என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுநாத்தூர் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு கூட்டம்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கடனுதவிகள், நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது
கீழ்பென்னாத்தூர்:
சிறுநாத்தூர் கூட்டுறவுசங்க அலுவலகத்தில் கடைசி நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
சங்க தலைவர் தொப்பளான் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
சங்க செயலாளர் பச்சையப்பன் வரவேற்றார். கூட்டத்தில் 2023-2024-ம் நிதியாண்டின் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான வரவு-செலவு அறிக்கையை அங்கீகரித்தல்போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டுறவு சங்க தலைவர் சி.தொப்பளான் பேசுகையில், கடந்த 5 ஆண்டு பதவிக் காலத்தில் விவசாயி கள், மகளிர் குழுவினர்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கடனுதவிகள், நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
சங்க உறுப்பினர்கள் ஆறுமுகம், சந்திரா ராஜேந்திரன், செல்வி, காந்தியம்மாள், சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
காசாளர் முருகன் நன்றி கூறினார்.
Next Story






