search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி வாலிபர் 50,000 கி.மீ. சைக்கிள் பயணம்
    X

    சைக்கிள் பயணம் வந்த வாலிபர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி வாலிபர் 50,000 கி.மீ. சைக்கிள் பயணம்

    • வேலூரில் பொதுமக்கள் வரவேற்பு
    • நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் குர்ரம் பெஞ்சாலா சைதன்யா (வயது 22). இவர் பிளாஸ்டிக் ஒழிப்பையும், பிளாஸ்டிக் மறுசுழற்சி, பசுமை இந்தியாவை வலியுறுத்தி, ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து இந்தியா முழுவதும் 50 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இவர் ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள், தமிழகம் வழியாக இதுவரை 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திற்கு இன்று வந்தார் அவருக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சைதன்யா கூறுகையில்:-

    'மரம் நடுதலை' வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே முதல் ஜூன் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும், அதே ஆண்டில், 'உணவை வீணாக்கக் கூடாது' என்பதை வலியுறுத்தி, நெல்லூரிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன்.

    தற்போது, 'பிளாஸ்டிக் மறுசுழற்சியை' வலியுறுத்தி, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூ ழலுக்கு மாசு ஏற்படுகிறது.

    அதன் புழக்கம் தவிர்க்க முடியாமல் உள்ள நிலையில் அதை மறு சுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும். இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கி யுள்ளேன்.

    625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் உள்ள 700 மாவட்டங்களில் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

    நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன் என்றார்.

    Next Story
    ×