search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் மயான கொள்ளை விழா ஏற்பாடுகள் தீவிரம்
    X

    பாலாற்றில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலை செய்யும் பணி நடந்து வருகிறது.

    வேலூரில் மயான கொள்ளை விழா ஏற்பாடுகள் தீவிரம்

    • பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தை சீர் செய்யும் பணி தொடங்கியது
    • கட்-அவுட்டுகள், பேனர்களுக்கு கட்டுப்பாடு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா வரும் 19-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். ஊர்வலத்தில் தங்களுடைய நேர்த்திக்க டனை செலுத்தும் வகையில் பல்வேறு சாமி வேடமிட்டு வருவார்கள்.

    இதனால் வேலூர் புதிய நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தை சீர் செய்யும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரங்களை கொண்டு அப்பகுதி முழுவதும் சீர் செய்யப்பட்டு வருகிறது.

    மகா சிவராத்திரியை யொட்டி மயானக்கொள்ளை திருவிழா பல்வேறு இடங்களில் கொண்டா டப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்துக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மாவட்டத்தில் முக்கியமான சந்திப்புகள், வளைவுகள், நடைப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்கள் சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி யின்றி வைக்க கூடாது.

    கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×