என் மலர்
திருப்பத்தூர்
- டயர் வெடித்து விபத்து
- 4 பேர் உயிர் தப்பினர்
ஆலங்காயம்:
சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 3 இளைஞர்கள் பெங்களூ ரில் உள்ள அதே நிறுவனத்தின் கிளைzக்கு அலுவலக பணிக்காக கார் மூலம் பெங்களூர் நோக்கி சென்றனர்.
காரை சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 57) என்பவர் ஓட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிக்கட்டு ஓடி 2 முறை பல்டி அடித்து, குப்புற கவிழ்ந்து.
இதில் காரில் பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்ட வசமாக சிறு காயமும் இன்றி உயிர்தப்பினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதித்தது.
தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் காரை கிரேன் மூலம் அப்பு றப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
- ஆட்சியர் நீ சரியாகதான் பேசினாய் என்று பதில் அளித்தார்
- போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று வெளியே விட்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் குறைகளைக் கேட்டனர்.
அப்போது அங்கு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கலெக்டரை பார்த்து இங்கு நடைபெறும் பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நான் தவறாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் மன்னிப்பு கேட்டு அலப்பறை செய்தார்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் நீ சரியாகதான் பேசினாய் என்று பதில் அளித்தார். பின்னர் எழுந்து நின்ற மாவட்ட ஆட்சியரிடம் கையை பிடிக்க சென்ற அந்த மது போதை வாலிபரை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று வெளியே விட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.
- கலெக்டர் எச்சரிக்கை
- திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்லவநாதன் முன்னிலை வகித்தார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் எழுந்து நின்று தினமும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து பள்ளிக்கும் பல்வேறு பணிகளுக்கு செல்கின்றனர்.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
எங்கள் பிள்ளைகளுக்கு அந்த நிலை வர கூடாது மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என அவர் கண்ணீர் கண்ணீர் மல்க இருகரம் கூப்பி மாவட்ட வேண்டுகோள் வைத்தார்.
அதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் பேசியதாவது:-
குழந்தை திருமணம் செய்வது கூடாது அப்படி செய்யும் பட்சத்தில் குழந்தை திருமணம் நடத்தியவர்கள், கலந்து கொண்டவர்கள், திருமண விருந்து சாப்பாடு சாப்பிட்டவர்கள், என அனைவரின் மீதும் வழக்குபதிவு செய்யப்படும்.
அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதனை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண் சிசு பாலினத்தை கண்டறிந்து அவற்றை போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்வகின்றனர்.
இதனால் பெண் பிள்ளைகள் பிறப்பு குறைவாக உள்ளதாகவும் அதற்கு துணை போகும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி,சப் கலெக்டர், ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபரீதம்
- வேலை கிடைக்காததால் விரக்தி
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டையை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 28). வருகிற 19-ந் தேதி நவீன் குமாருக்கு திருமண நடைபெற இருந்தது.
இதனால் பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். தனக்கு திருமணம் நடைபெற இருந்ததால் தன்னை நம்பி வரும் பெண்ணிற்காக நவீன் குமார் வேலை தேடி அலைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் வேலை கிடைக்காததால் திருமணம் ஆனபின் மனைவியை எப்படி காப்பாற்றுவது என விரக்தியில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜோலார்பேட்டை கேதாண்டப்பட்டி யார்டு பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக சென்னை- மைசூர் செல்லும் ரெயில் முன் திடீரென பாய்ந்தார்.
இதில் நவீன் குமார் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன் குமார் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் வழக்கு பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை கிடைக்காததால் திருமணமான பின்பு மனைவியை எப்படி காப்பாற்றுவது என்ற விரக்தியில் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 59). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக அசோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை குணமாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக குடும்பத்தி னரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.
பின்னர் வாணிய ம்பாடி- விண்ண மங்கலம் இடையே உள்ள தண்டவா ளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அசோகன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் அசோகன் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் தேடுதல் வேட்டை
- 2 பைக்குகளில் 4 பேர் தப்பி சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அடுத்த சொக்கலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் சக்தி (வயது 58) இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 20 வருட காலமாக சிறுக சிறுக இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முடிவுற்ற நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் நகர் பகுதிக்கு வந்தார்.
அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் 4 பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்
சக்தி ஆசிரியர் நகர் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த 6 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
ஜோலார்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் அருகே உள்ள பெயிண்ட் கடையில் உள்ள கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சாலையில் நடந்து சென்றுதும்.
அருகில் நின்று கொண்டு இருந்த 2 பைக்குகளில் 4 பேர் தப்பி சென்றது பதிவாகி உள்ளது. இதன் மூலம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- வாகன தணிக்கையில் சிக்கினர்
- பைக்கில் வேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை
ஆலங்காயம்:
ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு கூவல் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது நிலத்தில் உள்ள கிணற்றில் மாட்டியிருந்த நீர்மூழ்கி மோட்டார் திருட்டு போய்விட்டதாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்த நிலையில் வாணியம்பாடி - ஆலங்காயம் ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வேகமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அணைக்கட்டு அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 21), குபேந்திரன் (19), பாலாஜி (21) என்பதும், கூவல் குட்டை பகுதியில் மின்மோட்டார் திருடியதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.
- இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
- பஸ் மோதி 2 பேர் இறந்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவரது மனைவி லதா(35). கடந்த 2014-ம் ஆண்டு நிம்மியம்பட்டில் பைக்கில் சென்ற போது, பஸ் மோதி 2 பேரும் இறந்தனர்.
இதைத்தொடர்ந்து மணியின் பிள்ளைகள் வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை. அதைத்தொடர்ந்து பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று வேலூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் வாணியம்பாடியில் ஜப்தி செய்யப்பட்டது.
- ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது
- அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர்- காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே மொலகாரம்பட்டி அருகே உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதனால் மொல காரம்பட்டி - குனிச்சி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்க ப்பட்டது. தண்டவாளத்தை கடந்து செல்லும் மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கி நிற்பதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அலட்சியமாக ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
தண்டவாளத்தை கடக்கும் நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பு தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- புதிய பைப் லைன் அமைக்கப்பட்டது
- ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இம்மலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். ஏலகிரி மலை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நிலாவூர் கிராமம் மோட்டு காடு வட்டத்தில் வசித்து வரும் குடும்பங்கள் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் புதிய பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ ஸ்ரீ கிரிவேலன் தொடங்கி வைத்தார்.
அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
- பொருட்கள் எரிந்து நாசமானது
- 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் லியோ பிரான்ஸ் ( வயது 58). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார்.
அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மர கடை மற்றும் மரப்பட்டறை குடோன் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மரக் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பொருட்கள், தீப்பிடித்து எறிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறை மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். சற்று நேரத்தில் கடையில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியதால் அந்தப் பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.
தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மேலும் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால் மர குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
சம்பவம் நடந்த இடத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்று கட்சியினர் 300 பேர் இணைந்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஓ.பி.எஸ். அணியின் சார்பில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் மாற்று கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் இணையும் விழா நகர செயலாளர் கோபிசங்கர் தலைமையில் நடைபெற்றது.
நகர அவைத்தலைவர் சஜாத் உசேன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கோ.சுரேஷ் பாபு கலந்து கொண்டு பேசினார்.
மேலும் நிகழ்ச்சி முடிவில் இ.பி.ஸ். அணி, பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சினர் சுமார் 300 பேர் தங்களை ஒ.பி.எஸ். அணியில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு சால்வைகள் அணிவித்து வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், நகர பொருளாளர் எம்.பிரகாஷ் ,நகர இணைச் செயலாளர் ராபியகவுஸ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், சலீம், சரிதாபாஸ்கர், சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் ஆதில் அஹமத், அவைத்தலைவர் அத்தாவுள்ளா, துணை செயலாளர் நசீர் அகமது, இணைச் செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் நஸ்ருல்லா, பாசரை நகர செயலாளர் பயாஸ் அகமத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






