search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் முல்லைப்பெரியாறு அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு
    X

    கோப்பு படம்.

    அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் முல்லைப்பெரியாறு அணையில் மீண்டும் தண்ணீர் திறப்பு

    • குழாய் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 1200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நீர்வள, மின்வாரிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து போர்வே டேம் வரை சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அங்கு தேக்கப்படும் தண்ணீர் 4 ராட்சத குழாய்கள் மூலம் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மின் உற்பத்திக்கு பின்னர் இரைச்சல் பாலம் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் லோயர்கேம்ப் ஆற்றில் ஒன்று சேர்கிறது.

    இதில் குழாய் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 1200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நீர்வள, மின்வாரிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    நீர்வளத்துறை திட்ட உருவாக்க முதன்மை பொறியாளர் பொன்ராஜ், மதுரை மண்டல முதன்மை பொறியாளர் ஞானசேகர், சென்னை நீர்வளத்துறை இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மை பொறியாளர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.

    இதற்காக நேற்று காலை முதல் மாலை வரை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியபோது தமிழக பகுதிக்கு இரைச்சல் பாலம் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை சேதம் அடைந்தது. எனவே தற்போது எந்தவித இடையூறுமின்றி கூடுதல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 414 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.44 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×