என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் ஒருவர் பலி"

    • கட்டுப்பாட்டை இழந்த வேன் மற்றொரு பைக்கில் வந்தவர் மீதும் மோதி விபத்துக்கு ள்ளானது.
    • இந்த சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவர் சில்வார்பட்டியில் இருந்து தனது ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிரு ந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த வேன் முத்துப்பாண்டி மீது மோதியது. மேலும் கட்டு ப்பாட்டை இழந்த வேன் மற்றொரு பைக்கில் வந்த அறிவழகன் (38) என்பவர் மீதும் மோதி விபத்துக்கு ள்ளானது.

    இவர்கள் 2 பேரையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே முத்துப்பாண்டி இறந்து விட்டார். அறிவழ கனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×