என் மலர்tooltip icon

    தேனி

    • மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்களூருவில் இருந்து தேனிக்கு வந்தார்.
    • மனமுடைந்த நிலையில் கா ணப்பட்ட முருகன் அவரது உறவினர்கள் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    கடமலைக்குண்டு அருகே குமண ன்தொழுவை சே ர்ந்தவர் முருகன் (வயது 48). இவரது மனைவி சாரதா. இவ ர்களுக்கு 20 வயதில் மகனும், 16 வயதில் மகளும் உள்ள னர். இவ ர்கள் அனை வரும் கர்நாடக மாநிலம் பெங்க ளூருவில் தங்கி முறுக்கு தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த உறவினரை நலம் விசாரிப்பதற்காக முருகன் பெங்களூருவில் இருந்து தேனிக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்து சொந்த கிராமமான குமணன்தொழுவிற்க்கு வந்திருந்தார். அப்போது மனமுடைந்த நிலையில் கா ணப்பட்ட முருகன் அவரது உறவி னர்கள் யாரிடமும் பேசாமல் இரு ந்துள்ளார். இந்நி லையில் கும ணன்தொழு அரசு பள்ளிக்கு சென்ற முருகன் அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த மயிலாடும்பாறை போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்தத ற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் இன்று காலை 50 அடிக்கும் கீழ் சரிந்து 49.57 அடியாக உள்ளது.
    • தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இதனை நம்பி ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பயிர்சாகுபடி செய்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் ெதாடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லை. மேலும் வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்வதால் மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்து குறைவாகவே உள்ளது.

    இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் இன்று காலை 50 அடிக்கும் கீழ் சரிந்து 49.57 அடியாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர்மட்டம் 64 அடிக்கு மேல் இருந்தால் 58-ம் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது மிகவும் குறைந்தே நீர்மட்டம் உள்ளது. இதனால் குடிநீ ருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 404 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.17 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7.8, தேக்கடி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • விழா கமிட்டி மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து சமுதாய பொறுப்பாளர்கள் சார்பில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
    • சுமார் 3 அடி முதல் 13 அடி வரை 410 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. 39 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து சமுதாய பொறுப்பாளர்கள் சார்பில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

    சுமார் 3 அடி முதல் 13 அடி வரை 410 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சின்னமனூர் நகர் ஒன்றிய கமிட்டி பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர்.

    • கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கே.எம்.பட்டி தமிழ்செல்வன் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கைகள் நலச்சங்கம், தேனி வைகை ஜவான் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கே.எம்.பட்டி தமிழ்செல்வன் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது.

    முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி சலுகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறைதீர் கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதற்கு கலெக்டர் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நல அலுவலக துணை இயக்குனருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சங்க தலைவர் பவுன், செயலாளர் சிவபாண்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுமி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள மேக்கிலார்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி(29). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி-மதுரை மெயின்ரோடு கொண்டமநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த மேக்கிலார்பட்டியை சேர்ந்த குபேந்திரன் மகள் மித்ராதேவி(12) என்பவர் படுகாயமடைந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரான விக்னேஷ் என்பரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள அல்லிநகரம் கக்கன்கா லனியை சேர்ந்தவர் ஆண்ட வர் மகள் சரண்யா(18). கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தனக்கு உடல்நிலை சரியில்லை என கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    பின்னர் தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறை வானார். இதுகுறித்து அவரது தாய் வீரலட்சுமி அல்லிநகரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த பாலமுரு கன் மனைவி செல்வி(32). இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலைய த்தில் அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடமலை, மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • லேசான காற்றுக்கே மின்வினியோகம் தடைபட்டு விடுகிறது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கின்றன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களை உள்ளடக்கி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

    கடமலைக்குண்டு துணைமின்நிலையத்தில் இருந்து மேற்படி கிரா மங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பா ர்மர், மின்கம்பிகளில் ஏற்பட்டுள்ள பழுதை அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர்.

    இருந்தபோதும் முறை யான பராமரிப்பு இல்லாத தால் லேசான காற்றுக்கே மின்வினியோகம் தடைபட்டு விடுகிறது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கின்றன. அவ்வப்போது விட்டுவிட்டு மின்தடை ஏற்படும் போது ஊழியர்கள் அதனை சரிசெய்து விடுகின்றனர்.

    ஆனால் இரவு 7 மணிக்குமேல் மின்தடை ஏற்பட்டால் ஊழியர்கள் வருவதில்லை. இதன் காரணமாக 3 நாட்களாக அனைத்து கிராமங்களும் இருளில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காலையில் விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடி யாமலும், கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியா மலும் விவசாயிகள் சிரமம் அடைந்து வரு கின்றனர்.

    எனவே மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நந்தி சிலையை அகற்ற திண்டுக்கல் இணைஆணையர் பாரதி உத்தரவிட்டதால் இந்து அமைப்பினர், கிராம கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • அறநிலையத்துறை அனுமதி பெறும் வரை நந்தி சிலைக்கு இரும்பு கம்பி வேலி, தகரம் அமைத்து மறைத்து வைக்க கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

    தேனி:

    தேனி அருகே இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கடந்த 15-ந்தேதி கிராம கமிட்டி சார்பில் 5 அடி உயர நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை கிராம கமிட்டியினர் இந்துசமய அறநிலையத்துறையிடம் பெறவில்லை என கோவில் செயல்அலுவலர் ராமுதிலகம் தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து நந்தி சிலையை அகற்ற திண்டுக்கல் இணைஆணையர் பாரதி உத்தரவிட்டார். இதனால் இந்து அமைப்பினர், கிராம கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பின் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா, இணை ஆணையர் பாரதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் அறநிலையத்துறை அனுமதி பெறும் வரை நந்தி சிலைக்கு இரும்பு கம்பி வேலி, தகரம் அமைத்து மறைத்து வைக்க கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

    இதனிடையே மலைக்கோவிலில் சிைல வைக்கும் தகவலை முன்கூட்டியே துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்த செயல்அலுவலர் ராமுதிலகத்தை சஸ்பெண்டு செய்து இணைஆணையர் உத்தரவிட்டுள்ளார். இக்கோவிலுக்கு ஆண்டிப்பட்டி செயல்அலுவலர் ஹரீஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி ஜெயராமன் தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி சிலை ஆகம விதிப்படி உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • குழாய் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 1200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நீர்வள, மின்வாரிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து போர்வே டேம் வரை சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அங்கு தேக்கப்படும் தண்ணீர் 4 ராட்சத குழாய்கள் மூலம் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மின் உற்பத்திக்கு பின்னர் இரைச்சல் பாலம் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் லோயர்கேம்ப் ஆற்றில் ஒன்று சேர்கிறது.

    இதில் குழாய் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 1200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நீர்வள, மின்வாரிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    நீர்வளத்துறை திட்ட உருவாக்க முதன்மை பொறியாளர் பொன்ராஜ், மதுரை மண்டல முதன்மை பொறியாளர் ஞானசேகர், சென்னை நீர்வளத்துறை இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மை பொறியாளர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.

    இதற்காக நேற்று காலை முதல் மாலை வரை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியபோது தமிழக பகுதிக்கு இரைச்சல் பாலம் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை சேதம் அடைந்தது. எனவே தற்போது எந்தவித இடையூறுமின்றி கூடுதல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 414 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.44 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • இப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் கம்பம்-கம்பம் மெட்டு புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அப்போது ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத 12 வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    கம்பம்:

    தேனிமாவட்டம் கம்பம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள், ஏலத்தோட்ட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்கின்றனர்.

    மேலும் அங்கிருந்து வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் தமிழக பகுதிக்கு வருகின்றனர். இப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் தலைமையில் அதிகாரிகள் கம்பம்-கம்பம் மெட்டு புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத 12 வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி னர்.

    உரிய ஆவணங்கள் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    • மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர்.
    • சிறுமி உளுந்தூர்பேட்டையில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர்.

    பெரியகுளம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சதீஸ்குமார்(23). இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனிலேயே பேசி வந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சதீஸ்குமார் கடந்த மே மாதம் 3-ந்தேதி தனது ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டார்.

    மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். இந்நிலையில் சதீஸ்குமார் சிறுமியின் உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் பேசி அவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ரூ.70 ஆயிரம் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

    அவ்வாறு தர மறுத்தால் தாங்கள் 2 பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அன்னமயில் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டைக்கு சென்று சதீஸ்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் குறித்து விவசாயி களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
    • கண்காட்சியில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், புதிய தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரி க்கும் தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி வர்த்தகர் சங்க பொன்விழா மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் குறித்து விவசாயி களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

    2021-22-ம் ஆண்டிற்கான கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்ப ட்ட 13 கிராம ஊராட்சிகளில் 25 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதில் 19 ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க ப்பட்டு, நுண்ணீர்பாசனம் அமைக்கப்பட்டு 158.34 ஏக்கரில் மா, பெருநெல்லி மற்றும் எலுமிச்சை போன்ற பழமரக்கன்றுகள் நடவு செய்து சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டு ள்ள தாக தெரிவிக்கப்பட்டது.

    2022-23-ம் ஆண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 5 கிராம ஊராட்சிகளில் 5 ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து நுண்ணீர்பாசனம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 26 கிராம ஊராட்சிகளில் இதுவரை 1,500 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 3,000 கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள அனை த்து குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    தேசிய உணவு எண்ணெய் இயக்கம் திட்டத்தில் எண்ணெய் வித்து மரக்கன்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. வேம்பு கன்றுகள் (ஒரு எக்டருக்கு 400 எண்கள்) நடவு செய்ய ரூ.17,000-ம், புங்கன் (ஒரு எக்டருக்கு 500 எண்ணிக்கை) நடவு செய்ய ரூ. 20,000 மற்றும் இலுப்பங்கன்றுகள் (ஒரு எக்டருக்கு 700 எண்கள்) நடவு செய்ய ரூ. 15,000-ம் மானியமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    வருகிற 27ந் தேதி முதல் 29ந் தேதி வரை திருச்சி, கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 'வேளாண் சங்கமம்" என்ற பெயரில் வேளாண் கண்காட்சி 2023 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், புதிய தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரி க்கும் தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளும் கண்காட்சிக்குச் சென்று பயனடைய கேட்டுக்கொள்ள ப்பட்டது. மேலும், இக்க ண்காட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மானிய உதவி பெற திட்ட பதிவு செய்தும் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்க ப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறும், மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகு மாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    ×