என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கொலையா? போலீஸ் விசாரணை
    • வி.ஏ.ஓ.வுக்கு தகவல் அளித்தனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில் உள்ள பயன்பாடு இல்லாத விவசாய கிணறு உள்ளது.

    நேற்று மாலை அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வி.ஏ.ஓ.வுக்கு தகவல் அளித்தனர்.

    இதுகுறித்து அவர் பிரம்மதேசம் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலவை தீயணைப்புப் படை வீரர்கள் கிணற்றில் மேற்பகுதியில் இருந்து முட்புதர்களை அகற்றி அழுகிய நிலையில் இருந்த சுமார் 85 வயதுடைய முதியவர் உடலை மீட்டனர்.

    போலீசார் முதியவர் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உற்சவ அம்மன் கொலு வைத்து அலங்காரம்
    • பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு கோவில் மண்டபத்தில் உற்சவ அம்மன் கொலு வைத்து, 15-ந்தேதி பார்வதி அலங்காரமும், 16-ந்தேதி காமாட்சி அலங்காரமும், 17-ந் தேதி மாவடி சேவை அலங்காரமும், 18-ந் தேதி ஸ்ரீமீனாட்சி அலங்காரமும்,

    19-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 20-ந் தேதி துர்காதேவி அலங்காரமும், 21-ந் தேதி ஸ்ரீஅன்னபூரணி அலங்காரமும், 22-ந் தேதி தனலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 24-ந் தேதி திருஅவதார அலங்காரமும் செய்யப்பட்டு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை யும் நடக்கிறது. பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு லட்சார்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்
    • திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் வழிபாடு

    வேங்கிக்கால்:

    மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய அமாவாசை திதி கொடுப்பதற்கு ஏற்றதாகும். மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை நினைவு கூற வேண்டும். மேலும் புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி நம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    அமாவாசை நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று அவர்களை ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இந்த நாட்களில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுளுடன் புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

    சாதாரண அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது 3தலைமுறை முன்னோர்களை சென்று சேரும். மகாளய அமாவாசை தினத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் தாய்வழி, தந்தைவழி முன்னோர்களுக்கு மட்டுமின்றி, நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பதற்கு சமமாகும்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை தினமான இன்று காலை ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம், கிரிவலப்பாதையில் உள்ள புனித தீர்த்த குளம் உள்ளிட்ட இடங்களில் கூடிய பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    • சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
    • ஆற்றைக் கடக்க வேண்டாம் என அறிவுரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவான 119 அடியில் 116.55 அடியை எட்டியுள்ளது.

    இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக நேற்றும் வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.தற்போது மழை காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 1,250 கனஅடியாக உள்ளது.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    கடந்த 1958-ம் ஆண்டு கட்டப்பட்ட அணையின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக 119 அடியை எட்டியது.

    கடந்தாண்டு செய்யப்பட்ட அணையின் மறு சீரமைப்பிற்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது.முன்னதாக 99 அடி வரை மட்டுமே நீரை சேமிக்க முடியும்.

    தற்போது அணையின் கொள்ளளவான 7.32 டி.எம்.சி. யில் நேற்று 7.22 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது.

    இந்த அணையில் இருந்து 88 குளங்களுக்கு நீர் அளிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும் வரை சாத்தனூர் அணையில் இருந்து ஆற்றில் நீர் தொடர்ந்து வெளி யேற்றப்படும்.

    இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 36 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றைக் கடக்க வேண்டாம் என அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்டியலை உடைக்க முடியாததால் காணிக்கை தப்பியது.
    • போலீசார் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது.

    கோவில் பூசாரியாக சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு வழக்கம் போல் கோவில் நடையை பூட்டி விட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தாலி, பெட்டகத்தில் இருந்த 2 பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை திருடி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற் காக கோவிலுக்கு வந்த கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார்.அவர்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது. மேலும்

    கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முடியாததால் காணிக்கை தப்பியது.

    இதுகுறித்து தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கோவிலில் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது
    • ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்

    திருவண்ணாமலை:

    கலெக்டர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன் ஆகியோர் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் 162 பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆயிரத்து 730 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ மாணவிகள் இந்த மாத இறுதியில் மாநில உடற்கல்வி விளையாட்டு பல்கலை க்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

    • அன்னதானம் வழங்கப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில், கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்
    • முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 73). அதே கிராமத்தில் பாசி படிந்து குளம் ஒன்று உள்ளது. நாகம்மாள் அந்த குளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கால் தவறி குளத்தில் விழுந்தார். இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் வரவில்லை. இதனால் நாகம்மாள் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் குளத்தின் அருகே சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது நாகம்மாள் குளத்தில் இருந்த காய்ந்த மரக்கிளை யை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் குளத்தில் இறங்கி மூதாட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் நாகம்மாளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரவு முழுவதும் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய மூதாட்டியை பொதுமக்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு
    • ஆலோசனைகளை வழங்கினார்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலைக்கு 21-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை தருகிறார்.

    இதையொட்டி அவர் கலந்து கொள்ளும் விழா மேடை அமைக்கும் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

    அப்போது மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி என் அண்ணாதுரை எம்.பி., மு.பெ. கிரி எம். எல். ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் ப. கார்த்தி வேல்மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.
    • அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் நிறைவாக 26-ந் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அதையொட்டி, தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில், தீபத்திருவிழா உற்சவத்தின் 7-ம் நாளன்று மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை சீரமைத்து, அதன் உறுதித்தன்மையை சரிபார்க்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.

    அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது. மகாரதத்தின் அச்சு, பீடம், விதானம், ஹைடாலிக் பிரேக் போன்றவற்றில் உள்ள பழுதுகளை முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இந்த பணிகளை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடித்து, பொதுப்பணித்து றையின் (கட்டுமானம்) உறுதிச்சான்று பெறப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

    சீரமைப்பு பணிக்காக மகாரதத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு பணிகள் நடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபத் திருவிழா முடியும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
    • கோஷங்களை எழுப்பினர்

    செங்கம்:

    செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வக்கீல்கள் திடீரென நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆன்லைன் மூலம் வழக்குகள் பதிவு செய்யும் இ-பைலிங் முறையை எதிர்த்து நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு பார் அசோசியேஷன் தலைவர் ஏ.பத்மநாபன், துணைத் தலைவர்கள் என்.ஜெயச்சந்திரன், எஸ்.இளங்கோவன், செயலாளர் சி.முருகன், இணை செயலாளர் முபாரக், பொருளாளர் ரஞ்சித்குமார் நூலகர் மைனுதின் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    ×