என் மலர்tooltip icon

    தேனி

    • கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக் கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
    • தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஏத்தக் கோவில் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

    கால்நடை பராமரிப்பு  மற்றும் வேளாண்மை ஆகிய இரு தொழில்கள் கிராமப்புறங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மேலும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றிவருகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தில் கால்நடை வளர்ப்பு செல்வத்தின் குறியீடாக  திகழ்கிறது. இதனை பேணி காப்பதில் கால்நடை வளர்ப்பவர்களுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து கால்நடைகளை பாதுகாக்க பல்வேறு தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கால்நடைகளுக்கு ஏற்படும் நோயைக்  கண்டறிந்து, நோய் பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    கால்நடைகளின் முக்கியத்துவம் கருதி நடத்தப்படும் இந்த கால்நடை சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் உள்ள அனைவரும் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்ற அனைத்து விதமான கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

    கால்நடைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் பொழுது 1962 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் கால்நடைத்துறை டாக்டர்கள் தங்களது இல்லத்திற்கே வந்து தேவையான முதலுதவிகளை செய்து, கால்நடை மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அல்லது கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்று தேவையான உயர் மருத்துவ சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் அதிகளவில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. தங்கள் மாடுகள் மூலம் கறக்கப்படும் பால்களை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் தர முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முகாமில் கால்நடைகளுக்கான ஆண்மை நீக்கம், அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஸ்கேன் மூலம் பரிசோதனை, மலடு நீக்குதல், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கான சிறப்பு டாக்டர்கள் வருகை தந்து தங்களது கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை இங்கே தீர்த்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இளங்கன்றுகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை நீக்குவதற்கான தாது உப்புகள் வழங்கப்படுகிறது. தங்கள் வளர்ப்புப் பிராணிகளை நோய் தாக்குதலின்றி எவ்வாறு வளர்ப்பது குறித்து உரிமையாளர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • மாற்றுத்திறனாளி களுக்கான மாதம் ஒருமுறை நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • மாற்று த்திறனாளி கள் தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்து பயன்பெறலாம்.

    தேனி:

    பெரியகுளம் வருவாய் கோட்ட த்திற்குட்பட்ட வட்டங்களில், வசிக்கும் மாற்று த்திறனாளி களுக்கான மாதம் ஒருமுறை நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (27ந் தேதி) தேனி வட்டாட்சியர் அலுவல கத்தில் பெரியகுளம் வருவாய் கோட்டா ட்சியர் தலைமையில் நடைபெறு கிறது.

    மாற்று த்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் இந்த கூட்டத்தில் தேனி வட்டார ப்பகுதியில் வசிக்கும் மாற்று த்திறனாளி கள் தங்கள் கோரிக்கை மனுவினை கொடுத்து பயன்பெ றலாம்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி 2024 ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது
    • பொது மக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவை யான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேனி:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்திரவின்படி, 2024 ஜனவரி 1-ஆம் நாளை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, தேனி மாவட்ட த்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி 2024 ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் சரிபார்க்க ப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்த்தல், திருத்தல் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடிகள் பிரித்தல்,

    இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். முத ற்கட்ட பணியாக 21.07.2023-முதல் 21.08.2023 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவ ரங்களை சரிபார்க்க உள்ளனர்.

    இத்திட்டத்தினை சிறப்பாக, விரைவாக மற்றும் 100 சதவீத உண்மை யாகவும், முடிக்கும் வகை யில், பொது மக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவை யான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கேட்டுக்கொ ண்டுள்ளார்.

    • பஞ்சந்தாங்கி மலை யில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது.
    • வனத்துறையினர் அதிநவீன எந்திரங்களை வரவழைத்து தீயை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்துக்கு உட்பட்டது பஞ்சந்தாங்கி மலை. இப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்கள், வன விலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்க ளாக ஆடி மாத காற்று அதிக வேகத்தில் வீசி வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பஞ்சந்தாங்கி மலை யில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ மளமளவென பரவி வருகிறது. நேற்று இரவு தொடங்கிய காட்டுத்தீ இன்றும் தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஊருக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர்.

    மேலும் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைகள் எரிந்து வருவதால் வேதனையடைந்துள்ளனர். வழக்கமாக இந்த மாதத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்யும். இதனால் காற்று அதிகமாக வீசினாலும் உடனுக்குடன் தீ பரவுவது கட்டுபடுத்தப்படும்.

    ஆனால் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை அவ்வப்போது பெய்தாலும் தீயின் வேகத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு பெய்யவில்லை. இதனால் மேலும் தீ பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    வனத்துறையினர் அதிநவீன எந்திரங்களை வரவழைத்து தீயை கட்டுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முறையான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது கொட்டக்குடி கிராமம். இந்த மலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இவர்களது முக்கிய தொழில் விவசாயமாகும். இதனால் மலை கிரா மங்களில் தங்கி தோட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மருத்துவ வசதி இல்லாததால் குரங்கணி மற்றும் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    மேலும் போக்குவரத்து வசதியும் இல்லாததால் சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அரசு துணை சுகா தார மையம் கட்டப்பட்டது.

    ஆனால் பல மாதங்கள் ஆகியும் இங்கு பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும் முைறயான பராமரிப்பு இல்லாததால் பார்த்தீனியம் செடிகள் மற்றும் புதர் மண்டி காணப்படுகிறது.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மலை கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய முதற்கட்டத்தில் 259 முகாம்கள் மற்றும் 2-ம் கட்டமாக 258 முகாம்கள் என மொத்தம் 517 முகாம்கள் நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட 259 பகுதிகளில் முதற்கட்ட விண்ணப்பதிவு முகாம்கள் 24ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்படும். பெறப்பட்ட விண்ணப்ப ங்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ் செய்தியாக வரும்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ,டோ க்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
    • மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    கொடைக்கானல் பூண்டி முதல் தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகன் அலெக்ஸ்பாண்டி(23). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடி சென்றார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

    இதனால் மனமுடைந்த அலெக்ஸ்பாண்டி தேவதானப்பட்டியில் உள்ள தனது அண்ணன்வீட்டிற்கு வந்தார். நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே விஷம்குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது.
    • லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குறைந்து கொண்டே வந்த அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று காலை 1091 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1321 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2786 மி.கனஅடியாக உள்ளது.

    கேரளாவில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயரும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையிலிருந்து 400 கனஅடி திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 49.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாவட்ட குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1895 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 76.32 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 16, தேக்கடி 12.2, சோத்துப்பாறை 4, கூடலூர், உத்தமபாளையம், சண்முகாநதிஅணை பகுதிகளில் தலா 1 மி.மீ என மழை பதிவாகி உள்ளது.

    • பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
    • நிலங்களை உழுதுவிட்டு மழையின்றி கண்மாய் மற்றும் குளங்களில் நீர் வற்றி வறண்டு கிடப்பதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து சுமார் 3 கி்,மீ தூரத்தில் உள்ளது அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்தின் திற்பரப்பு என்று அழைக்கப்படக்கூடிய நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீர் வீழ்ச்சி தடுப்பணை போடியை சுற்றியுள்ள சுமார் 15 ஆயிரம்ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

    மேலும் உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகளின் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் வரத்து பகுதியான இந்த அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சி மூலம் போடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பங்காரு சாமி குளம், செட்டிகுளம், மீனாட்சியம்மன் கண்மாய் போன்ற மிக முக்கியமான குளங்களுக்கும் கண்மாய்களுக்கும் முக்கிய நீர் வரத்து பகுதியாக விளங்குகிறது.

    இதிலிருந்து வெளியேறும் உபரி நீர் தேனி முல்லைப் பெரியாறு மூலம் வைகை அணையில் சென்று சேர்கிறது, தற்போது போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கேரள எல்லைப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.

    இதனால் பங்காரு சாமி மீனாட்சிபுரம் அருகில் உள்ள செட்டிகுளம் மற்றும் மீனாட்சி அம்மன் கண்மாய்களுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் குளங்கள் நீர் வற்றிய நிலையில் வறண்டு காட்சியளிக்கின்றன.

    இதனால் இந்த கண்மாய் மற்றும் குளங்களை நம்பி உள்ள விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் விவசாயம் செய்வதற்காக நிலங்களை உழுதுவிட்டு மழையின்றி கண்மாய் மற்றும் குளங்களில் நீர் வற்றி வறண்டு கிடப்பதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பணியில் இருந்த பவுனுத்தாய் கீழே விழுந்ந்தும் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஆனால் அந்த பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த காமராஜ் மனைவி பவுனுத்தாய் (வயது 55). இவர் கடந்த 10 வருடங்களாக முருகமலை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பணியில் இருந்த பவுனுத்தாய் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது குறித்து நிறுவனத்தின் ஊழியர் அவரது மகன் பாண்டியராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதறியடித்துக் கொண்டு பாண்டியராஜன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    ஆனால் பவுனுத்தாய் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன் தனது தாய் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, எஸ்.எஸ்.ஐ. சவுந்தரவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி, ஒரு பெண் மற்றும் 10ம் வகுப்பு மாணவன் உள்பட மாயமாகினர்.
    • அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை 9-வது வார்டு கருப்பையா தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகள் ஓவியா (வயது 19). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு வராததால் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தாய் ராதிகா கல்லூரியில் வந்து விசாரித்து உறவினர் வீடுகள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

    அதில் மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பவர்தான் கடத்திச் சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகள் பேபி ஷாலினி (21). இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி தாலுகா கரட்டுப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த சிவனாண்டி மகன் ஸ்ரீதர் (வயது 16). 10ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சிவனாண்டி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கி சில நாட்களிலேயே நின்று போனது.

    இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த 11-ந் தேதி அதிகபட்சமாக அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியது. அவ்வப்போது லேசான மழை பெய்த போதும் அணைக்கு நீர் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை.

    அதே வேளையில் பாசனத்துக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக இருந்தது.

    இன்று காலை அணையின் நீர் மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 737 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1092 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2707 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் 49.31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் குடிநீருக்காக மட்டும் 69 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1903 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 76.62 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 20.6, தேக்கடி 14.4, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அைண 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×