என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • பெற்றோர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
    • போலீசாரின் பேச்சுவார்தையடுத்து கலைந்து சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுற்று பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியையாக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியை சாந்தி மாணவிகளை துன்புறுத்தி வருவதாக கூறியதால், ஆத்திரம் அடைந்த மாணவி களின் பெற்றோர்கள் சிலர் தலைமை ஆசிரியையிடம் நேரில் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று காலை பள்ளி வந்த மாணவிகள் தலைமை ஆசிரியை மீது தவறான புகார் கொடுத்துள்ள தாகவும், அவருக்கு ஆதரவாக பெற்றோர்களை கண்டித்து பள்ளியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவி களிடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் சமரசம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் கொள்ளை கொட்டாயை சேர்ந்தவர் வேலு (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

    இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 30 ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அதிலிருந்த ஒரு ஆடு திடீரென அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதனை காப்பாற்றுவதற்காக வேலு கிணற்றில் குதித்தார்.

    அப்போது கிணற்றின் மூழ்கி பக்கவாட்டில் மாட்டிக் கொண்டார். சத்தம் கேட்கவே அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டிப் பார்த்தனர். வேலு கிணற்றில் மாட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். முடியாததால் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிப் பார்த்தனர்.

    இரவு நேரம் ஆனதால் தேடும் பணி கைவிடப்பட்டது. மேலும் அதிகாலை தீயணைப்புத் துறையினர் வந்து சிறிது நேர தேடலுக்குப் பிறகு வேலு உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்றபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி இறந்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
    • கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதிகள் இல்லை.

    சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்த மலை கிராம மக்கள் 8 கிலோமீட்டர் தூரம் மலை காடுகள் வழியாக நடந்து செல்கின்றனர்.

    மலையில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் யாராவது நோய்வாய்ப்ப ட்டால் அவர்களை டோலிக்கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் மலையில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. படிப்புக்காக மாணவ மாணவிகள் தினமும் சென்றுவர 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அடிவாரத்தில் இருந்து கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று காலை மலை கிராமத்திற்கு நடந்து சென்றார்.

    சாலை அமைக்கும் பணிக்காக கலெக்டர் வந்திருப்பதை அறிந்த கிராம மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

    உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவி த்தனர். கலெக்டருடன் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவி கலெக்டர் பிரேமலதா, திட்ட இயக்குனர் செல்வகுரு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    மலைக்கு சென்று வர என 16 கிலோ மீட்டர் தூரம் கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

    • சிமெண்ட் பூச்சிகள் விழுவதால் பொதுமக்கள் அச்சம்
    • பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக புகார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள சோமலாபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக ரேசன் கடை அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் அந்த பகுதியை சேர்ந்த 700 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ரேசன் கடை கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து பராமரிப்பின்றி கிடக்கிறது.

    அடிக்கடி சுவர் மற்றும் சீலிங்கில் உள்ள சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து கீழே விழுகிறது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது, அவர்கள் மீது சிமெண்ட் பூச்சிகள் விழுந்து காயம் அடைகின்றனர்.

    மேலும் அந்த ரேசன் கடை வளாகம் தற்போது மாட்டுத் தொழுவமாகவும் மாறி உள்ளது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக பழு தடைந்துள்ள கட்டிடத்தில் சென்று பொருட்கள் வாங்க அச்சமாக உள்ளது. ரேசன் கடை அமைந்துள்ள பகுதியில் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.

    ரேசன் கடையை சுற்றியுள்ள புதர்களிலிருந்து பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    ரேஷன் கடை வளாகத்தை சுத்தம் செய்வதோடு, பழுதடைந்த கட்டிடத்தையும் புதுக்க வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே அசம்பா விதங்கள் ஏதும் நடக்கும் முன்பு பழுதடைந்த கட்டிடத்தை சீரமைப்ப தோடு, ரேசன் கடையை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடினர்.

    மாணவி கிடைக்காததால் பெற்றோர் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • வேலை சம்பந்தமாக சென்றபோது பரிதாபம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பனங்காட்டூரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35). தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் வேலை சம்பந்தமாக நேற்று இரவு ரஞ்சித் குமார் தனது பைக்கில் ஆம்பூர் பேரணாம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
    • அலட்சியமாக செயல்பட்டதால் நடவடிக்கை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 5-ந் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கர்ப்பாக்கிய நபர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்தார்.

    இதனை இன்ஸ்பெக்டர் சாந்தி முறையாக விசாரிக்காமல் ஊர் பஞ்சாயத்தாரர்களிடம் பேசி விட்டு வரும்படி கூறியதாக தெரிகிறது. இதனிடையே இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் மாணிக்கம் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். புகார் குறித்து முறையாக விசாரணை செய்யாத இன்ஸ்பெக்டர் சாந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்று போலீஸ் இன்ஸ்பெக்டராக மலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சாந்தி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த புகார் குறித்து விவரங்களை தனிப்பிரிவு போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் அளிக்க தவறியதாக தெரிகிறது.

    மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க அவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக புகார்களும் எழுந்தது.

    அதன்படி வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலைய தனி பிரிவு போலீசாக பணியாற்றி வந்த திங்களன், ஏலகிரி மலை போலீஸ் நிலையத்திற்க்கும், அம்பலூர் போலீஸ் நிலைய தனி பிரிவு போலீசாக பணியாற்றி வந்த ரமேஷ் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரோந்து பணியின்போது சிக்கினார்
    • வாலிபரிடம் போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில், ஆம்பூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெனிகாயிட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றனர்
    • மலர்கள் தூவி மாலை அணிவித்தனர்

    ஆலங்காயம்:

    தென் ஆப்பிரிக்கா நாட்டில் பிரிட்டோரியா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி வரை 5 வது வலைப்பந்து (டெனிகாயிட்) உலகக் கோப்பை போட்டி நடந்தது. இதில் இந்திய அணிக்காக 18 பேர் உட்பட 9 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பா டியை சேர்ந்த பயிற்சியாளர் முரளி தலைமையில் கல்லூரி மாணவர்கள் சுகிவர்மன், அபினேஷ் மற்றும் அஞ்சலக ஊழியர் அறிவழகன் ஆகியோர் பங்கேற்று விளையாடினர்.

    இறுதிப் போட்டியில் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் கல்லூரி மாணவர் சுகிவர்மன் ஜூனியர் இரட்டையர் பிரிவில் தங்க பதக்கமும், ஜூனியர் அணி பிரிவில் ஒரு தங்க பதக்கம் என 2 தங்க பதக்கங்களை வென்றார்.

    அபினேஷ் மற்றும் அறிவழகன் ஆகியோர் சீனியர் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

    சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய பயிற்சியாளர் முரளி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சொந்த ஊரான வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட டெனிகாயிட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அசோசி யேஷன் நிர்வாகிகள், கிராம மக்கள், பெற்றோர்கள் மலர்கள் தூவியும் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • குடும்ப பிரச்சினையில் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33), கட்டிட மேஸ்திரி.

    இவரது மனைவி மஞ்சு (28). தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் விரக்தியடைந்த பாண்டியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது அதிர்ச்சி
    • மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன், அரிசி வியாபாரி. இவர் தனது பைக்கில் சி.என்.ஏ. சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு தனது கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் எடுத்தார்.

    அந்த பணத்தை தனது பைக்கில் வைத்துக்கொண்டு புறப்பட்டார். ஆற்றுமேடு பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.

    பின்னர் சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது பைக்கில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் குறவன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகள் சந்தியா.

    இந்த நிலையில் சந்தியாவை நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வைத்து டாக்டராக்குவதற்கு சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிலிப்ஸ் சார்லஸ் டெய்லி, அமுது டெய்லி, மோனிகா, மார்க்டெய்லி ஆகிய 4 பேர் ரமேஷ் மற்றும் கல்பனாவிடம் ஆசை வார்த்தை கூறினர். இதையடுத்து அவர்கள் 4 பேரிடம் கூகுள் பே மற்றும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாக வும் சுமார் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளனர்.

    அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு டாக்டர் சீட்டு வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்து உள்ளனர்.

    மேலும் நிலுவையில் உள்ள சுமார் 15 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டனர்.

    இதுகுறித்து கல்பனா நேற்று 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×