என் மலர்
வேலூர்
- அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட 2 ஊராட்சிகளில் நடக்கும் வார சந்தை ரூ. 7.63 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கநல்லூர் மற்றும் கரடிகுடி ஆகிய ஊராட்சிகளில் வாரச்சந்தை நடத்துவதற்க்கான ஏலம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் சதீஷ், துனை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் முதலாவதாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடக்கும் கெங்கநல்லூர் வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 17 ஏலதாரர்கள் கலந்துக்கொண்டு ஏலத்தை குறைந்த ஏலத்தொகையான ரூ.50 ஆயிரம் முதல் கேட்கப்பட்டது.
அப்போது ஏலதாரர்கள் இடையே சிறிது நேரம் சலசலப்பு, வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் ஏலாதாரர்களை சமாதானப்படுத்தினர். இதன் பின் தொடர்ந்து ஏலம் நடத்தது.
இதில் இறுதியாக இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜி.தவமணி என்பவர் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். இதில் கடந்த ஆண்டு ரூ 4.51 லட்சத்து ஏலம் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதாலாக ரு. 5 லட்சத்திற்கு ஏலம் நடத்தப்பட்டது.
இதில் ஜி.எஸ்.டி 18 சதவீதம் மற்றும் 2 சதவீதம் வரி என மொத்தம் 20 சதவீதம் கூடுதலாக பணம் செலுத்தி வார சந்தையை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வாரம்தோறும் புதன்கிழமைகளில் நடக்கும் கரடிகுடி வார சந்தைக்கான ஏலம் மாலை 3 மணியளவில் நடந்தது. இதில் பி.வி.ஆர் எண்டர்பிரைஸ் நிருவனம் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர். அதே போல் 20 சதவீதம் ஜி.எஸ்.டி, வரி செலுத்தி வார சந்தை நடத்த அணுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டு ரூ. 84 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்துக்கு ஏலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ேமகம் மந்தமாக காணப்படுவதால் வெப்பம் குறைந்தது
- நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்பு
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மலைக்கிராம பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது.
ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.இந்த மழை கடந்த வாரம் முதல் அதிகரித்து வரும் வெப்பத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளித்தது.
ஆலங்காயம் தாலுக்காவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை பெய்துள்ளது. இந்த பருவத்துக்கான விதைப்பு பணிகளை துவங்கியுள்ள விவசாயிகள், மழையால் பயனடைந்தனர். ஆலங்காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, வாழை மற்றும் சோளம் உள்ளிட்ட முக்கியப் பயிர்கள் பயிடப்பட்டுள்ளன.
இதுபோன்ற மழையால், இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலத்தடி நீரை அதிகரிக்க செய்ய உதவுகிறது. பாலாற்றின் நீர் பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முந்தைய வடகிழக்கு பருவமழையின் போது மழை குறைவாக இருந்ததால், இதுபோன்ற மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
இந்த கோடையில் வறண்ட பகுதிகளில் ஏற்படும் குடிநீர் நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது, வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 944 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்களான வாலாஜா, ஆற்காடு, திமிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்ப டுகிறது. இத்திட்டத்திற்காக பாலாற்றின் குறுக்கே குழாய்கள் அமைக்கப்பட்டன.
தற்போது, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், இத்திட்டத்தை செயல்ப டுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குழாய்களில் பழுது நீக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இத்தகைய திடீர் மழை அதிகப்படியான ஆவியாதலை குறைக்க உதவும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பட்டாசு மூட்டையை தூக்கி வீசியபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கிராமத்தில் கடந்த 14-ந் தேதி ஜானகி என்பவர் உடல்நலக்கு றைவால் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வ லத்தின் போது உறவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.
அப்போது பெரிய சாக்கு மூட்டையில் இருந்த பட்டாசில் தீப்பொறி விழுந்துள்ளது.
இதனால், சாக்கு மூட்டை வைத்திருந்தவர்கள் அதனை தூக்கி வீசியுள்ளனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த அதே கிராமத்தை சேர்ந்த முனுசாமி(60), சிவாஜி(60) மீது பட்டாசு மூட்டை விழுந்துள்ளது.
இதில், பட்டாசு வெடித்ததில் 2 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, முனுசாமியின் மனைவி முனியம்மாள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை
- வேலூர் அருகே கருவேப்பிலைக்குள் மறைத்து கடத்தியபோது சிக்கியது
வேலூர்:
திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (வயது 41), சோமாசிபாடி, புதுமை மாதா நகர், சர்ச் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (45) இவர்கள் இருவரும் கட்டை பையில் கருவேப்பிலைக்குள் மறைத்து ரூ.1.50 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்தி வந்தனர்.
வேலூர் அருகே உள்ள அரியூர் போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருவரும் பிடிபட்டனர்.
இதில், வின்சென்ட் ராஜ் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். திருவண்ணாமலையில் பிரபாகரன் என்பவரது வீட்டில் எலெக்ட்ரீஷியன் வேலைக்காக பள்ளம் தோண்டியபோது இந்த சிலை கிடைத்ததாக கூறியுள்ளார்.
அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ரூ.ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையுடன் அவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். ஙபின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் இருந்து சிலை கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கஞ்சா போதை பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி போன்றவை கடத்தப்படுகிறது.
- தங்கம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கஞ்சா போதை பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி போன்றவை கடத்தப்படுகிறது.
இதனை தடுக்க ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தினமும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து கோவை, கேரளா, பெங்களூர் செல்லும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் விரைவு ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதில் காட்பாடி ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
பி3 பெட்டியில் கோவையை சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பவர் பயணம் செய்தார். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க இருந்தது.
இதனை அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தங்கம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றை வேலூர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆனந்தனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கட்டை பையில் கருவேப்பிலைக்குள் பதுக்கி வைத்தனர்
- வாலிபர்கள் 2 பேர் கைது
வேலூர்:
வேலூர் மாவட்டம் அரியூர் ஆவாரம் பாளையம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது சந்தே கத்துக்கிடமாக பைக்கில் வந்தவர்களை மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் இருந்த கட்டைப் பையை சோதனை செய்தபோது அதில் காய்கறி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலை ஒன்று மறைத்து வைத்திருந்தனர்.அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஐம்பொன்னால் ஆன 1 ½ அடி உயரமும், 5 ½ எடை கொண்ட அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிலையை கடத்தி வந்தவர்கள் திருவண்ணாமலை புது வாணியங்குளத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (வயது 41), சோமாசிபாடி, புதுமை மாதா நகர், சர்ச் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் (45) என்பது தெரியவந்தது.
இதில், வின்சென்ட் ராஜ் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். திருவண்ணாமலையில் பிரபாகரன் என்பவரது வீட்டில் எலெ க்ட்ரீஷியன் வேலைக்காக பள்ளம் தோண்டிய போது இந்த சிலை கிடைத்ததாக கூறியுள்ளார்.
அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ரூ.ஒன்றரை கோடிக்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிவித்தனர்.
இதனை யடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கண்ணன், வின்சென்ட் ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையுடன் அவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அவர்களிடம் சிலையை வாங்க வந்தவர்கள் யார்?
அம்மன் சிலையின் மதிப்பு குறித்தும் அந்த சிலை எங்கு யாரால் திருடப்பட்டது என்றும் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா ரோடு காமாட்சி அம்மன் கார்டன் அருகே மதுவிலக்கு அமலாக்க போலீஸ் நிலையம் அருகே வசிப்பவர் ஆறுமுகம் (வயது 85) முன்னாள் ராணுவ வீரர் நேற்று காலையில் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது குடியாத்தம் நகரில் இருந்து குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள் தேர்வு எழுத ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் ஆறுமுகம் மீது பைக் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆறுமுகத்தை குடியாத்த அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்ததில் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த மாணவர் தினேஷ் பாபு வேலூர் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு ள்ளார் இந்த விபத்து குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
- ஒன்றியக்குழு தலைவர் சத்யானந்தம் ஆய்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி அருகே உள்ள கோவிந்தப்ப நகரில் இரண்டு வீடுகளில் உள்ளே மின்கம்பங்கள் உள்ளது. அதில் உள்ள மின் கம்பிகளில் மின்சாரம் செல்கிறது தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.
இதனால் அந்த வீட்டின் உள்ளே வசிப்பவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மின்கம்பங்களை அகற்றக்கோரி பல ஆண்டுகளாக அந்த வீட்டில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்கும் மின் கம்பங்களை அகற்றக்கோரி குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தத்திடம் நேற்று கோரிக்கை வைத்தனர்.
இவரைத் தொடர்ந்து குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள்எம்.கார்த்திகேயன், ஆர். திருமலை உள்ளிட்டோர் நேற்று கோவிந்தப்பன் நகரில் வீடுகளுக்குள் உள்ள மின்கம்பங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கூறுகையில்:-
வீடுகளுக்குள்ளே மின்கம்பங்கள் இருப்பது குறித்து மின்சார மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நீண்ட நாள் பிரச்சனையான வீடுகளுக்குள்ளே இருக்கும் மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரகாசம், மஞ்சுநாதன் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜோதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- குடும்ப தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 29) குடிநீர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இன்று அதிகாலை சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
வேலூர் அருகந்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ரெட் என்ற ராம்குமார் (வயது 23). இவர், கடந்த 2018-ம் ஆண்டு நண்பரை கொலை செய்து பாலாற்றில் புதைத்த வழக்கில் தொடர்புடையவர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் தேடி வந்தனர். மேலும், அவரை கைது செய்ய கோர்ட்டு பிடியாணை பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், காதல் தகராறில் வேலூர் காகிதபட்டறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர் ஏழுமலை ஆகியோரை கடந்த 6-ம் தேதி கத்தியால் குத்திய வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டுபிடியாணையை நிறைவேற்ற அவரை கைது செய்து ஆஜர்படுத்த பாதுகாப்புடன் நடவடிக்கை எடுத்தனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டுக்கு நேற்று பலத்த வேனில் ராம்குமார் நேற்று அழைத்து வரப்பட்டார். வேனில் இருந்தவருக்கு மதிய உணவினை போலீசார் வழங்கினர். அதை சாப்பிட்டதும் வேனில் இருந்தபடி கையை கழுவுவதுபோல் பாவ்லா காட்டிய ராம்குமார் திடீரென வேனில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர்கள் வெங்கடேசன், பிரகாஷ் ஆகியோர் அதிர்ச்சியடைந்து ராம்குமாரை துரத்தினர்.
கோர்ட்டு வளாகத்தில் போலீசார் ஒருவரை துரத்துவதை பார்த்த கோர்ட்டில் பணிக்கு வந்த ஏட்டுகள் கேசவன், முருகேசன் ஆகியோரும் தப்பியவரை விரட்டினர்.
ராம்குமார் கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி சர்வீஸ் சாலையை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் ஓடினார். ஆனால், விடாமல் துரத்திய போலீசார் உயிரை பணயம் வைத்து தேசிய நெடு ஞ்சாலையில் துரத்தினர்.
அதற்குள், ராம்குமார் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.
சுமார் 10 அடி உயரத்தில் இருந்து அவர் குதித்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்தவரால் எழுந்திருக்க முடியாமல் இருந்தவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் துறையினர் பிடித்தனர்.
பின்னர், அவருக்கு மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர். அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
போலீசாரை தள்ளிவிட்டு கோர்ட்டில் இருந்து தப்ப முயன்றதாக ராம்குமார் மீது ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் மேகநாதன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் பணி செய்ய விடாமல் தடுத்தது, தப்பி ஓடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலுக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியே இருந்து ஜெயிலுக்குள் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 56 போலீசாரும், சிறை வார்டன் உள்ளிட்ட 65 சிறை காவலர்கள் சேர்ந்து வேலூர் ஜெயிலில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
ஆண்கள் ஜெயிலில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது 2 மோப்ப நாய்கள் உதவியுடன் கைதிகளின் அறை, கழிவறை பகுதிகள், சமையலறை என வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
இதேபோல போலீசார் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தினர்.
2 ஜெயில்களிலும் நடந்த இந்த அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
- சாலைகள் உடனடியாக சீர் அமைக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாநகர 2-வது மண்டல தலைவர் கோபி தலைமை தாங்கினார்.
18-வது வார்டு தலைவர் முருகன் வரவேற்புரை வழங்கினார்.மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலா ளர்கள் ஜெகன்நாதன், எஸ்எல்.பாபு, மகேஷ், மாவட்ட பொருளாளர் தீபக், மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் நரேந்திரன் சிறப்புரை யாற்றினார். உண்ணா விரத போராட்டத்தில் பாஜகவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 18-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் சுமதி மனோகரன் மாமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவடைகிறது.
'மக்கள் பிரச்சனைகளில் முழு வேகத்துடன் செயல்பட்டு கொண்டு இருக்கும் கவுன்சிலருக்கு மாநகராட்சி நிர்வாகம் எவ்வித ஒத்துழைப்பு வழங்குவதில்லை. காரணம் பா.ஜ.க. உறுப்பினர் என்பதால் வார்டு பிரச்சனை குறித்து ஏற்கனவே பலமுறை கலெக்டர், மேயர், மாநகராட்சி கமிஷ்னர், உதவி ஆணையாளர், மண்டல் குழு தலைவர் ஆகியோர்க்கு மனுக்கள் வழங்கியுள்ளோம். எவ்வித முன்னேற்றமும் இல்லை. வார்டில் உள்ள பிரச்சனைகள் சாமுவேல் நகர் மக்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படு வதில்லை. எஸ் பி ஆபீஸ் பின்புறம் உள்ள சாலை மற்றும் தண்டு மாரியம்மன் கோயில் சாலை (ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சத்துவாச்சாரி கானார் தெரு, ஸ்கூல் தெரு, சாவடி தெரு, மடம் தெரு, சன்னதி தெரு. பள்ளத் தெரு ஆகிய தெருக்கள் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தோண்டப்பட்டு மக்கள் நடமாட முடியாத நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.
ஸ்கூல் தெரு தினசரி 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் தெரு. இதனையும் மாநகராட்சி நாங்கள் பலமுறை எடுத்து கூறியும் நடவடிக்கை இல்லை.
வரும் நாட்களில் சத்துவாச்சாரி முருகர் கோவில் மற்றும் கெங்கை யம்மன் கோவிலில் திருவிழா காலம் என்பதால் சுவாமிகள் திருவீதி உலா வரும். ஆகவே உடனடியாக சரி செய்ய வேண்டும் .
சி.எம்.சி. காலனி மற்றும் ராகவேந்திரா நகர் விடுபட்ட உள் சாலைகள் உடனடியாக சீர் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






