search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி
    X

    பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

    • மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது
    • ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்

    திருவண்ணாமலை:

    கலெக்டர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன் ஆகியோர் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் 162 பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆயிரத்து 730 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ மாணவிகள் இந்த மாத இறுதியில் மாநில உடற்கல்வி விளையாட்டு பல்கலை க்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

    Next Story
    ×