என் மலர்tooltip icon

    தேனி

    • கடமலை, மயிலை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
    • லேசான காற்றுக்கே மின்வினியோகம் தடைபட்டு விடுகிறது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கின்றன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களை உள்ளடக்கி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

    கடமலைக்குண்டு துணைமின்நிலையத்தில் இருந்து மேற்படி கிரா மங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது. மாதாந்திர பராமரிப்பு பணி என்ற பெயரில் மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பா ர்மர், மின்கம்பிகளில் ஏற்பட்டுள்ள பழுதை அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர்.

    இருந்தபோதும் முறை யான பராமரிப்பு இல்லாத தால் லேசான காற்றுக்கே மின்வினியோகம் தடைபட்டு விடுகிறது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கின்றன. அவ்வப்போது விட்டுவிட்டு மின்தடை ஏற்படும் போது ஊழியர்கள் அதனை சரிசெய்து விடுகின்றனர்.

    ஆனால் இரவு 7 மணிக்குமேல் மின்தடை ஏற்பட்டால் ஊழியர்கள் வருவதில்லை. இதன் காரணமாக 3 நாட்களாக அனைத்து கிராமங்களும் இருளில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காலையில் விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடி யாமலும், கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியா மலும் விவசாயிகள் சிரமம் அடைந்து வரு கின்றனர்.

    எனவே மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நந்தி சிலையை அகற்ற திண்டுக்கல் இணைஆணையர் பாரதி உத்தரவிட்டதால் இந்து அமைப்பினர், கிராம கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • அறநிலையத்துறை அனுமதி பெறும் வரை நந்தி சிலைக்கு இரும்பு கம்பி வேலி, தகரம் அமைத்து மறைத்து வைக்க கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

    தேனி:

    தேனி அருகே இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கடந்த 15-ந்தேதி கிராம கமிட்டி சார்பில் 5 அடி உயர நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை கிராம கமிட்டியினர் இந்துசமய அறநிலையத்துறையிடம் பெறவில்லை என கோவில் செயல்அலுவலர் ராமுதிலகம் தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து நந்தி சிலையை அகற்ற திண்டுக்கல் இணைஆணையர் பாரதி உத்தரவிட்டார். இதனால் இந்து அமைப்பினர், கிராம கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பின் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா, இணை ஆணையர் பாரதி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் அறநிலையத்துறை அனுமதி பெறும் வரை நந்தி சிலைக்கு இரும்பு கம்பி வேலி, தகரம் அமைத்து மறைத்து வைக்க கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

    இதனிடையே மலைக்கோவிலில் சிைல வைக்கும் தகவலை முன்கூட்டியே துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்த செயல்அலுவலர் ராமுதிலகத்தை சஸ்பெண்டு செய்து இணைஆணையர் உத்தரவிட்டுள்ளார். இக்கோவிலுக்கு ஆண்டிப்பட்டி செயல்அலுவலர் ஹரீஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி ஜெயராமன் தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி சிலை ஆகம விதிப்படி உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • குழாய் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 1200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நீர்வள, மின்வாரிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து போர்வே டேம் வரை சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அங்கு தேக்கப்படும் தண்ணீர் 4 ராட்சத குழாய்கள் மூலம் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மின் உற்பத்திக்கு பின்னர் இரைச்சல் பாலம் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் லோயர்கேம்ப் ஆற்றில் ஒன்று சேர்கிறது.

    இதில் குழாய் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1800 கன அடியும், இரைச்சல் பாலம் வழியாக 1200 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நீர்வள, மின்வாரிய மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    நீர்வளத்துறை திட்ட உருவாக்க முதன்மை பொறியாளர் பொன்ராஜ், மதுரை மண்டல முதன்மை பொறியாளர் ஞானசேகர், சென்னை நீர்வளத்துறை இயக்கம் மற்றும் பராமரிப்பு முதன்மை பொறியாளர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.

    இதற்காக நேற்று காலை முதல் மாலை வரை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியபோது தமிழக பகுதிக்கு இரைச்சல் பாலம் வழியாக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை சேதம் அடைந்தது. எனவே தற்போது எந்தவித இடையூறுமின்றி கூடுதல் தண்ணீர் திறக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 414 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.44 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • இப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் கம்பம்-கம்பம் மெட்டு புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அப்போது ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத 12 வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    கம்பம்:

    தேனிமாவட்டம் கம்பம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள், ஏலத்தோட்ட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்கின்றனர்.

    மேலும் அங்கிருந்து வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் தமிழக பகுதிக்கு வருகின்றனர். இப்பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் தலைமையில் அதிகாரிகள் கம்பம்-கம்பம் மெட்டு புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத 12 வாகனங்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி னர்.

    உரிய ஆவணங்கள் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    • மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர்.
    • சிறுமி உளுந்தூர்பேட்டையில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர்.

    பெரியகுளம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் சதீஸ்குமார்(23). இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனிலேயே பேசி வந்த நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சதீஸ்குமார் கடந்த மே மாதம் 3-ந்தேதி தனது ஊருக்கு அழைத்துச்சென்றுவிட்டார்.

    மகளை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர் பெரியகுளம் போலீசில் புகார் அளித்தனர். உளுந்தூர்பேட்டையில் இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். இந்நிலையில் சதீஸ்குமார் சிறுமியின் உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் பேசி அவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ரூ.70 ஆயிரம் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

    அவ்வாறு தர மறுத்தால் தாங்கள் 2 பேரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அன்னமயில் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டைக்கு சென்று சதீஸ்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் குறித்து விவசாயி களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
    • கண்காட்சியில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், புதிய தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரி க்கும் தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி வர்த்தகர் சங்க பொன்விழா மண்டபத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் குறித்து விவசாயி களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

    2021-22-ம் ஆண்டிற்கான கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்ப ட்ட 13 கிராம ஊராட்சிகளில் 25 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதில் 19 ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க ப்பட்டு, நுண்ணீர்பாசனம் அமைக்கப்பட்டு 158.34 ஏக்கரில் மா, பெருநெல்லி மற்றும் எலுமிச்சை போன்ற பழமரக்கன்றுகள் நடவு செய்து சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டு ள்ள தாக தெரிவிக்கப்பட்டது.

    2022-23-ம் ஆண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 5 கிராம ஊராட்சிகளில் 5 ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து நுண்ணீர்பாசனம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 26 கிராம ஊராட்சிகளில் இதுவரை 1,500 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் 3,000 கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள அனை த்து குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    தேசிய உணவு எண்ணெய் இயக்கம் திட்டத்தில் எண்ணெய் வித்து மரக்கன்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. வேம்பு கன்றுகள் (ஒரு எக்டருக்கு 400 எண்கள்) நடவு செய்ய ரூ.17,000-ம், புங்கன் (ஒரு எக்டருக்கு 500 எண்ணிக்கை) நடவு செய்ய ரூ. 20,000 மற்றும் இலுப்பங்கன்றுகள் (ஒரு எக்டருக்கு 700 எண்கள்) நடவு செய்ய ரூ. 15,000-ம் மானியமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    வருகிற 27ந் தேதி முதல் 29ந் தேதி வரை திருச்சி, கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 'வேளாண் சங்கமம்" என்ற பெயரில் வேளாண் கண்காட்சி 2023 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், புதிய தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரி க்கும் தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளும் கண்காட்சிக்குச் சென்று பயனடைய கேட்டுக்கொள்ள ப்பட்டது. மேலும், இக்க ண்காட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மானிய உதவி பெற திட்ட பதிவு செய்தும் பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்க ப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறும், மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகு மாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    • சின்னமனூர் பகுதியில் பகல் நேரத்திலேயே போதையில் சுற்றித்திரியும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால் பயணிகள், பெண்கள் உள்ளிட்டோர் அச்சம் அடைந்து வருகின்றனர்.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் குடிபோதையில் சுற்றித்திரியும் நபர்களால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    சின்னமனூர்:

    தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பகல் நேரத்திலேயே போதையில் சுற்றித்திரியும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால் பயணிகள், பெண்கள் உள்ளிட்டோர் அச்சம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் தங்கள் மனைவி குழந்தைகளை பற்றி யோசிக்காமல் மிதமிஞ்சிய போதையில் பல்வேறு பகுதியில் மயங்கி விழுகின்றனர்.

    சில நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையோரம் மயங்கி கிடக்கும் நபர்கள் விபத்தில் சிக்கும்அபாயம் உள்ளது.

    குடி போதையில் இருப்பதால் பொதுமக்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் செல்கின்ற னர். உதவிக்கு சென்றால் அவர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக தேரடி பஸ் நிறுத்தம் பகுதியில் அதிக அளவில் பள்ளி குழந்தைகள் சென்று வருகின்றனர்.

    அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் குடிபோதையில் சுற்றித்திரியும் நபர்களால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனாட்சி அம்மன் வேடத்தில் சிவகாமியம்மனை அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது.
    • இரவு 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் ஓதுவார் பாட்டு பாட மேல தாளங்களுடன் பள்ளியறை பூஜை சிவகாமி அம்மன் பூலாநந்தீஸ்வரருக்கு நடைபெற்றது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் சிவகாமிஅம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. கோவிலைச் சுற்றி வயல்வெளிகளும், கரும்புத்தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் என இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. பூலாநந்தீஸ்வரருக்கு பிரதோஷ காலங்களில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

    ஆடிவெள்ளியையொட்டி துர்க்கை அம்மன், சிவகாமிஅம்மன், பூலாநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மீனாட்சி அம்மன் வேடத்தில் சிவகாமியம்மனை அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது. இரவு 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் ஓதுவார் பாட்டு பாட மேல தாளங்களுடன் பள்ளியறை பூஜை சிவகாமி அம்மன் பூலாநந்தீஸ்வரருக்கு நடைபெற்றது.

    இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் திருவிழா நாளை கொடி யேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    • இதனை முன்னிட்டு கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார ஸ்தலமான இக்கோவிலில் ஆடிபெருந்திருவிழா சிறப்பாக கொண்டா ட ப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா நாளை கொடி யேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் வளா கத்தில் பக்தர்களு க்காக தடுப்பு வேலிகள் அமை க்கும் பணி நடந்தது. சனீஸ்வர பகவான் கோவில் ஆடி மாத சனி க்கிழ மைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வரும் பக்தர்கள் சுரபி நதியில் நீராடி காக்கைக்கு எள் சாதம் படைத்து நல்லெ ண்ணெய் விள க்கேற்றி கொடி மரத்திற்கு உப்பு, பொறி படைத்து வணங்கு வார்கள். மேலும் மூலஸ்தானத்தில் உள்ள சனி பகவானையும் வழிபாடு செய்வார்கள்.

    ஆடிமாதம் 5 சனிக்கிழமை களிலும் ஆடிப்பெருந்திரு விழா கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் பக்தர்க ளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடை பெற்றது. பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு சுகாதாரம், அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தருவது குறித்து எடுத்துரைத்தனர்.

    • போடி முந்தல் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • இறைச்சி மற்றும் காட்டு மாட்டை வேட்டையாடிய 2 பேரை கைதுசெய்தனர். மேலும் 2 துப்பாக்கிளை பறிமுதல் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அங்குள்ள மருத்துவர் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்தனர்.

    வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வேலை பார்த்த மாந்தோப்பு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அங்கு 150 கிலோ காட்டு மாட்டின் இறைச்சி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை வேட்டையாடி அதனை இறைச்சியாக விற்பனை செய்ய அவர்கள் வைத்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அவர்கள் இறைச்சி மற்றும் காட்டு மாடை வேட்டையாட பயன்படுத்திய 2 துப்பாக்கிளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் குரங்கணியைச் சேர்ந்த சன்னாசி (54), போடியைச் சேர்ந்த பெருமாள் (40) என தெரிய வரவே அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது.
    • சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது. தேனி மாவட்டம் சில்வார்பட்டி,

    ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சில்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரேசன் கடை ஒன்றில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப டோக்கனை வழங்கினார்.

    பின்னர் மகளிர் உரிமைத்தொகை பெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜூனன், சில்வார்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாராம் மற்றும் கனகமணி பி.டி.ஓ. விஜயமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சருத்துபட்டி அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
    • பலத்த காயமடைந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    திருப்பூர் சாமுண்டிபுரத்ைத சேர்ந்தவர் மணிகண்டன் (வயது49). பழ வியாபாரம் செய்து வந்தார். கேரள மாநிலத்தில்இருந்து பழம் வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    மோட்டார் சைக்கிளில் கேரளாவில் இருந்து தேனி வழியாக திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-தேனி பைபாபஸ் சாலையில் சருத்துபட்டி அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பூரில் உள்ள அவரது மகன் நவீனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெரியகுளம் தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×