search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் போராட்டம்
    X

    தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் போராட்டம்

    • பெற்றோர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
    • போலீசாரின் பேச்சுவார்தையடுத்து கலைந்து சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுற்று பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியையாக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியை சாந்தி மாணவிகளை துன்புறுத்தி வருவதாக கூறியதால், ஆத்திரம் அடைந்த மாணவி களின் பெற்றோர்கள் சிலர் தலைமை ஆசிரியையிடம் நேரில் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று காலை பள்ளி வந்த மாணவிகள் தலைமை ஆசிரியை மீது தவறான புகார் கொடுத்துள்ள தாகவும், அவருக்கு ஆதரவாக பெற்றோர்களை கண்டித்து பள்ளியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவி களிடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் சமரசம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×