென்று வர சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும், அக்ராவரம் கால்நடை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும், அக்ராவரம் ஏரிக்கரை மீது வாகனங்கள் சென்றுவர சாலை வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • கலெக்டர் அறிவிப்பு
    • கிராமங்களின் பெயர்களை அரசாணை மூலம் வெளியிட நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு எருது விடும் விழாக்கள் நடத்தியவர்களுக்கு மட்டும் இந்தாண்டு அனுமதி வழங்கப்படும் என்றும், புதிதாக விழா நடத்துபவர்கள் யாருக்கும் அனுமதி யில்லை என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி மாவட்ட நிர்வாகம் அனுமதித்த கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    விழா நடத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது மூன்றாம் கட்டமாக 42 கிராமங்களில் விழாக்கள் நடத்த அதற்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. விரைவில் இவற்றுக்கான அரசாணை வெளியிடப்பட வுள்ளன.

    இந்நிலையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி கோரிய கிராமங்களின் பெயர்களை அரசாணை மூலம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கான நடவடிக்கையில் கால்நடை பராமரிப்புத் துறை ஈடுபட்டது. அதில், கடந்த ஆண்டுகளில் அரசால் அறிவிப்பு செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே தற்போது விழா நடத்த அரசாணை வழங்கப்படுகிறது.

    கடந்தாண்டு அரசாணையில் இல்லாத கிராமங்களில் இந்தாண்டு விழா நடத்த அரசாணை வெளியிட முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.

    எனவே, கடந்த ஆண்டு விழா நடத்த அரசாணை பெறாத கிராமங்களில் இந்த ஆண்டு விழா நடத்த அனுமதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய முடியாது. எனவே, புதிதாக விழா நடத்த யாரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டாம்.

    கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் பெரும்பாலான கிரா மங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

    அரசு வழிகாட்டு நெறிமுறைகளை விழாக்கு ழுவினர் முறையாக கடைபிடித்து எருது விடும் விழாவை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தை சீர் செய்யும் பணி தொடங்கியது
    • கட்-அவுட்டுகள், பேனர்களுக்கு கட்டுப்பாடு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா வரும் 19-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். ஊர்வலத்தில் தங்களுடைய நேர்த்திக்க டனை செலுத்தும் வகையில் பல்வேறு சாமி வேடமிட்டு வருவார்கள்.

    இதனால் வேலூர் புதிய நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தை சீர் செய்யும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரங்களை கொண்டு அப்பகுதி முழுவதும் சீர் செய்யப்பட்டு வருகிறது.

    மகா சிவராத்திரியை யொட்டி மயானக்கொள்ளை திருவிழா பல்வேறு இடங்களில் கொண்டா டப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்துக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மாவட்டத்தில் முக்கியமான சந்திப்புகள், வளைவுகள், நடைப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்கள் சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி யின்றி வைக்க கூடாது.

    கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இதனை தொடர்ந்து தங்கத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை 6 கால பூஜைகள் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு ருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது.

    மகா சிவராத்திரி யொட்டி நாளை மாலை முதல் விடிய விடிய பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுகின்றனர்.

    கோவில் வளாகத்தில் பரதநாட்டியம் பக்தி பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கோட்டை வளாகத்தில் மின் விளக்கு கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கார், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    விடிய விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    • 42 கிராமங்களுக்கு தேதி ஒதுக்கீடு
    • மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெறும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரைமாவட்டத்துக்கு உட்பட்ட பல கிராமங்களில் விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

    இதற்காக விழாக் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். அப்படி அனு மதி பெற்ற இடங்களில் மட்டுமே விழா நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் 78 கிராமங்களில் விழா நடத்த அனுமதிக்க வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது.

    இதில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முதல்கட்டமாக இம்மாதம் வரை 43 கிராமங்களில் விழா நடத்த அனுமதிக் கப்பட்டது. அதன்படி இதுவரை சுமார் 30 கிராமங்களில் விழா நடந்துள்ளது.

    இதையடுத்து, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த கிராமங்களுக்கு தேதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் (பொறுப்பு), ஆர்டிஓ பூங்கொடி, கூடுதல் எஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள், விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் போது 42 கிராமங்களில் விழாக்கள் நடத்த தேதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில விழாக்குழுவினர் தங்கள் கிராமத்துக்கு சில தேதிகளை குறிப்பிட்டு அன்று நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்மீது பரிசீலனை செய்து அவர்க ளுக்கு தேதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    42 கிராமங்களில் மார்ச் 1 ந் தேதி முதல் ஏப்ரல் 10 ந் தேதி வரை விழாக் கள் நடத்துவதற்கு அரசாணை பெறுவத ற்கு விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக் கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செல்போன் மூலம் நூதனமாக கைவரிசை
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் முதலியார் தெருவை சேர்ந்தவர் பரணி(64), இவர் தனது மகனுடன் பால் வியாபாரம் செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை தனது வங்கி கணக்கில் சேமித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பால் வியாபாரம் செய்து விட்டு பணத்தை ஒடுகத்தூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள தனது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

    பின்னர், வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

    அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் பரணியிடம் தங்களது ஏடிஎம் மற்றும் வங்கி கணக்கு புதுப்பிக்க வேண்டும் அதற்கு உங்கள் செல்போனுக்கு ஓடிபி (கடவுச்சொல்), ஒன்று வரும் அதை என்னிடம் கூறுங்கள், ஏடிஎம் மற்றும் வங்கி கணக்கு புதுப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவரது செல்போனுக்கு ஒரு எண் வந்துள்ளது.

    இதனை உண்மை என்று நம்பிய பரணி தனது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை அந்த மர்ம நபரிடம் கூறியுள்ளார். பின்னர், உடனே பால் வியாபாரி பரணியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    இதையடுத்து தான் ஏமாத்தப்பட்டதை உணர்ந்த அவர் வங்கிக்கு சென்று இதுபற்றி கேட்டுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் இதற்கும் வங்கிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து, பரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வேப்பங்குப்பம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • ஒடுகத்தூர் அருகே சோகம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பெரியஏரியூர் கிராமத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

    ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 43) இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவரது மனைவி கடந்த 3 மாதத்திற்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.

    மனவேதனையில் வந்த கோபி இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவ்வூரில் எருது விடும் திருவிழா நடைப்பெற்றது. அப்போது மனமுடைந்த கோபி அருகே இருந்த மாட்டு கொட்டைகைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த அவரின் மகன் விக்னேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோபியை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து முதலுதவி அளிக்கப்பட்டது.

    உயிருக்கு போராடி கொண்டு இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற ஏற்பாடு
    • வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரி தகவல்

    ஒடுகத்தூர்:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் சாலை ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது.

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது மற்றும் 5வது வார்டுகளான பஜார் தெரு, பஸ் ரோடு பகுதியில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டிள்ளனர்.

    இதனால், பஸ் போக்குவரத்து மட்டுமின்றி வாகனங்கள் செல்ல கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், இரண்டு தெருக்களிலும் 25 அடிக்கும் மேல் இருந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பு செய்த பின் 15 அடி கூட இல்லாமல் உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

    எனவே, சாலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முறையாக அளவிடு செய்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நடந்து முடிந்த கவுன்சிலர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கடிதத்தை வருவாய்த்துறையினரிடம் வழங்கப்பட்டது.

    இதுகுறித்த, மனுக்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை முறையாக அளவிடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி, தாசில்தார் ரமேஷ் ஆலோசனையின் பேரில் ஆர்ஐ நந்தகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன், சர்வேயர் திலீப்குமார் (பள்ளிகொண்டா பிர்கா), சர்வேயர் கிரிதரன் (ஒடுகத்தூர் பிர்கா) மற்றும் 8 கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரண்டு தெருக்களிலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவிடும் செய்யும் பணிகளை தொடங்கினர்.

    இப்பணிகள், முடிந்த பிறகு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • வேலூரில் பொதுமக்கள் வரவேற்பு
    • நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் பெஞ்சாலா சைதன்யா (வயது 22). இவர் பிளாஸ்டிக் ஒழிப்பையும், பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை இந்தியாவை வலியுறுத்தி, ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இவர் ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள், தமிழகம் வழியாக இதுவரை 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திற்கு இன்று வந்தார் அவருக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சைதன்யா கூறுகையில்:-

    'மரம் நடுதலை' வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், அதே ஆண்டில், 'உணவை வீணாக்கக் கூடாது' என்பதை வலியுறுத்தி, நெல்லூரிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.

    தற்போது, 'பிளாஸ்டிக் மறுசுழற்சியை' வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூ ழலுக்கு மாசு ஏற்படுகிறது.

    அதன் புழக்கம் தவிர்க்க முடியாமல் உள்ள நிலையில் அதை மறு சுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும். இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கி யுள்ளேன்.

    625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

    நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன் என்றார்.

    • பணி நிரந்தர செய்ய வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சி ஐ டி யு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் ஜெகன் பொருளாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி ஐ டி யு மாவட்ட செயலாளர் பரசுராமன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தாமோதரன், மாவட்ட தலைவர் தர்மன் ஆகியோர் பேசினர்.

    புயல் பாதிப்புகளின் போது இரவு பகலாக பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அரசு அறிவித்தபடி தினக்கூலி ரூ.380 அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

    பல ஆண்டுகாலம் பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களை காலியாக உள்ள பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

    ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவது கைவிட வேண்டும் ஊதிய உயர்வு வேலைப்பளு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடந்தது.

    • மின்வாரிய அதிகாரிகள் தகவல்
    • வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11,27,397 மின் இணைப்புகள் உள்ளன

    வேலூர்:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியே மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மின்வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒவ்வொரு மின் இணைப்புதாரரும் கண்டிப்பாக ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

    இதனால் ஒவ்வொரு பயனீட்டாளரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதில் 1 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளில் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார இணைக்கும் படி துரிதமாக நடைபெற்றது. இந்த மாவட்டங்களில் 11,27,397 மின் இணைப்புகள் உள்ளன.

    இந்த அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நகர சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பெண்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளதாக புகார்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரமன்ற அவசரக் கூட்டம் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, சுகாதார அலுவலர் மொய்தீன், நகரமைப்பு வளர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் துவங்கியவுடன் நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் பேசுகையில்:-

    நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி தனது வார்டில் உள்ள சித்திவிநாயகர் கோவில் தெருவில் சாலை மற்றும் வடிகால் வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்ய பொதுமக்கள் பங்களிப்பாக 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து தந்துள்ளார் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    உறுப்பினர் ராணி குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம் ஜி ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகள் உள்ளன.

    அதன் பின்புறம் 2 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், பெண்கள் செல்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளது இந்த கடையை மாற்றவேண்டும் வலியுறுத்தினார்.

    உறுப்பினர் ஆட்டோ மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேதாஜி சவுக் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் அகற்ற வேண்டும் ஒரு வழி பாதையாக உள்ள அங்கு டாஸ்மாக்கடை இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறினார்.

    அப்போது உறுப்பினர்கள் பலர் எழுந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை அருகே காலை முதலே மது விற்பனை செய்கிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது இந்த டாஸ்மாக் கடை விற்பனை தவிர மற்ற நேரங்களிலும் அங்கே மதுபானங்கள் விற்கப்படுகிறது, குடியாத்தம் நகரில் அதிகளவு கஞ்சா விற்பனை உள்ளது இதனையும் நகர போலீசார் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.

    உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் கலெக்டர் ஆய்வுக்கு வந்தபோது நானும் உடன் சென்றிருந்தேன் அப்போதே இரண்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது இருப்பினும் அந்த மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளாத கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க வேண்டும் இறைச்சி கழிவுகளை எக்காரணம் கொண்டு பொதுவெளியில் கால்வாயிலோ கொட்ட அனுமதிக்க கூடாது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் கூறிய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×