search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து
    X

    குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் பிரேம்குமார் (29) தனது நண்பர்களுடன் திருவண்ணாமலை தேரடி வீதி அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து மது அருந்தி உள்ளார்.

    பின்னர் பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்க ளுடன் தேரடி வீதியில் நடந்து சென்ற போது ஏற்பட்ட சண்டையில் வெங்கடேசன் நடைபாதை பழக்கடையில் பழம் அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து பிரேம்குமார் கழுத்தில் குத்தியுள்ளார்.

    இதில் பிரேம்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரேம்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பிரேம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு சென்னை ராஜூவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருவண்ணா மலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கத்தியால் குத்திய புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனை (35) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் நடைபெற்ற கத்தீகுந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×