என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது விபரீதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே புதுப்பாளையம் ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (வயது 60). இவர் புதுப்பாளையம் அருகே கூலி வேலை செய்துவிட்டு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    புதுப்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத் துக்குள்ளானது.

    இதில் சிவகாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காககொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதினார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 31), பூ மாலை கட்டும் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று ஆடையூரில் இருந்து இனாம்காரியந்தல்செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால்வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய அவர் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • ஜெயிலர், லால் சலாம் படம் வெற்றி பெற வேண்டுதல்
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    திருவண்ணாமலை:

    ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் ரஜினி நடித்த லால் சலாம் சினிமா எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக படமாக்கப்பட்டது.

    ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் 7 நாட்கள் தங்கி படத்தின் காட்சிகளில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து படம் வெற்றி பெற வேண்டி ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா நேற்று மாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார்.

    ஜெயிலர், லால் சலாம் படம் வெற்றி பெற வேண்டி மகள் ஐஸ்வர்யா அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், நடந்து முடிந்த பவுர்ணமி நாளில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் நேற்று கோவிலுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பகலில் கொளுத்திய கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சிலர் கிரிவலம் சென்றனர்.

    • 15 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்
    • 1203 பேருக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அரசு மேநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

    சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரவணன் மேற்பார்வையில், சிறப்பு மருத்துவக்குழுவினர், சுகாதார, அங்கன்வாடி மைய பணியாளர்கள் சுமார் 60 பேர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு, 1203 பேருக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். மேலும் தொடர் சிகிச்சைக்காக 15 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்.

    மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து, தாய்ப்பால் வார உறுதிமொழி ஏற்றனர்.

    இதில் சந்தவாசல் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு, துணை தலைவர் சரஸ்வதிசேகர், ஒன்றிய கவுன்சிலர் அகிலாண்டம்ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கடனுதவிகள், நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது

    கீழ்பென்னாத்தூர்:

    சிறுநாத்தூர் கூட்டுறவுசங்க அலுவலகத்தில் கடைசி நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

    சங்க தலைவர் தொப்பளான் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

    சங்க செயலாளர் பச்சையப்பன் வரவேற்றார். கூட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டின் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான வரவு-செலவு அறிக்கையை அங்கீகரித்தல்போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டுறவு சங்க தலைவர் சி.தொப்பளான் பேசுகையில், கடந்த 5 ஆண்டு பதவிக் காலத்தில் விவசாயி கள், மகளிர் குழுவினர்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கடனுதவிகள், நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

    சங்க உறுப்பினர்கள் ஆறுமுகம், சந்திரா ராஜேந்திரன், செல்வி, காந்தியம்மாள், சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    காசாளர் முருகன் நன்றி கூறினார்.

    • வேஷ்டியை தரையில் விரித்து போட்டு அதன் மீது நடந்து சென்றார்
    • சாமி தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் தொடங்கினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அருணாசலா கோவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் வருவது வழக்கம்.

    இதில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அகஸ்தியர் ஆசிரமத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வித்தியாசமான முறையில் கிரிவலம சென்றார்.

    திருவண்ணாமலை யில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளதாக முன்னோர்கள் தெரிவித்த நிலையில் இந்த ஆன்மீக பக்தர் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவல பாதையில் செல்ல தொடங்கினார்.

    தன் பாதங்கள் தரையில் படாமல் இருக்க நீளமான வேஷ்டியை தரையில் விரித்து போட்டு அதன் மீது நடந்து கிரிவலம் சென்றார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி மற்றும் மகளும் இருந்தனர். மேலும் இந்த பக்தர்கள் துணியை பயன்படுத்தி நடந்து சென்றதை அந்த வழியாக சென்ற ஆன்மீக பக்தர்களும் மற்றும் பொதுமக்களும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

    • கலெக்டர் முருகேஷ் ஆய்வு
    • பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் பணியாற்ற வேண்டும் உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெகட்ர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிபேகோபுரத்தெரு சந்திப்பு முதல் காந்தி சிலை வரையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    மேலும் திருவண்ணாமலை தேரடி வீதியில் கான்கீரிட் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, நகராட்சித்துறை ஆகிய 3 துறைகள் மூலமாக பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பணியின் மொத்த அளவு 1080 மீட்டர் அதில் தற்பொழுது 350 மீட்டர் அளவிற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    மேலும் நகராட்சியின் மூலமாக 12 பாதாள சாக்கடைகள் மற்றும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. போலீசார் மூலமாக சாலை போக்குவர த்துகளை உடனுக்குடன் சரி செய்து பொது மக்கள் மற்றும் பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை கோட்டப்பொறியாளர் ராஜ்குமார். திருவண்ணாமலை சப்-கலெக்டர் மந்தாகினி, திருவண்ணா மலை நகராட்சி ஆணை யாளர் தட்சணாமூர்த்தி, மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருகிற 11-ந் தேதி கருணாநிதி அரசு கலைகல்லூரியில் கல்வி கடன் மேளா நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

    அப்போது கூட்டத்தில் அவர் தெரிவித்தாவது:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி என 31 கல்லூரிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிப்பு தொடர வேண்டுமென என்னிடம் கல்விகடன் நிதியுதவி கேட்டு வருகின்றனர்.

    மாவட்ட ஆட்சியருக்கு அரசு வருடத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி ஓடுக்கீடு செய்கிறது.

    அதன் அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரியில் சேர பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்த இன்னல்களை போக்கிடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் கல்விகடன் மேளா வருகின்ற 11-ந் தேதி கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.

    இந்த முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    மேலும் மாணவர்களுக்கு https://www.vidyalakshmi.co.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான மாணவ, மாணவியர்களுக்கு தனி தனியே பதிவு செய்யும் மையம் அமைக்க உள்ளன. இந்த கல்விகடன் மேளாவில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி. இந்தியன் ஓவர்சீயஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, என 12 வங்கிகள் கலந்து கொள்ள உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினர்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி). ரிஷப், , திட்ட இயக்குநர், மகளிர் திட்டம். ஸையித்சூலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.கௌரி, மற்றும் உயர் அலுவலர்கள், கல்லூரி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
    • தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி களில் தி.மு.க. மாணவர் அணி பொறுப்புகளுக்கு வரும் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பி னருமான எ.வ.வேலு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத்தலைவருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்டத்தில் திமுக மாணவர் அணி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள் பொறுப்புகளுக்கு, விண்ணப்பிக்க விரும்புவோர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த வர்கள், வந்தவாசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று, அதனை உரிய ஆவணங்க ளுடன் பூர்த்தி செய்து, அந்ததந்த மாவட்ட அலுவல கங்களில் வரும் 10-ந்தேதி வியாழக்கிழமை மாலைக்குள் ஒப்படைத்திட வேண்டும்.

    நகர, ஒன்றியம், பேரூர் அமைப்பிற்கு ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் நியமிக் கப்படுவர். துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராகவும் மற்றும் பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் இருப்பது அவசியம்.

    ஒரு துணை அமைப்பாளர், கண்டிப்பாக தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம்.

    30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இப்பொறுப்பு களுக்கு விண்ணப்பிக்கவும்.

    நியமிக்கபடவுள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லூரி/ டிப்ளமோ படிப்பை முடித்தவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் பயி லக்கூடியவராகவோ இருத்தல் அவசியம்.

    இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள், மீண்டும் அப்- பொறுப்புகளுக்கு வர விரும்பினால், அவர்களும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

    விண்ணப்பம்

    விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக. முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பத்துடன் கழக உறுப்பினர் அட்டை, வாக் காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழின் நகல் இணைப்பது அவசியம்.

    முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டக் கழகத்தில் ஆகஸ்டு மாதம், 10-ந் தேதி வியாழக்கிழமை மாலை மணிக்குள் ஒப்படைக்கவேண்டும்.

    தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்கார ணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் பிரேம்குமார் (29) தனது நண்பர்களுடன் திருவண்ணாமலை தேரடி வீதி அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து மது அருந்தி உள்ளார்.

    பின்னர் பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்க ளுடன் தேரடி வீதியில் நடந்து சென்ற போது ஏற்பட்ட சண்டையில் வெங்கடேசன் நடைபாதை பழக்கடையில் பழம் அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து பிரேம்குமார் கழுத்தில் குத்தியுள்ளார்.

    இதில் பிரேம்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரேம்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பிரேம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு சென்னை ராஜூவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருவண்ணா மலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கத்தியால் குத்திய புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனை (35) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் நடைபெற்ற கத்தீகுந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வளைவில் திரும்ப முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு கண்ணனூர் ரோட்டு தெருவை சேர்ந்தவர் அரிகுமார். (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மோனிகா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தனது பைக்கில் அரிகுமார் சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கெங்கை சூடாமணி அருகே வரும்போது வளைவில் திரும்ப முயன்றார். அப்போது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசா ருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் -இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் அரிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி இன்று அதிகாலை 4.45 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அத்தியந்தல் அருகே வரும்போது பஸ் டிரைவரின் கட்டு ப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது தடுப்பு சுவரை இடித்து சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

    இதில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் கண்டக்டர் ஜனார்த்தனனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் ஒரு பயணியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×