search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை தடுப்பில் பைக் மோதி வாலிபர் சாவு
    X

    சாலை தடுப்பில் பைக் மோதி வாலிபர் சாவு

    • வளைவில் திரும்ப முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு கண்ணனூர் ரோட்டு தெருவை சேர்ந்தவர் அரிகுமார். (வயது 27). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி மோனிகா, இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தனது பைக்கில் அரிகுமார் சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கெங்கை சூடாமணி அருகே வரும்போது வளைவில் திரும்ப முயன்றார். அப்போது பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசா ருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் -இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் அரிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×