search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளுக்குள் செல்லும் மின் கம்பங்கள்
    X

    வீட்டிற்குள் நடுவே அமைந்துள்ள மின் கம்பம்.

    வீடுகளுக்குள் செல்லும் மின் கம்பங்கள்

    • அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ஒன்றியக்குழு தலைவர் சத்யானந்தம் ஆய்வு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்டசமுத்திரம் ஊராட்சி காளியம்மன்பட்டி அருகே உள்ள கோவிந்தப்ப நகரில் இரண்டு வீடுகளில் உள்ளே மின்கம்பங்கள் உள்ளது. அதில் உள்ள மின் கம்பிகளில் மின்சாரம் செல்கிறது தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.

    இதனால் அந்த வீட்டின் உள்ளே வசிப்பவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மின்கம்பங்களை அகற்றக்கோரி பல ஆண்டுகளாக அந்த வீட்டில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்கும் மின் கம்பங்களை அகற்றக்கோரி குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தத்திடம் நேற்று கோரிக்கை வைத்தனர்.

    இவரைத் தொடர்ந்து குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள்எம்.கார்த்திகேயன், ஆர். திருமலை உள்ளிட்டோர் நேற்று கோவிந்தப்பன் நகரில் வீடுகளுக்குள் உள்ள மின்கம்பங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கூறுகையில்:-

    வீடுகளுக்குள்ளே மின்கம்பங்கள் இருப்பது குறித்து மின்சார மின்வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நீண்ட நாள் பிரச்சனையான வீடுகளுக்குள்ளே இருக்கும் மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரகாசம், மஞ்சுநாதன் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜோதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×