என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் , ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்கூட்டர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது.

    இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது விமான நிலையத்தில் சுங்கத்துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த குமார் என்பவர் வேகமாக வெளியேறுவதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங்கி சேர்ந்த நடராஜன் (வயது 43) பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிய வருகிறது.

    மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல முடியாத சோதனை மையத்தை சுங்கத்துறையின் ஓட்டுநர் தாண்டிச் சென்று பயணியிடமிருந்து தங்கத்தை பெற்று வெளியே கொண்டு செல்ல முயன்றபோது பிடிபட்டுள்ளார்.

    இந்த தங்கத்தை விமான நிலையத்தில் வெளியே பார்க்கிங் பகுதியில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பரிடம் கொடுப்பதற்கு முற்பட்டதாக தெரிய வருகிறது.

    இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெறுவதற்காக காத்திருந்த டேனியல் மைக்கையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்ததாக தெரிய வருகிறது.

    மேலும் சுங்கத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டுமே சொல்லக்கூடிய பகுதிக்கு சுங்கத்துறை ஓட்டுனர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் எனவும்,

    இந்த கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? எனவும் சுங்கத்துறையின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த கடத்தலில் பங்கு பெற்ற மூவரையும் கைது செய்ய சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் சுங்கத்துறை ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது.

    நேற்று இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 56 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருச்சியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
    • திருச்சி மாநகரை பொருத்தமட்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

    திருச்சி,  

    சமீபத்தில் பெய்த மழையால் கொசுக்கடி மூலம் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, மனச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது.இதனால் மேற்கண்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக திருச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி கூறும் போது,

    திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் 500 சுகாதார பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    டெங்கு காய்ச்சலை குறைக்க பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும் கொசு தொல்லை இல்லாமல் வைத்திருந்தால் டெங்குவை ஒழிப்பது எளிதானது என்றார்.

    திருச்சி மாநகரை பொருத்தமட்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகு மார் என்பவரது மனைவி கனகவல்லி ( வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இ ல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சியில் ரூ.1000 வாங்கிய குடும்ப தலைவிகள்
    • சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படு கிறது.

    திருச்சி, 

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி 2023- 24 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அந்த திட்டத்தி ற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறப்பு முகாம்கள் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் தகுதியான விண்ண ப்பங்கள் தேர்வு செய்யப்ப ட்டன.

    தற்போது இந்த திட்ட த்தில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    அண்ணா பிறந்த நாளான இன்று காஞ்சிபுர த்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதா னத்தில் உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை தொ டங்கி வைப்பதாக முதலமை ச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ள்ளது.

    தமிழகத்தில் பெரும்பா லான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.

    திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி விஜயலட்சுமி கூறும்போது,

    எனது கணவர் மரக்க டையில் மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார். வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகையாக ரூ. 3000 கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மகன் பத்தாம் வகுப்பு, இன்னொரு மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறா ர்கள். நான் எந்த வேலை க்கும் செல்லாமல் குழந்தைக ளை பராமரித்து வருகிறேன்.

    சில நேரங்களில் குழந்தை களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு கூட கையில் பணம் இருக்காது.

    கலைஞர் உரிமை த்தொகை என்னை போன்று வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.

    சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படு கிறது. முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

    திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி நதியா,

    நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு எனது வங்கி கணக்குக்கு ரூ. 1000 வந்தது. அதை பார்த்ததும் சந்தோ ஷமாக இருந்தது.

    எனது மகளின் எதிர்கால தேவைக்கு இனிமேல் இந்த கலைஞர் உரிமைத் தொகையை சேமிக்கலாம் என இருக்கிறேன். முதலமை ச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    • மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருச்சி,  

    திருச்சி மன்னார்புரம் மற்றும் எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் ெபறும் எடமலைப்பட்டி பகுதிகளான கிராப்பட்டி காலனி, அன்புனர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின் நகர், அன்பிலார் நகர், சிம்கோகாலனி, அரசு க ாலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், டிஎஸ்பிகேம்ப், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திரா நகர், டோபி காலனி, ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜூவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர், செட்டியாபட்டி ஆகிய பகுதிகளிலும்,

    மன்னார்புரம் பகுதிகளான டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே. காலனி, சி.எச்.காலனி, உஸ்மான்அலி ெதரு, சேதுராப்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லூக்குழி, ரேஸ்கோஸ் ரோடு, கேசவ நகர், காஜா நகர், ஜெ.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செஞ்குளம் காலனி, இபி காலனி, காஜாமலை, தர்கா ரோடு (கலெக்டர் பங்களா), மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் நானை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கனகவல்லி சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி (வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இ ல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.

    மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி விமான நிலையத்தில்சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15.47 லட்சம் தங்கம்
    • அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி

    திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர் துபாய் ஓட்டு நாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர் இதனை சுங்கத்துரோகி அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில்நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 15. 47 லட்சம் மதிப்புள்ள 260 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி டைனமிக் ரோட்டரி கிளப் சார்பில் போலீசருக்கான கண் பரிசோதனை முகாம்
    • சலுகை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    திருச்சி,  

    திருச்சி டைனமிக் ரோட்டரி கிளப்,  

    மேக்சி விஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய போலீசருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் கிராப்பட்டி சிறப்பு காவல் படை அலுவலகத்தில் நடந்தது. முகாமினை சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் ஆனந்தன் தொடங்கி வைத்தார். டாக்டர் சிபு வர்க்கி குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதில் விழித்திரை, கண்புரை உள்ளிட்ட கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட

    வர்களுக்கு சலுகை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை டைனமிக் ரோட்டரி சங்க தலைவர் ரேவதி மோகன் குமார், செயலாளர் சுதா பிரபாகரன், நிர்வாகி சந்திரலேகா விஜயாலயன் ,திட்ட தலைவர் கிருஷ்ணா கணேஷ்,நிகழ்ச்சி தலைவர் சலீமா ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
    • எரிபொருள் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் நிறுவனம் எரிபொருள் நிரப்பும் பணி செய்து வருகின்றன. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை செய்து காட்டப்பட்டது. இதில் விமான நிலைய ஆணையைக்குழு அதிகாரிகள் திருச்சி விமான நிலையம் தீயணைப்பு துறை விமான எரிபொருள் நிரப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • மளிகைக்கடை ஊழியரிடம் அரிவாளை காட்டி ரூ.37½ லட்சம் பறிப்பு
    • பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

     திருச்சி,

    திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 56). இவர் கடையில் வியாபாரத்தின் மூலம் வசூலான பணத்தை வங்கியில் கட்டுவதற்காக ஒரு பையில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை வைத்து கொண்டு நேற்று முன்தினம் பகல் 12 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து ஆட்டோவில் ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் அரிவாளை காட்டி மிரட்டியதால் பதற்றம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றார்.பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து கடையின் உரிமையாளர் கண்டோ ன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறா ர்கள். முதற்கட்ட விசார ணையில் திருச்சி வரகனேரி மற்றும் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இரண்டு ரவுடிகளுக்கு தொடர்பு இரு ப்பது தெரியவந்துள்ளது.தலைமறைவான ரவுடிகளை பிடிக்க போலீஸ் படை விரைந்துள்ளது. இதற்கிடையில் ரவுடிகளிடம் தொடர்பில் இருந்த பெண் உள்பட 3 பேரை கண்டோன்மெண்ட் பிரிவு போலீசார் மடக்கி பிடித்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் .விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் தாலிச் செயின் பறிப்பு
    • காணக்கிளியநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே சரடமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது38). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் உணவருந்தி விட்டு வீட்டை சாத்திவிட்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் சுகன்யா கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் செயினை பறித்து சென்றனர். செயின் பறிப்பதை உணர்ந்த சுகன்யா திடுக்கிட்டு எழுந்த போதுஅவரது கழுத்தில் கையை வைத்து அழுத்தி கண்ணி மைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் செயினை பறித்துச் சென்றனர். இதில் சுகன்யாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இவரின் வீடு கிராமத்துக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் இருந்ததால் இது மர்ம ஆசாமிகளுக்கு சாதகமாக அமைந்தது. காட்டுப் பகுதியாக வந்த மர்ம ஆசாமிகள் நகையைப் பறித்துச் விட்டு காட்டுப் பகுதியாக தப்பிச் சென்றனர். இது குறித்து அவசர காவல் உதவி எண் 100 மூலம் ராமச்சந்திரன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து நள்ளிரவில் சம்பவ இடத்திற்க்கு வந்த காணக்கி ளியநல்லூர் காவல் ஆய்வாளர் விஜய் கோல்டன் சிங் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் நிலா வரவ ழைக்கப்பட்டது.வீட்டின் அருகில் மர்ம ஆசாமிகள் விட்டுச் சென்ற ஒரு செருப்பை மோப்பம் பிடித்த நிலா வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மோப்பம் பிடித்து ஓடிச் சென்று நின்று விட்டது.இச்சம்பவம் குறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் காணக்கி ளியநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருச்சி புறநகர் மாவட்டத்தில் 919 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • பதட்டமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு

     திருச்சி,

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் 919 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து இந்து அமைப்புகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.அப்போது அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் நிறுவவும், சரியான நேரத்தில் ஊர்வலத்தை நடத்தவும் அறிவுறுத்தினார்.மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் சிலைகளை நிறுவுவதற்கு மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டு கொண்டுள்ளார்.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துவரங்குறிச்சி, புத்தாநத்தம், தொட்டியம் அருகே உள்ள குளக்கொடி ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே மேற்கண்ட 3 இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புறநகர் பகுதிகளில் நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் ஊர்வலம் வருகிற 20 ம் தேதி நடைபெற உள்ளது.

    • பிரதமரின் இ.பஸ் சேவை திட்டத்தில் திருச்சி மாநகரம் தேர்வு
    • சுற்றுச்சூழல் மாசு குறைந்து பசுமை அதிகரிக்கும்

    திருச்சி,

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத ெ பாதுப் போக்கு வரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்கள (இ.பஸ்) அதிகம் பயன்படுத்த நடிவடிக்கை எடுத்து வருகி றது. அடுத்த 10 ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் இ.பஸ்களின் பங்கு அதிகம் இருக்கும்.கடந்த மாதம் 16-ந் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமரின் இ.பஸ் சேவா திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்துக்காக ரூ.57 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் எலக்ட்ரிக் பஸ்களை நாடு முழுவதும் பல்வேறு நகரங்க ளில் இயக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் நகர பஸ் சேவையை விரிவு படுத்துவது, சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமையான நகர்ப்புற சேவையை அளி ப்பது ஆகிய இலக்குகள் எட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் அமல்படுத்த ப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு தகுதி யான 169 நகரங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழகத்தில் இத்திட்டத்திற்காக 10 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட பிரிவில் திருச்சி மாநகரம் இடம் ெபற்றுள்ளது.20 முதல் 40 லட்சம் மக்கள் தொகை பிரிவில் ேகாவையும், 5 முதல் 10 லட்சம் மக்கள் தொகை பிரிவல் ஈரோடு, சேலம், திருப்பூரும், 5 லட்சத்துக்கு குறைவாக மக்கள் தொகை பிரிவல் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படு த்தப்பட உள்ள இத்திட்ட த்தின் கீழ் பஸ் பணிம னைகள், பராமரித்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை அரசு தரப்பு ஏற்படுத்தி தரும் இ.பஸ்கள் ஸ்டாண்டர்டு, மிடி, மினி என 3 பிரிவுகளில் இ.பஸ் கள் வழங்கப்பட உள்ளன.திருச்சி மாநகரத்துக்கு இத்திட்டத்தின் கீழ் 100 பஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது.இது குறித்து போக்குவ ரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கும் போது, பிரதம ரின் இ.பஸ் சேவை திட்டத்தி ன் கீழ் திருச்சி தேர்வு யெ்ய ப்பட்டுள்ளது.திருச்சியில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, இபைக், சைக்கிள் பயன்பாடு மற்றும் அதற்கான வழித்த டம் ஏற்படுத்துதல் ஆகியவை உருவாக்க வாய்ப்புண்டு.இதன் மூலம் சுற்றுசுழல் மாசுபடுவது குறைந்து, பசுமை அதிகரிக்கும் என்ற னர்.

    ×